January 06, 2019

திருக்குறள்-பதிவு-80


                      திருக்குறள்-பதிவு-80

ரோம் நகரம்
வந்தடைந்த
ஜியார்டானோ
புருனோ சிறையில்
அடைக்கப் பட்டார்.

ஜியார்டானோ
புருனோவை
விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட
விசாரணைக் குழுவில்
சிறப்பு வாய்ந்த
கார்டினல்கள் ,
திறமை வாய்ந்த
கிறிஸ்தவ
மதபோதகர்கள் ,
ஆகியோர் இருந்தனர்

சிறையிலிருந்து
அழைத்து வரப்பட்ட
ஜியார்டானோ புருனோ
விசாரணை
மண்டபத்தில் ,
விசாரணைக் குழு
முன்னிலையில் ,
தன்னந்தனியாக
கைதியாக நின்று
கொண்டிருந்தார்.

ரோம் நகரத்தில்
விசாரணை
மண்டபத்தில்
விசாரணை
ஆரம்பமானது

“நோலா (Nola)
என்ற நகரத்திலிருந்து
வந்திருக்கும்
தந்தை (Father)
ஜியார்டானோ
புருனோ அவர்களே ! ”

“நீங்கள் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்து
சரியானது என்றும் ;
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறானது“
என்றும் சொல்லி
இருக்கிறீர்கள்”

“இதன் மூலம்
நீங்கள் கிறிஸ்தவ
கடவுளுக்கு எதிராகவும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராகவும் ;
புனித தந்தையாக
கருதப்படும் போப்புக்கு
எதிராகவும் ;
கருத்து சொல்லி
இருக்கிறீர்கள்“

“மேலும் நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ
மதபோதனைகளுக்கு
எதிராகவும் ;
தீங்கு விளைவிக்கும்
நடவடிக்கையில்
ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப் பட்டு
இப்போது நீங்கள்
எங்கள் முன்னால்
நின்று கொண்டு
இருக்கிறீர்கள் ”

“இந்த நீதிமன்றம்
உங்களுக்கு
நல்ல முறையில்
நல்லவிதமாக
தீர்ப்பு வழங்கவே
விரும்புகிறது ”

“நீங்கள் பரிசுத்த
ஆவியின் பெயராலே
உங்களுக்காக
வாதாடுவதற்கு
யாரேனும் இருந்தால்
அவர்களை நீங்கள்
கேட்கலாம் “ என்றார்
விசாரணை அதிகாரி.

“நான் யார்
என்பதும் ;
நான் படைத்த
படைப்புகள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவை
என்பதும் ;
அவைகள் எத்தகைய
அர்த்தத்தை
கொடுக்கக் கூடியவை
என்பதும் ;
எனக்கு தெரியும் ! ”

“விசாரணையின் போது
எப்படி பேச
வேண்டும் என்ற
கலையும் ;
பேச்சு வார்த்தையை
எப்படி நடத்த
வேண்டும்
என்ற கலையும் ;
எனக்கு நன்கு தெரியும்
அதனால் எனக்காக
நானே வாதாடிக்
கொள்கிறேன்” என்றார்
ஜியார்டானோ புருனோ ! “

“ உங்களுக்காக
நீங்கள் வாதிடுவது
என்பது உங்கள்
தனிப்பட்ட உரிமை
உங்களுக்கென்று
வழங்கப்பட்ட
அந்த உரிமையை
நல்ல முறையில்
பயன்படுத்திக் கொண்டு
உங்கள் தரப்பு
வாதங்களை
நீங்கள் எடுத்து
வைக்கலாம்”என்றார்
விசாரணை அதிகாரி

“வெனிஸ் நகரத்தில்
நான் சொல்லிய
கருத்துக்கள்
கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
மன வருத்தத்தை
தந்து இருக்குமேயானால்
அதற்காக நான்
வருத்தம் தெரிவிக்கிறேன்
என்று நான்
வெனிஸ் நகரத்தில்
கேட்டுக் கொண்டும்
அதனை ஏற்றுக்
கொள்ளாமல்
ரோம் நகரம்
அழைத்து வந்து
நீதி மன்றத்தில்
விசாரணை என்ற
பெயரில் என்னை
கைதியாக நிற்க
வைத்தது மட்டுமல்லாமல்
ஒரு நீதிபதி
முன்னால் நின்று
கொண்டு நான்
விசாரிக்கப்பட வேண்டுமா…..?
ஏன் என்னுடைய
வார்த்தைகள்
உங்களுக்கு போதாதா…………….?
ஏன் அவைகளை
என்னுடைய தரப்பு
வாதங்களாக
நீங்கள் எடுத்துக்
கொள்ளக் கூடாதா ……………….?”
என்றார் ஜியார்டானோ
புருனோ ! “

---------  இன்னும் வரும்
---------  06-01-2019
///////////////////////////////////////////////////////////