November 25, 2020

வாக்கிய பஞ்சாங்கம்-25-11-2020

 வாக்கிய பஞ்சாங்கம்-25-11-2020

அன்பிற்கினியவர்களே,

 

இந்த உலகத்தில்

முதலில் இருந்தது

ஒன்று தான் - அது

மெய்ஞ்ஞானம்

என்ற ஒன்று தான்

இந்த உலகத்தை

காப்பாற்றி வந்ததும்

மெய்ஞ்ஞானம்

என்று தான்

சொல்ல வேண்டும்

 

மெய்ஞ்ஞானம் தான்

இந்த உலகத்தை

இயக்கி வந்தது

எந்த காலங்களில்

எல்லாம்

மெய்ஞ்ஞானம்

இந்த உலகத்தை

இயக்கி வந்ததோ

அந்த காலங்களில்

எல்லாம்

இந்த உலகமும்

இந்த உலகத்தில்

உள்ள உயிர்களும்

நலமுடன் வாழ்ந்தது

 

மெய்ஞ்ஞானம்

நடைமுறையில்

இருந்த காலங்களில்

எல்லாம் பிரச்சினைகள்

என்ற ஒன்று

உருவாகவில்லை

பிரச்சினைகள்

உருவாகுவதற்கு

மெய்ஞ்ஞானம்

காரணம் இல்லை

என்ற காரணத்தினாலும்

பிரச்சினைகளை

மெய்ஞ்ஞானம்

உருவாக்காது என்ற

காரணத்தினாலும்

எந்த பிரச்சினையையும்

மெய்ஞ்ஞானம்

தீர்க்க வேண்டிய

அவசியம் இல்லாமல்

போய் விட்டது

 

எந்த ஒன்று

எந்த ஒன்றைத்

தோற்றுவித்ததோ

அந்த ஒன்று தான்

அந்த ஒன்றைத்

தீர்க்க முடியும்

 

எனவே

பிரபஞ்ச உற்பத்தி

முதல் இன்று வரை

மெய்ஞ்ஞானம்

அமைதியையும்

நிம்மதியையும் தான்

இந்த உலகத்தில்

உருவாக்கி இயக்கிக்

கொண்டிருந்த

காரணத்தினால்

அதனால் பிரச்சினைகளை

தீர்க்க வேண்டிய

அவசியம் இல்லாமல்

போய் விட்டது

 

ஆனால் விஞ்ஞானம்

அனைத்து

பிரச்சினைகளையும்

தீர்ப்பதற்கு

ஒரு காரணமாக

இருக்கிறது என்று

விஞ்ஞானிகளால்

சொல்லப்படுகிறது

என்றால்

பிரச்சினையை

உருவாக்கியது

விஞ்ஞானமாகத் தானே

இருக்க முடியும்

 

எந்த ஒன்று

எந்த ஒன்றை

உருவாக்கியதோ

அந்த ஒன்றே

அந்த ஒன்றை

நீக்க முடியும்

 

எனவே, தான்
பிரச்சினைகளையும்

உருவாக்கி விட்டு

அந்த பிரச்சினைக்கு

தேவையானவற்றையும்

உருவாக்கி

வைத்திருப்பது தான்

விஞ்ஞானம்

என்பதையும்

நாம் உணர்ந்து

கொள்ள வேண்டும்.

 

ஆனால்

ஒரு முக்கியமான

விஷயத்தைத்

தெரிந்து வைத்துக்

கொள்ள வேண்டும்

மெய்ஞ்ஞானத்தை

உணர்ந்தால்

மட்டுமே பிரபஞ்ச

ரகசியங்களை

உணர்ந்து கொள்ள

முடியும்

பிரபஞ்ச ரகசியங்களை

உணர்ந்து கொண்டால்

மட்டுமே

பிரபஞ்சத்தில்

ஏற்படும் அனைத்து

பிரச்சினைகளிலிருந்தும்

நம்மை பாதுகாத்து

கொள்ள முடியும்

 

24-ம் தேதி மழை

பெய்யும் என்று

இரண்டு நாட்களுக்கு

முன்பு தான்

விஞ்ஞானத்தால்

சொல்லப்பட்டது

 

ஆனால்

ஒரு வருடத்திற்கு

முன்னால்

மெய்ஞ்ஞானத்தால்

கணிக்கப்பட்ட

வாக்கிய

பஞ்சாங்கத்தில்

24-ம் தேதி

விடிய விடிய

மழை என்று

எழுதப்பட்டிருப்பதை

பாருங்கள்

 

சார்வரி

வருஷத்திய

ஆற்காடு.கா.வெ.

சீதாராமய்யர்

சர்வ முகூர்த்த

பஞ்சாங்கம்

2020-2021-ல்

பக்கம் 42 மற்றும்

43 பார்த்தால்

கார்த்திகை

மாதம் 9-ம் நாள்

செவ்வாய்க் கிழமை

தசமி திதி

பூரட்டாதி நட்சத்திரம்

24-11-2020-ம் தேதி

சென்னையில்

விடிய விடிய

மழை என்று

பதிவு

செய்யப்

பட்டிருப்பதைப்

பார்க்கலாம்

 

இதன் மூலம்

மெய்ஞ்ஞானத்தை

உணர்ந்தால்

பிரபஞ்ச

ரகசியங்களை

உணர்ந்து

நம்மை

இந்த பிரபஞ்சத்தில்

ஏற்படக்கூடிய

பிரச்சினையில்

இருந்து

காப்பாற்றிக்

கொள்ளலாம்

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம்

 

மீண்டும்

ஒருமுறை

இதைத் தெரிந்து

கொள்ளுங்கள்

பிரபஞ்ச

ரகசியங்களைத்

தெரிந்து

கொள்ள வேண்டும்

என்றால்

மெய்ஞ்ஞான

அறிவைப்

பெற வேண்டும்

என்பதைத்

உணர்ந்து

கொள்ளுங்கள்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------25-11-2020

/////////////////////////////////////





 

 

 

 

November 23, 2020

அறிய வேண்டியவை-174

 

ஜபம்-பதிவு-666

(அறிய வேண்டியவை-174)

 

துரியோதனன் :

“துச்சாதனா………….”

 

(துச்சாதனன்

ஓடி வருகிறான்)

 

“நான் என்னுடைய

அறையில்

வைத்திருக்கும்

என்னுடைய

பகடைகளை

எடுத்து வா”

 

(என்று

கட்டளையிட்டான்

துரியோதனன்

 

துரியோதனனின்

கட்டளையை ஏற்று

துச்சாதனன் சகுனி

துரியோதனனிடம்

ஏற்கனவே கொடுத்து

வைத்திருந்த

சகுனியின்

குழந்தைகளான

பகடைகளை

எடுத்துக் கொண்டு

வந்து தன்னுடைய

அண்ணனான

துரியோதனனிடம்

கொடுத்தான்)

 

துரியோதனன் :

“சித்தப்பா

விதுரர் அவர்களே

என்னுடைய

பகடைகளை

அஸ்தினாபுரத்தின்

பகடைகளை

நான் என்னுடைய

மாமாவிற்கு

கொடுப்பதில்

தங்களுக்கு

எந்தவிதமான

ஆட்சேபணையும்

இல்லையே”

 

விதுரர் :

“நான் ஏற்கனவே

சொல்லி விட்டேன்

எனக்கு

எந்தவிதமான

ஆட்சேபணையும்

இல்லை”

 

(துரியோதனன்

தன்னுடைய கையில்

இருந்த பகடைகளை

தன்னுடைய மாமா

சகுனியிடம்

கொடுத்தான்

அதனைப் பெற்றுக்

கொண்ட சகுனி

தன்னுடைய கைகளில்

தன்னுடைய

பகடைகளை

வைத்துக் கொண்டு

அதனையே பார்த்தார்

 

சகுனியின்

குழந்தைகளான

சகுனியின்

பகடைகளே

சகுனியின்

கைகளுக்கு

வந்து சேர்ந்தது

 

அந்த பகடைகளை

கைகளில்

வைத்துக் கொண்டு

சிரிப்புடன்

விதுரரைப்

பார்த்தான் சகுனி.

 

சகுனி சிரித்த

சிரிப்பின் அர்த்தம்

விதுரருக்கு

மட்டுமில்லை

அந்த அவையில்

இருந்த யாருக்கும்

தெரியவில்லை.

 

ஆனால்

துரியோதனனும்,

கர்ணனும்

சகுனியின்

இந்த சிரிப்புக்கு

என்ன அர்த்தம்

என்பதைத்

தெரிந்து

கொண்டனர்

 

சரித்திரத்தை

மாற்றியமைக்கப்

போகும் பகடை

விளையாட்டானது

சகுனியின்

குழந்தைகளான

பகடையுடன்

தொடங்க

ஆயத்தமாகியது.

 

சகுனியின் கைகளில்

இருந்த பகடையானது

தரையில்

உருளத் தொடங்கியது

வருங்காலத்தில்

பல பேர்களுடைய

தலைகள் உருளப்

போவது தெரியாமல்

 

சகுனியின் பகடைகள்

மூலம் சரித்திரத்தை

மாற்றியமைக்கப்போகும்

நிகழ்வானது

நடக்கத்

தொடங்கியது )

 

அறிய வேண்டியவை :

“இந்த கதையின்

மூலம் நாம்

அறிய வேண்டியது

என்னவென்றால்  

நாம் எந்த

செயலைச்

செய்தாலும்

அந்த செயலைச்

செய்வதற்கு

முன்னர்

அந்த செயலைத்

தடுக்கக் கூடிய

எதிரி யார்

என்பதையும்

எதிரி எத்தகைய

வார்த்தைகளை

பேசுவான்

என்பதையும்

எதிரி எத்தகைய

செயல்களைச்

செய்வான்

என்பதையும்

அறிந்த பிறகே

எதிரியை எதிர்த்து

செயலில்

இறங்க வேண்டும்.

அப்படி செய்தால்

தான் நாம்

செய்யும் செயலில்

வெற்றி

பெற முடியும்

யோசிக்காமல்

களத்தில்

இறங்கினால்

இழப்புகளும்

கவலைகளும்

தான் நமக்கு

ஏற்படும்

என்பது தான்

இந்த கதையின்

மூலம் நாம்

அறிய வேண்டிய

உண்மை ஆகும்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-173

 ஜபம்-பதிவு-665

(அறிய வேண்டியவை-173)

 

யோசிக்காமல்

களத்தில்

இறங்கினால்

இழப்புகளும்

கவலைகளும் தான்

நமக்கு ஏற்படும்

என்று சகுனி

சொன்னது

கர்ணனுடைய

நினைவிற்கு

வந்தது.

 

எதிரியை

வீழ்த்துவதற்கு

சகுனி மேற்கொண்ட

நடவடிக்கைகளை

நினைத்து

வியந்து நின்றான்

 

சகுனியின்

அபார

அறிவுத்

திறனைக்

கண்டு

ஆச்சரியத்தில்

நின்றான்

 

சகுனியைப்

பார்த்தபடியே

நின்று

கொண்டிருந்தான்

கர்ணன்

 

சரித்திரம்

கண்டிராத

ஒரு மாபெரும்

அறிவாளியான

சகுனி அந்த

அவையில்

தன்னந்தனியாக

அனைவரையும்

எதிர்த்து நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

சகுனி

எந்தவிதமான

அச்சமும்

இல்லாமல்

அந்த அவையில்

உள்ள

அனைவரையும்

தைரியமாக

எதிர்த்து நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

அனைவருக்கும்

எதிராக ஒரே

ஒரு ஆளாக

யோசித்து

செயல்பட்டுக்

கொண்டு

சகுனி நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்.

 

உலகத்திலேயே

சிறந்த

அறிவாளிகள் என்று

சொல்லப்படக்

கூடியவர்களும்,

வீரர்கள் என்று

சொல்லப்படக்

கூடியவர்களும், 

திறமைசாலிகள்

என்று

சொல்லப்படக்

கூடியவர்களும்,

நிறைந்திருந்த

அந்த அவையில்

உள்ளவர்கள்

யாராலும்

செய்ய முடியாத

செயல்களை

சகுனி நிகழ்த்திக்

காட்டிக் கொண்டு

நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

இந்த உலகத்தால்

உணர்ந்து கொள்ள

முடியாத

இந்த உலகத்தால்

அறிந்து கொள்ள

முடியாத

இந்த உலகத்தால்

தெரிந்து கொள்ள

முடியாத

ஒரு மாபெரும்

அறிவாளியாக

சகுனி நின்று

கொண்டிருப்பதைக்

கண்டான் கர்ணன்

 

அவனுடைய

சிந்தனை

ஓட்டத்தை

தடை செய்யும்

வகையில்

என் மாமாவிற்கு

நான் இருக்கிறேன்

என்ற சத்தம்

கேட்டது

 

உணர்வு வந்தவனாய்

சத்தம் வந்த

திசையை நோக்கி

திரும்பினான்

துரியோதனன்

பேசத்

தொடங்கினான்)

 

துரியோதனன் :

“என்னுடைய

மாமாவிற்கு

நான் இருக்கிறேன்”

 

“அஸ்தினாபுரத்தின்

பகடைகள்

இருக்கிறது”

 

“அதை நான் என்

மாமாவிற்கு

தருகிறேன்”

 

“அந்த பகடைகளை

தருவதற்கு

எந்த விதமான

தடையும்

கிடையாதே

சித்தப்பா

விதுரர்

அவர்களே!”

 

விதுரர் :

“அதில் எனக்கு

எந்தவிதமாக

ஆட்சேபணையும்

இல்லை”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////