July 19, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-45



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-45

கிருஷ்ணர் தன்
மேல் வைத்துள்ள
நட்பைப் பார்த்து
வியந்து தன்
கஷ்டத்தை சொல்லி
உதவி கேட்பது
நட்புக்கு களங்கம்
விளைவிப்பது போலாகி
விடும் என்று நினைத்த
குசேலர் கிருஷ்ணரிடம்
தன் ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்கவில்லை.

தன் ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்பதன் மூலம்
நட்புக்கு களங்கம்
ஏற்பட்டு விடும்
என்று உதவி
கேட்காமல் இருக்கும்
குசேலரின்
எண்ணவோட்டத்தை
உணர்ந்த கிருஷ்ணர்
இத்தகைய
உயர்ந்த குணங்களைக்
கொண்ட நண்பனின்
நட்புக்கு உதவி
செய்ய வேண்டும்
என்று நினைத்து
ஒருபிடி அவல்
எடுத்து சாப்பிடும்போதே
குசேலருக்கே தெரியாமல்
குசேலருடைய
ஏழ்மையை போக்கினார்
கிருஷ்ணர்.


குசேலர் அன்று
இரவு முழுவதும்
கிருஷ்ணருடன்
இருந்து விட்டு
மறுநாள் காலை
கிருஷ்ணரிடம்
எந்த பொருளும்
பெறாமல்
கிளம்பிய குசேலரை
கிருஷ்ணரும்,
ருக்மணியும்
வாசல் வரை வந்து
வழியனுப்பி வைக்க
குசேலர் தன் வீடு
நோக்கி நடந்தார்.

பொருள் வேண்டும்
என்று கேட்டிருந்தால்
கிருஷ்ணர்
நிறைய செல்வம்
கொடுத்திருப்பார்
ஆனால் நான்
கிருஷ்ணரிடம் யாசித்து
எதுவும் பெறவில்லை
கேட்டுக்கூட
தானம் பெறவில்லை
என்று நினைத்த
குசேலரின் மனம்
முழுக்க கிருஷ்ணரின்
புன்னகையும்,
பேச்சுக்களும்
நட்பும் நிறைந்து
இருந்தது
கிருஷ்ணரின்
நட்பையே
நினைத்துக் கொண்டு
தன் வீட்டை
நோக்கி நடந்து சென்று
கொண்டு இருந்தார்
குசேலர்.

தன்னுடைய மனைவி
செல்வம் எங்கே
என்று கேட்டால்
என்ன சொல்வது
தன்னுடைய குடும்ப
கஷ்டத்தை நீக்க
முடியவில்லையே
என்று பலவாறாக
சிந்தித்துக் கொண்டு
தன் வீட்டை
நோக்கி நடந்து
சென்று கொண்டு
இருந்தார் குசேலர்

தன் வீடு
இருந்த இடத்தில்
மிகவும் பிரம்மாண்டமான
மாளிகை
இருப்பதைக் கண்டார்.
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட
பல்வேறுபட்ட கலைவண்ண
வேலைப்பாடுகள் கொண்ட
மிகப் பிரம்மாண்டமான
அரண்மனையை
தன் வீடு
இருந்த இடத்தில்
கண்டார்.
இது என்னுடைய வீடா
அல்லது
நான் வீடு தவறி
வந்து விட்டேனா அல்லது
பாதை மாறி
வந்து விட்டேனா என்று
சுற்றும் முற்றும்
திரும்பிப் பார்த்தார் குசேலர்,

அப்பொழுது ஒரு கூட்டம்
மேளதாள வாத்தியங்கள்
முழங்கிக் கொண்டும்
வாத்தியங்களை
இசைத்துக் கொண்டும்
பூரண கும்ப
மரியாதையுடன்
குசேலரை வரவேற்றார்கள்
குசேலருக்கு
சாமரம் வீசியும்
சந்தனம் பூசியும்
அவரை வரவேற்று
அழைத்து சென்றார்கள்

அப்போது
செல்வச் செழிப்புடன்
காணப்பட்ட
அழகான பெண் ஒருத்தி
அவர் காலில்
விழுந்து வணங்கினாள்
தீர்க்க சுமங்கலி பவ
என்று வாழ்த்திய குசேலர்
காலில் விழுந்து
வணங்கிய பெண்
எழுந்து நின்ற போது
அதிர்ந்தார்

காலில் விழுந்து
வணங்கிய பெண்
குசேலருடைய
மனைவி சுசீலை
தன்னுடைய மனைவியா
இவ்வளவு அழகாகவும்,
செல்வச் செழிப்போடும்
இருக்கிறார்  என்று
வியந்தார் குசேலர்

குசேலர் அனைவருடன்
வீட்டிற்குள் சென்றார்
வீட்டிற்குள் தந்தத்தினாலும்,
தங்கத்தினாலும் செய்யப்பட்ட
பல்வேறு விதமான
கட்டில்கள்  இருந்தன
அழகான மென்மையான
படுக்கைகள் இருந்தன
தங்கப்பிடியுள்ள சாமரங்களும்,
விசிறிகளும் இருந்தன
எங்கு பார்த்தாலும்
முத்துச் சரங்கள்
தோரணமாக தொங்கின
வீடு, மனைவி, மக்கள்
அனைவரும்
செல்வச் செழிப்புடன்
காணப்பட்டனர்.

அரண்மனை போன்ற
வீட்டில்
வீடு முழுவதும்
செல்வச் செழிப்பு
நிறைந்து இருந்தது.

----------இன்னும் வரும்
----------19-07-2018
///////////////////////////////////////////////////////////