June 20, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-27



             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-27
  
உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டால்
கடவுளை வணங்குபவர்களை
மூன்றே மூன்று
நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : வெறியுடன்
         கடவுளை
         வணங்குபவர்கள்

இரண்டு : பயத்துடன்
          கடவுளை
          வணங்குபவர்கள்

மூன்று   :பக்தியுடன்
          கடவுளை
          வணங்குபவர்கள்

உலக அளவில்
எடுத்துக் கொண்டால்
வெறியுடன் கடவுளை
வணங்குபவர்களும்,
பயத்துடன் கடவுளை
வணங்குபவர்களும்,
எண்ணிக்கையில் அதிகம்
பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்கள்,
எண்ணிக்கையில் குறைவு
பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களை
விரல் விட்டு
எண்ணி விடலாம்

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்
தான் சார்ந்திருக்கும்
மதத்திற்காகவும்,
தான் வழிபடும்
கடவுளுக்காகவும்
எந்த கொடூரமான
செயலையும்
செய்யத்
தயங்க மாட்டார்கள்
  
வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்
தான் சார்ந்திருக்கும்
மதத்தின் உயர்வையும்
தான் வழிபடும்
கடவுளைப் பற்றியும்
மட்டும் தான்
நினைப்பார்களே தவிர
பிறரின் நலனைப்
பற்றியோ
சமுதாயத்தில்
நிலவ வேண்டிய
அமைதியைப் பற்றியோ
நினைக்க மாட்டார்கள்

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்களால்
சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும் எப்பொழுதும்
துன்பமே உண்டாகும்

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
தன்னைப் பற்றியும்
தன்னுடைய
குடும்பத்தைப் பற்றியும்
தன்னுடைய
சந்ததிகளைப் பற்றியும்
மட்டுமே நினைப்பார்கள்

தாங்கள் நன்றாக
வாழ்வதற்கும்
நிம்மதியாக வாழ்வதற்கும்
சுகமாக வாழ்வதற்கும்
என்னென்ன செயல்களைச்
செய்ய வேண்டுமோ
அந்தச் செயல்களைச்
செய்வார்கள்

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
தான், தன்னுடைய
குடும்பம்
தன்னுடைய சந்ததி
நன்றாக இருப்பதற்காக
எந்த மதத்தையும்
எந்த கடவுளையும்
பின்பற்ற தயங்க
மாட்டார்கள்
இவர்கள் தங்களைப்
பற்றி மட்டுமே நினைக்கும்
சுயநலவாதிகள்

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்களால்
சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும் எப்பொழுதும்
துன்பமே உண்டாகும்

பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்கள்
தான் சார்ந்திருக்கும்
மதத்தையும்
தான் வணங்கும்
கடவுளையும்
தன்னுடைய மதம்
சார்ந்த நூல்களையும்
தன்னுடைய மதம்
சார்ந்த சின்னங்களையும்
மட்டுமல்லாமல்
பிற மதத்தையும்
பிற கடவுள்களையும்
பிற மதம்
சார்ந்த நூல்களையும்
பிற மதம் சார்ந்த
மத சின்னங்களையும்
மதிப்பார்கள்

மற்ற மதங்களையோ
மற்ற கடவுள்களையோ
மற்ற வழிபாட்டு
சின்னங்களையோ
மற்ற மதங்களின்
வழிபாட்டு பொருட்களையோ
ஏளனம் செய்ய மாட்டார்கள்


பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களால்
சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும் எப்பொழுதும்
நன்மையே உண்டாகும்
  
வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்
பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
இச்சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும்
தேவையில்லை
பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்கள் தான்
இச்சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும் தேவை

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்களைப்
பற்றி
முதலில் பார்ப்போம்

--------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////