June 20, 2020

திருக்குறள்-வினைவலி-பதிவு-4


       திருக்குறள்-வினைவலி-பதிவு-4

“இராமர்
தன் மேல்
உண்மையான
பக்தி கொண்டு
உண்மையான
பாசம் கொண்டு
உண்மையான
அன்பு கொண்டு
இருப்பவர்கள்
யார் என்பதை
அறிந்து கண்டு
அவர்களை
துணையாக
வைத்துக்
கொண்டால்
மட்டுமே
அவர்கள்
எந்த ஒரு
இக்கட்டான
சூழ்நிலையிலும்
தனக்கு உதவி
செய்வார்கள்  ;
பிரச்சினையைக்
கண்டு ஓடிப் போக
மாட்டார்கள்  ;
துன்பப்படும் போது
ஓடிப் போய்
ஒளிந்து கொள்ள
மாட்டார்கள் ;
தன்னுடன் கூட
இருப்பார்கள் ;
தன்னுடன் கூட
இருந்து
உயிரைக்
கொடுக்கக் கூடத்
தயங்க மாட்டார்கள்;
என்பதை உணர்ந்து
அத்தகையவர்களைத்
தான் இராமர்
தேர்ந்தெடுத்தார் ;
அத்தகையவர்கள்
தான் இராமருக்கு
துணையாக
இருந்தார்கள் ;
அவர்கள்
வாநர சேனைகள்
அதில் பலம்
பொருந்திய
சுக்ரீவன்
அனுமான்
ஜாம்பவான்
ஆகியோர்
அவருக்கு
துணையாக
இருந்தார்கள்”

“சீதையை மீட்டு
வரக்கூடிய
பிரச்சினை பெரியதாக
இருந்தபோதிலும்  ;
அந்த பிரச்சினையை
ஏற்படுத்திய
இராவணன் பலம்
பொருந்தியவனாக
இருந்தபோதிலும் ;
தன்னுடைய
வலிமையையும்
தனக்கு துணையாக
வந்த வாநர
சேனைகளின்
துணையுடன்
இராமர்
இராவணனை வீழ்த்தி
சீதையை மீட்டார்”

“வினை வலிமை
என்றால்
பிரச்சினை
எவ்வளவு வலிமை
வாய்ந்ததாக
இருக்கிறது
என்பதைப்
பார்க்க வேண்டும்
என்று பொருள்”

“தன் வலிமை
என்றால்
தன்னுடைய
தனிப்பட்ட
வலிமையைப்
பயன்படுத்தி - அந்த
பிரச்சினையைத்
தீர்க்க முடியுமா
என்று பார்க்க
வேண்டும்
என்று பொருள்”

“மாற்றான் வலிமை
என்றால்
பிரச்சினையை
ஏற்படுத்தியவனுடைய
வலிமை எவ்வளவு
என்பதைப்
பார்க்க வேண்டும்
என்று பொருள்”

“துணை வலிமை
என்றால் யாரை
துணையாக
சேர்த்துக் கொண்டால்
பிரச்சினையை
ஏற்படுத்தியவனை
வீழ்த்தி
பிரச்சினையை
தீர்க்க முடியும்
என்பதை முடிவு
செய்ய வேண்டும்
என்று பொருள்”

“பிரச்சினை மற்றும்
பிரச்சினையை
உண்டாக்கியவனையும்
ஒன்றாகப்
பார்க்க வேண்டும்”

“தன்னுடைய
வலிமையையும்
தனக்கு துணையாக
இருப்பவருடைய
வலிமையையும்
ஒன்றாகப்
பார்க்க வேண்டும்”

“பிரச்சினையின்
வலிமையை
முதலில் ஆராய்ந்து
பார்க்க வேண்டும் ;
பிரச்சினையை
ஏற்படுத்திய
எதிராளியின்
வலிமையை
பார்க்க வேண்டும் ;
தன்னால்
தனிப்பட்ட முறையில்
பிரச்சினையை
ஏற்படுத்தியவனை
வீழ்த்தி
பிரச்சினையை
தீர்க்க முடியுமா
என்று பார்க்க
வேண்டும் ;
முடியாது என்ற
சூழ்நிலை வரும்போது
நமக்காக உயிரைக்
கொடுக்கக் கூடியவரை
கண்டு பிடித்து
துணையாக்கிக்
கொள்ள வேண்டும்”

“அவ்வாறு
செய்யும் போது
தன்னுடைய
வலிமையையும்
தனக்கு துணையாக
இருப்பவருடைய
வலிமையயும்
பயன்படுத்தி
பிரச்சினையை
ஏற்படுத்தியவரை
அழித்து
பிரச்சினையைத்
தீர்க்க முடியும்
என்பதைத் தான்
திருவள்ளுவர்
வினைவலியும்
தன்வலியும்
மாற்றான் வலியும்
துணை வலியும்
தூக்கிச் செயல்
என்கிறார்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////

திருக்குறள்-வினைவலி-பதிவு-3


        திருக்குறள்-வினைவலி-பதிவு-3

“நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
நட்பை
இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று :  
“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து நட்பு
கொள்பவர்கள்”

இரண்டு :
“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நட்பு கொள்பவர்கள்”

“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து
நட்பு கொள்பவர்கள்
நம்மிடம் பொய்யாக
நட்பு கொள்பவர்கள்”

“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நட்பு கொள்பவர்கள்
நம்மிடம்
உண்மையாக
நட்பு கொள்பவர்கள்”

“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து
நட்பு கொள்பவர்கள்
ஆபத்தானவர்கள் ;
அவர்கள் நம்மிடம்
ஏதாவது ஒன்றை
எதிர்பார்த்துத் தான்
நம்மிடம் நட்பு
வைத்து
இருப்பார்கள்;”

“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நட்பு கொள்பவர்கள்
உண்மையானவர்கள் ;
அவர்கள் நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
தான் நம்மிடம்
நட்பு வைத்து
இருப்பார்கள் ;”

“யாரை
சேர்த்துக்
கொண்டால்
நமக்கு
துணையாக
இருக்கும்
என்பதை
யோசிக்க
வேண்டும்”

“தன்னலம்
கருதாது
நம்மேல்
நட்பு கொள்பவர்
யார் என்று
பார்த்துத் தான்
நட்பு கொள்ள
வேண்டும்”

“நம்மிடம்
எதையாவது
எதிர்பார்த்து
நம்மிடம்
நட்பு கொண்டு
இருப்பவர்கள்
நமக்கு
உண்மையானவர்களாக
இருக்க மாட்டார்கள் ;
நமக்கு ஒரு
பிரச்சினை
ஏற்பட்டாலோ
நமக்கு துன்பம்
ஏற்பட்டாலோ
நாம் ஒரு
கஷ்டத்தில்
இருந்தாலோ
அவர்கள் நம்மை
விட்டு ஓடி
விடுவார்கள் ;
நம்மை கண்டு
கொள்ளவே
மாட்டார்கள் ;
எனக்கு ஏகப்பட்ட
பிரச்சினை
வீட்டில் கஷ்டம்
மனக்கவலை
என்று ஆயிரம்
கதைகள்
சொல்லி விட்டு
பிரச்சினை
முடிந்தவுடன்
நல்லவர்கள்
போல் நடித்து
நீலிக்கண்ணீர்
வடிப்பார்கள் ;
அத்தகையவர்களை
நாம் அருகில்
துணையாக
வைத்துக் கொண்டால்
அவர்களால்
நமக்கு
மன வருத்தமும்
பிரச்சினைகளும்
தான் தொடர்ந்து
இருக்கும் ;
அவர்களால்
நமக்கு
எந்த விதமான
நன்மையான
பயனும்
ஏற்படாது “

“நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
நம்மிடம் நட்பு
கொண்டு நம்மிடம்
உண்மையாக
இருந்து நமக்காக
உயிரைக் கொடுக்கக்
கூடியவர்கள்
யார் என்பதை
அறிந்து
அவர்களுடன்
தான் நட்பு
கொள்ள வேண்டும் ;”

“அவர்கள் தான்
நமக்கு
ஒரு துன்பம்
வந்தாலும்
ஆபத்து வந்தாலும்
இக்கட்டான சூழ்நிலை
வந்தாலும்
நமக்காக
கூட இருந்து
அதை தீர்ப்பதற்கு
முயற்சி
செய்வார்கள்  ;
அவர்கள் தான்
நமக்காக
உயிரைக்
கொடுப்பார்கள் ;
இவர்கள் தான்
ஆபத்துக் காலத்தில்
நமக்கு உதவி
செய்வார்கள் ;”

“ஆகவே
நாம் நட்பு
கொள்ளும்
போது
நம்மிடம்
எதையும்
எதிர்பார்க்காதவர்களையே
நட்பாகக் கொள்ள
வேண்டும் “

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////

திருக்குறள்-வினைவலி-பதிவு-2


         திருக்குறள்-வினைவலி-பதிவு-2

“பாரத நாட்டிற்கும்
இலங்கைக்கும்
இடையே பாலம்
அமைக்க
வேண்டும் “

“இலங்கேஸ்வரன்
என்ற பட்டம்
பெற்று பலவித
கலைகள் கற்று
வீரத்திற்கு
இலக்கணமாக
வாழ்ந்து
கொண்டிருக்கும்
இராவணனை
வீழ்த்த வேண்டும்”

“இராவணனுக்காக
உயிரைக்
கொடுக்கக் கூடிய
நம்பிக்கையானவர்களை
வீழ்த்த வேண்டும்”

“இராவணனுடைய
படையை அழிக்க
வேண்டும்”

“இவைகள்
அனைத்தையும்
செய்தால்
மட்டுமே
இராவணனை
வீழ்த்தி
சீதையை
மீட்டு வர
முடியும்”

“இவைகள்
அனைத்தையும் 
யோசித்தால்
எதிரியின்
வலிமை மிக
அதிகமாக
இருக்கிறது”

“அதாவது
பிரச்சினையை
ஏற்படுத்திய
எதிரியின்
வலிமை மிக
அதிகமாக
இருக்கிறது “

“இதைத் தான்
மாற்றான்
வலிமை
என்கிறோம் “

“இராமர்
தன்னால்
தனித்து
இராவணனை
வீழ்த்துவது
இயலாத
காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார்;
இராமர்
தன்னால்
தன்னந்தனியாக
சீதையை மீட்டுக்
கொண்டு வர
முடியாது
என்பதை
உணர்ந்து
கொண்டார் ;”

“கடவுளாக
இருந்தாலும்
மனிதனாக
பிறந்து விட்டால்
மனிதன்
அனுபவிக்க
வேண்டியவைகளை
அனுபவித்துத்
தான் ஆக
வேண்டும்
என்பதை
இராமர்
உணர்ந்து
கொண்டார்”

“தனிப்பட்ட
முறையில்
தன்னால்
தன்னந்தனியாக
கடல் கடந்து
செல்வது என்பது
இயலாத காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார்”

“பாரத நாட்டிற்கும்
இலங்கைக்கும்
இடையே
தன்னால்
தன்னந்தனியாக
கடலில் பாலம்
அமைப்பது
என்பது
இயலாத காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார்;
வலிமை
வாய்ந்த
இராவணனுடனும்
இராவணனுக்கு
நம்பிக்கையாக
இருப்பவர்களுடனும்
இராவணனுடைய
படைகளுடனும்
போரிடுவது
என்பது
கடினமான காரியம்
என்பதை
உணர்ந்து
கொண்டார் ;”

“தன்னுடைய
வலிமை
எவ்வளவு
என்பதை
உணர்ந்து
கொள்வதைத் தான்
தன்வலிமை
என்கிறோம்”

“நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
நட்பு மிக
முக்கியம்
நமக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
நட்பு உண்மையான
நட்பாக
அமைந்து
விட்டால்
எந்த பிரச்சினையும்
நம்மால்
தீர்க்க முடியும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////