June 05, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-18


                 நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-18

திருவள்ளுவரின்
மனைவி வாசுகி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

இராமாயணத்தை
எடுத்துக் கொண்டால்
சீதேவியை பத்தினியாக
ஏற்றுக் கொண்டோம்
சீதேவி உயர்ந்த
குலத்தில் பிறந்தவள்
ஒழுக்கம் நிறைந்த
மக்களுடன் வாழ்ந்தவள்
ஒழுக்கம் நிறைந்த
மக்களுடன் பழகியவள்
சுற்றுப்புற சூழ்நிலையும்
கெட்டுப் போவதற்கு
வாய்ப்பு ஏதுமில்லை
அதனால் சீதேவி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

மகாபாரதத்தை
எடுத்துக் கொண்டால்
திரௌபதியை பத்தினியாக
ஏற்றுக் கொண்டோம்
திரௌபதி உயர்ந்த
குலத்தில் பிறந்து
உயர்ந்த குலத்தில் வளர்ந்து
உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களை
திருமணம் செய்து கொண்டவள்
ஒழுக்கம் நிறைந்த
மக்களுடன் வாழ்ந்து பழகியவள்
சுற்றுப்புற சூழ்நிலையும்
கெட்டுப் போவதற்கு
வாய்ப்பு ஏதுமில்லை
அதனால் திரௌபதி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

சிலப்பதிகாரத்தை
எடுத்துக் கொண்டால்
கண்ணகியை பத்தினியாக
ஏற்றுக் கொண்டோம்
கண்ணகி செல்வச்
செழிப்பான குடும்பத்தில்
பிறந்தவள்
செல்வச் செழிப்பில்
வளர்ந்தவள்
உயர்ந்த குணம்
கொண்டவர்களுடன்
வாழ்ந்து பழகியவள்
சுற்றுப்புற சூழ்நிலையும்
கெட்டுப் போவதற்கு
வாய்ப்பு ஏதுமில்லை
அதனால் கண்ணகி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியமப்படுவதற்கு ஒன்றுமில்லை

வாசுகி,
சீதை,
திரௌபதி,
கண்ணகி
போன்றோர்
பத்தினியாக
இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை
ஏனென்றால் அவர்கள்
பிறந்த இடம்
வளர்ந்த இடம்
வாழ்ந்த இடம்
அத்தகைய இடம்

ஆனால் நாம்
மாதவியை பத்தினியாக
ஏற்றுக் கொள்வதில்
தயங்குகிறோம்

மாதவி
கணிகையர் குலத்தில் பிறந்தவள்
கணிகையர்களுடன் வளர்ந்தவள்
கணிகையர்களுடன் பழகியவள்
ஆனால் அவள்
மனதாலும், உடலாலும்
யாரையும் தீண்டவில்லை

கோவலனை மட்டுமே
தன் கணவனாக நினைத்தாள்
அவன் கூட
மட்டுமே வாழ்ந்தாள்
அவனையே நினைத்திருந்தாள்
வேறு ஆடவனை அவள்
நினைக்கவில்லை

கோவலன் மாதவியை
விட்டு பிரிந்து சென்ற
பிறகும் கூட
அவள் வேறு ஆடவனை
நினைக்கவில்லை
துறவறம் பூண்டாள்

அத்தகைய சிறப்புமிக்க
மாதவி வேறு
ஒருவளுடைய கணவனை
தன் கணவனாக பாவித்தாள்
என்ற காரணத்தால்
மாதவியை நாம் பத்தினியாக
ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்

நல்ல குடும்பத்தில்
பிறந்த பெண்கள்
தவறு செய்யாமல் இருந்தால்
ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை
ஆனால்
கணிகையர் குலத்தில்
பிறந்த ஒரு பெண்
பத்தினியாக இருந்தால்
அது ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

ஆமாம் மாதவி
கணிகையர் குலத்தில் பிறந்து
பத்தினியாக வாழ்ந்தவள்

நல்ல குடும்பத்தில்
பிறந்த ஒருவன்
நல்ல பழக்கவழக்கங்களுடன்
இருப்பதில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
ஆனால்
திருடனுக்கு பிறந்தவன்
திருட்டு தொழில் செய்யாமல்
நல்ல பழக்க வழக்கங்களுடன்
இருந்தால்
அது தான் ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

மாதவியும் அப்படித்தான்
கணிகையர் குலத்தில் பிறந்து
பத்தினியாக வாழ்ந்தவள்

இத்தகைய உயர்ந்த
குணங்களைப்
பெற்ற மாதவியை
நாம் பத்தினியாக
ஏற்றுக் கொள்ளாமல்
தவறு செய்து விட்டோம்
என்பதை மட்டும்
நினைவில் கொள்ள வேண்டும்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////