November 06, 2022

ஜபம்-பதிவு-896 மரணமற்ற அஸ்வத்தாமன்-28 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-896

மரணமற்ற

அஸ்வத்தாமன்-28

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அன்புக்கும்

கருணைக்கும்

வேறுபாடு

இருக்கிறதா

 

சிவன் :

இருக்கிறது

 

ஒரு மரம்

தன் மரத்தில்

உள்ள

பழங்களை

பிடித்து

வைத்துக்

கொள்வதற்குப்

பெயர்

அன்பு

அதே மரம்

பிடித்து

வைத்துக்

கொண்டு

இருந்த

பழத்திற்குத்

தேவையானவற்றை

அளிப்பதற்குப்

பெயர்

கருணை

 

அதைப்போல

இந்த

உலகத்தில்

உள்ள

அனைத்தையும்

அன்பு என்ற

ஒன்றினால்

தன்னுள் அடக்கி

பிடித்து

வைத்துக் கொண்டு

இருக்கும்

இறைவன்

இந்த

உலகத்திற்குத்

தேவையானவற்றை

கருணையினால்

அளித்துக்

கொண்டு

இருக்கிறான்

 

இத்தகைய

அன்பையும்

கருணையையும்

கொண்டவன்

தான்

இறைவன்

 

அதைப்போல

மனிதனும்

அன்பும்

கருணையும்

கொண்டவனாக

இருக்க

வேண்டும்

 

அன்பையும்

கருணையையும்

கொண்டவனை

நம்பலாம்

அன்பை

மட்டும்

கொண்டவர்களை

நம்பக்

கூடாது

 

துரோணர் :

ஐயனே

தங்களிடமிருந்து

நான்

வரத்தை

மட்டுமல்ல

அறிவையும்

பெற்றிருக்கிறேன்

 

சிவன் :

வரம்

பெறத்

தகுதியுடையவர்களுக்கு

வரத்தை

அளித்தேன்

ஆனால்

துரோணரே

நீங்கள்

வரத்துடன்

அறிவையும் பெறத்

தகுதியுடையவர்

அதனால்

உங்களுக்கு

வரத்துடன்

அறிவையும்

சேர்த்து

அளித்தேன்

 

துரோணர் :

என்னுடைய

பாக்கியம்

 

சிவன் :

நீங்கள் கேட்ட

வரத்தை

உங்களுக்கு

அளித்து

விட்டேன்

இனி

நடக்கப்

போவதை

இந்த

உலகமே

பார்க்கப்

போகிறது

 

(என்று

சொல்லி

விட்டு

சிவன்

மறைந்து

விட்டார்

வரம்

கிடைத்து

விட்ட மகிழ்ச்சியில்

துரோணர்

வீட்டிற்கு

வந்து

தன்னுடைய

மனைவி

கிருபியைப்

பார்த்து நடந்த

விஷயங்களைச்

சொன்னார்

 

கிருஷ்ணனுக்கே

சாபம்

கொடுத்தவன்

பிறக்கப்

போகிறான்

அவனை

காண்பதற்கு

தயாராகுங்கள்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-895 மரணமற்ற அஸ்வத்தாமன்-27 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-895

மரணமற்ற

அஸ்வத்தாமன்-27

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

சிவன் :

இருவருமே

கிடையாது

 

கோபம் கொண்டவர்

எப்படி ஆபத்தானவரோ

அப்படியே தான்

அன்பு கொண்டவரும்

ஆபத்தானவர் தான்

 

துரோணர் :

அன்பே கடவுள்

அன்பே சிவம்

என்கிறார்களே

 

சிவன் :

அது தவறாக

சொல்லப்பட்ட

வார்த்தை

 

தவறானவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

தவறான புரிதல்

கொண்டவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

அனுபவம்

இல்லாதவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

அன்பு கொண்டவர்கள்

தங்களுக்கு தீமை

செய்தவர்களின்

தீமையை மனதில்

கொண்டு பகையை

பகிரங்கமாக

வெளிப்படுத்தாமல்

வஞ்சத்தை மனதில்

வைத்து வளர்த்து

பழிவாங்குவதற்கான

நடவடிக்கைகளில்

யாருக்கும்

தெரியாமல்

ஈடுபடுவார்கள்

அதனை அவர்கள்

மறைவாகவே

செய்வார்கள்

யாருக்கும்

தெரியாமலேயே

செய்வார்கள்

அன்பு மட்டுமே

கொண்டவர்கள்

ஆபத்தானவர்கள்

 

ஆனால்

கோபம்

கொண்டவர்கள்

அப்படியில்லை

தங்கள் கோபத்தை

பகையை

பழி வாங்குவதை

நேரடியாக

வெளிப்படுத்துவார்கள்

 

கோபத்தைக்

காட்டுபவர்களை விட

அன்பு காட்டுபவர்கள்

ஆபத்தானவர்கள்

 

கோபத்தைக்

காட்டுபவர்களை விட

அன்பு

காட்டுபவர்களிடம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்

 

துரோணர் :

அன்பு

கொண்டவர்கள்

ஆபத்தானவர்களா

 

சிவன் :

அன்பு மட்டுமே

கொண்டவர்கள்

ஆபத்தானவர்கள்

அன்பும்

கருணையும்

கொண்டவர்கள்

ஆபத்தானவர்கள்

கிடையாது

 

அன்பு ஒருவரிடம்

தனித்து இருந்தால்

ஆபத்தானது

அன்பும் கருணையும்

ஒருவரிடம் சேர்ந்து

இருந்தால்

ஆபத்து கிடையாது

 

ஒருவரிடம்

இருக்க

வேண்டியது

அன்பு மட்டும்

கிடையாது

 

அன்பும் கருணையும்

தான் ஒருவரிடம்

இருக்க வேண்டியது

 

கடவுளிடமும்

இருப்பதும்

அன்பும்

கருணையும்

தான்

 

அன்பு மட்டுமே

கடவுள் கிடையாது

அன்பும் கருணையும்

சேர்ந்ததே கடவுள்

 

அன்பே

சிவம்

கிடையாது

அன்பும்

கருணையும்

சேர்ந்ததே

சிவம்

 

அன்பும்

கருணையும்

யாரிடம்

இருக்கிறதோ

அவனும்

கடவுளும்

ஒன்றே

 

அன்பு மட்டுமே

கொண்டவன்

நம்பத் தகுந்தவன்

கிடையாது

அன்பும்

கருணையும்

கொண்டவன் தான்

நம்பத் தகுந்தவன்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-894 மரணமற்ற அஸ்வத்தாமன்-26 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-894

மரணமற்ற

அஸ்வத்தாமன்-26

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஸ்யமந்தகமணியின்

சிறப்பம்சம் என்ன

என்று நான் தெரிந்து

கொள்ளலாமா

ஐயனே

 

சிவன் :

ஸ்யமந்தகமணி

உன்னுடைய

மகனின் நெற்றியில்

இருக்கும் வரைக்கும்

தேவர் கந்தர்வர்

மனிதர் அரக்கர்

ரிஷிகள் யட்சர்கள்

மிருகங்கள்

ஆகிய எந்த

உயிரினத்தாலும்

கொல்ல முடியாது

எந்த ஒரு

ஆயுதத்தாலோ

எந்த ஒரு திவ்ய

அஸ்திரத்தாலோ

கொல்ல முடியாது

எந்த ஒரு

நோயும் தீண்டாது

 

எளிமையாகச்

சொல்ல வேண்டும்

என்றால்

ஸ்யமந்தகமணி

உன்னுடைய மகனின்

நெற்றியில் இருக்கும்

வரைக்கும் அவனை

எந்த ஒரு உயிரினத்தாலும்

கொல்ல முடியாது

எந்த ஒரு ஆயுதத்தாலும்

கொல்ல முடியாது

எந்த ஒரு

நோயும் தீண்டாது

 

துரோணர் :

இத்தகைய

சிறப்பைப் பெற்ற

என்னுடைய மகன்

வருங்காலத்தில்

அன்பை

வெளிப்படுத்தி

நல்லவனாக

இருப்பானா

அல்லது

கோபத்தை

வெளிப்படுத்தி

கெட்டவனாக

இருப்பானா

 

சிவன் :

அன்பை

வெளிப்படுத்துபவர்களை

நல்லவர்கள் என்றும்

கோபத்தை

வெளிப்படுத்துபவர்களை

கெட்டவர்கள் என்றும்

அன்பையும்

கோபத்தையும்

வெளிப்படுத்துபவர்களை

வைத்து

நல்லவர்கள்

கெட்டவர்கள்

என்று

தீர்மானிக்கக் கூடாது

 

அன்பையும்

கோபத்தையும்

ஏற்றுக் கொண்டு

திருப்பி

கொடுப்பவர்கள்

எதை கொடுப்பார்கள்

என்பதை

வைத்துத் தான்

நல்லவர்கள்

யார்

கெட்டவர்கள்

யார்

என்பதைத்

தீர்மானிக்க

வேண்டும்

 

இரத்த சம்பந்தம்

உள்ள உறவில்

தாயும்

இரத்த சம்பந்தம்

இல்லாத உறவில்

மனைவியும்

மட்டும் தான்

அன்பை

வெளிப்படுத்தினாலும்

கோபத்தை

வெளிப்படுத்தினாலும்

ஏற்றுக் கொண்டு

அன்பை மட்டுமே

திருப்பி

கொடுப்பவர்கள்

 

மற்ற அனைவரும்

அன்பை

வெளிப்படுத்தினால்

அதை ஏற்றுக்

கொண்டு

அன்பையும்

கோபத்தை

வெளிப்படுத்தினால்

அதை ஏற்றுக்

கொண்டு

கோபத்தையும்

திருப்பி

கொடுப்பவர்கள்

 

அப்படி பார்த்தால்

தாயும் மனைவியும்

மட்டும் தான்

நல்லவர்கள்

மற்ற அனைவரும்

கெட்டவர்கள்

தானே

 

துரோணர் :

புதியதாக

இருக்கிறதே

 

சிவன் :

புதியது இல்லை

புரியாமல் இருந்ததை

புரிய

வைத்திருக்கிறேன்

புரிந்ததா

 

துரோணர் :

புரிந்து கொள்ள

முயற்சி செய்கிறேன்

 

ஏற்றுக் கொண்டு

திருப்பிக்

கொடுப்பவர்களைப்

பற்றி

சொன்னீர்கள்

வெளிப்படுத்துபவர்களில்

யார் நல்லவர்

அன்பை

வெளிப்படுத்துபவரா

கோபத்தை

வெளிப்படுத்துபவரா

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-893 மரணமற்ற அஸ்வத்தாமன்-25 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-893

மரணமற்ற

அஸ்வத்தாமன்-25

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அதர்மம் நடந்தால்

தான் நீங்கள்

சிவ அவதாரம்

எடுப்பீர்களா

 

அதர்மம் எதுவும்

இனி நடக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

சிவ அவதாரம்

எடுக்கலாமே

 

அனைவருக்கும்

நன்மைகளை

அளிப்பதற்காக

சிவ அவதாரம்

எடுக்கலாமே

 

அதற்கு

என்னுடைய

வரத்தைப்

பயன்படுத்திக்

கொள்ளலாமே

 

என்னுடைய

வரத்தைப்

பயன்படுத்தி

நீங்கள்

சிவஅவதாரம்

எடுக்கலாமே

 

சிவன் :

நான் சிவ

அவதாரம்

எடுக்க வேண்டியது

காலத்தின்

கட்டளையாகக்

கூட இருக்கலாம்

 

அதற்கான

சூழ்நிலை

தற்போது

உருவாகிக்

கூட

இருக்கலாம்

 

நீங்கள் கேட்ட

வரத்தில் உள்ள

வார்த்தைகளில்

பிரபஞ்ச ரகசியங்கள்

அடங்கிக் கூட

இருக்கலாம்

 

நடக்க வேண்டியதை

நடக்க வைப்பது

என்னுடைய

கடமையாக்

கூட இருக்கலாம்

 

துரோணர் :

சிவ அவதாரம்

எடுப்பீர்களா

 

சிவன் :

எடுக்கிறேன்

சிவ அவதாரம்

எடுக்கிறேன்

 

நான் துவாபர

யுகத்தில்

சிவ அவதாரம்

எடுக்கிறேன்

 

துரோணர் :

அப்படி என்றால்

நான் கேட்ட

வரத்தை எனக்கு

அளிப்பீர்கள்

என்று தானே

அர்த்தம்

 

சிவன் :

ஆமாம்

நீங்கள்

கேட்ட

வரத்தை

உங்களுக்கு

அளிக்கிறேன்

 

மனித குலத்தின்

கடைசி மனிதன்

இறந்த பிறகு

இறக்கக்

கூடியவனாக

நானே உங்களுக்கு

மகனாகப் பிறப்பேன்

என்ற வரத்தை

உங்களுக்கு

வரமாக

அளிக்கிறேன்

 

துரோணர் :

நான் கேட்ட

வரத்தை

வழங்கியதில்

எனக்கு

மகிழ்ச்சியே

 

இருந்தாலும்

எனக்கு நீங்கள்

மகனாகப் பிறந்து

இருக்கிறீர்கள்

என்பதை நான்

எப்படி தெரிந்து

கொள்வது

 

சிவன் :

நீங்கள் மட்டும்

இல்லை

இந்த உலகமே

தெரிந்து

கொள்ளும்

 

துரோணர் :

எப்படி

 

சிவன் :

சிவனுடைய

சிறப்பம்சமே

சிவனுடைய

நெற்றியில்

இருக்கும்

மூன்றாவது

கண் தான்

 

அந்த மூன்றாவது

கண்ணைப் போல

உங்களுக்கு பிறக்கப்

போகும் மகனுக்கும்

நெற்றியில்

ஸ்யமந்தகமணி

என்ற ஒரு

மணி இருக்கும்

 

அந்த மணி அவன்

பிறக்கும் போதே

அவனுடன் பிறந்தது

 

அதை வைத்து

நீ மட்டும் அல்ல

இந்த உலகமே

உனக்குப்

பிறந்த மகன்

சிவனின் அவதாரம்

என்பதைத் தெரிந்து

கொள்ளும்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////