June 22, 2020

திருக்குறள்-நிறைநீர-பதிவு-4


         திருக்குறள்-நிறைநீர-பதிவு-4

“நான் உனக்கு
துணையாக
இருக்கிறேன்
என்று உதவி
செய்பவர்கள்
இரண்டு
செயலான
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
என்ற இரண்டு
செயல்களைச்
செய்யாமல்
ஒரு செயலான
உதவி செய்வார்கள்”

“அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்களுடன்
உறவு
வைத்துக்
கொண்டால்
நம்மால்
எந்த ஒரு
செயலையும்
செய்ய முடியாது”

“ஏனென்றால்
இவர்கள்
உதவி செய்ய
மாட்டார்கள்
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களை
மட்டும்
தான் செய்து
கொண்டிருப்பார்கள்”

“ஆனால் ஒரு
செயலான
உதவி
செய்பவர்களை
உடன் வைத்துக்
கொண்டால்
அவர்கள்
ஒரு செயலான
உதவியைச்
செய்வார்கள்

இரண்டு
செயல்களான
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்து
கொண்டிருக்க
மாட்டார்கள்”

“இரண்டில் ஒன்று
பார்க்க வேண்டும்
என்று சொல்வது
இதைத் தான்”

“நாம் எந்த
ஒரு செயலைச்
செய்தாலும்
இரண்டு
செயல்களைச்
செய்பவர்களான
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
யார் என்பதைக்
கண்டறிந்து
அவர்களுடன்
உறவு வைத்துக்
கொள்ளக்கூடாது “

“ஒரு செயலைச்
செய்பவரான
உதவி
செய்பவருடன்
உறவு
வைத்துக்
கொள்ள
வேண்டும்”

“இதைத் தான்
இரண்டில்
ஒன்று பார்க்க
வேண்டும்
என்பார்கள்”

“நாம் இரண்டு
செயல்களான
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொண்டால்
நம்முடைய
வாழ்க்கையானது
தேய்பிறை போல
நாளும் தேயும்  

“ஆகவே இரண்டு
செயல்களைச்
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது”

“ஒரு செயலைச்
செய்பவர்களான
உதவி
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொண்டால்
நம்முடைய
வாழ்க்கையானது
வளர்பிறை போல
நாளும் வளரும் “

“ஆகவே ஒரு
செயலைச்
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொள்ள வேண்டும்”

என்பதைத் தான்
திருவள்ளுவர்

“நிறைநீர நீரவர்
கேண்மை
பிறைமதிப்
பின்நீர
பேதையார் நட்பு”

என்ற திருக்குறளின்
மூலம் விளக்குகிறார்”


-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

திருக்குறள்-நிறைநீர-பதிவு-3


              திருக்குறள்-நிறைநீ-பதிவு-3

“இந்த இரண்டு
செயலைச்
செய்பவர்கள்
ஒரு செயலான
உதவியைச் செய்ய
மாட்டார்கள்”

“ஆனால் ஒரு
செயலான
உதவி செய்பவர்கள்
இரண்டு செயலான
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்து
கொண்டிருக்க
மாட்டார்கள்”

“நாம் புதியதாக
தொழிலைத்
தொடங்கும்
போது
உதவி
செய்பவர்கள்
அறிவுரை
சொல்லிக்
கொண்டு
இருக்க
மாட்டார்கள்”

“நீ என்ன செய்ய
வேண்டும் என்று
நினைக்கிறாயோ
அந்த
செயலைச் செய்”

“புதியதாக
தொழில்
ஆரம்பித்தால்
பிரச்சினை
என்பது
ஏற்படத்தான்
செய்யும்
கவலைப்படாதே!”

“மனதால்
சோர்ந்து
விட்டால்
எந்த
செயலையும்
செய்ய
முடியாது”

“தொழிலைச்
செய்ய விடாமல்
தடுப்பவர்களுடைய
வார்த்தைகளுக்கு
முக்கியத்துவம்
கொடுக்காதே!”

“அப்படி
முக்கியத்துவம்
கொடுத்தால்
நாம் எந்த
ஒரு
செயலையும்
செய்ய
முடியாது”

“ஒரு செயலைச்
செய்ய
வேண்டும்
என்று
முடிவு
எடுத்து
விட்டால்
போராடிப்
பார்த்து விடு”

“வாழ்வா
சாவா என்று
முயற்சி செய்து
பார்த்து விடு”

“வீணர்களின்
வெட்டிப்
பேச்சுக்களை
ஒதுக்கி விடு”

“தருக்கர்களின்
வார்த்தைகளை
தள்ளி விடு”

“உதவாக்கரைகளின்
உளறல்களை
ஒதுக்கி விடு”

“தொழிலைத்
தொடங்கு
என்ன நடக்கும்
பார்த்துக்
கொள்ளலாம்”

“முயற்சியை
மட்டும் கைவிடாதே”

“நான் உனக்கு
உதவியாக
இருக்கிறேன்
என்று உதவி
செய்பவர்கள்
தொழிலைத்
தொடங்கும் போது
அறிவுரை சொல்லிக்
கொண்டு இருக்க
மாட்டார்கள்
உதவி
செய்பவர்கள்”

“தொழிலில்
நஷ்டம்
ஏற்படும் போது
குறை
சொல்லிக்
கொண்டு
இருக்க
மாட்டார்கள்
உதவி
செய்பவர்கள்”

“கவலைப்படாதே
தொழில் செய்தால்
இது எல்லாம்
இருக்கத் தான்
செய்யும்”

“தொழில் செய்தால்
ஏற்றத் தாழ்வு
இருக்கத் தான்
செய்யும்”

“தொழில் செய்தால்
லாபங்கள்
நஷ்டங்கள்
இருக்கத்தான்
செய்யும்”

“தொழில் செய்தால்
உயர்வு தாழ்வுகள்
இருக்கத் தான்
செய்யும்”

“தோல்வி கண்டு
சோர்ந்து விடாதே
துன்பம் கண்டு
துவண்டு விடாதே
கஷ்டம் கண்டு
கலங்கி விடாதே
தொடர்ந்து
போராடு
வெற்றி உன்
இருப்பிடம்
தேடி வரும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

திருக்குறள்-நிறைநீர-பதிவு-2


               திருக்குறள்-நிறைநீர-பதிவு-2

“பணம் நஷ்டம்
ஏற்பட்டால்
என்ன செய்வாய்
கடன் அதிகம்
ஏற்பட்டால்
என்ன செய்வாய்”

“நீ செய்யும்
காரியத்தால்
குடும்பம்
துன்பத்தில்
உழன்றால்
என்ன செய்வாய்
என்று அறிவுரை
என்ற பெயரில்
அவர்கள் நம்மை
காயப்படுத்துவார்கள்;”

“நம்முடைய
மனதை
வருத்தப்பட
வைப்பார்கள் ;”

“நம்முடைய
தைரியத்தை
வலுவிழக்கச்
செய்வார்கள் ;”

“நம்முடைய
உள்ளத்தை
கலக்கம் அடையச்
செய்வார்கள் ;”

“நம்முடைய
நெஞ்சத்தைப்
பிளப்பார்கள்;”

“அவர்கள்
சொல்லும்
வார்த்தைகள்
பாம்பு கொத்துவது
போல் இருக்கும்”

“இதை எல்லாம்
கடந்து
நாம் பல்வேறு
கஷ்டங்களையும்
கடந்து கடுமையாக
உழைத்து
தொழிலைச் செய்து
கொண்டிருக்கிறோம் “

“தொழில்
நன்றாக சென்று
கொண்டிருக்கிறது ;
தொழில் நன்றாக
சென்று
கொண்டிருக்கும்
வரை அமைதியாக
இருக்கும்
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள் ;
தொழில் சற்று
கஷ்டமான நிலைக்கு
தள்ளப்பட்டு
கடன் வாங்கி
செய்யக்கூடிய நிலை
வரும் போது
குறை சொல்ல
ஆரம்பித்து விடுவார்கள்”

“நன்றாக தொழில்
செய்த போது
பாராட்ட வராமல்
பொறாமையால் மனம்
வெதும்பியவர்கள்
தொழிலில் நஷ்டம்
ஏற்பட்ட போது
ஓடி வருவார்கள்”

“நான் அப்போதே
சொன்னேன்”

“இது எல்லாம்
உனக்கு
தேவையா என்று”

“நீ என்னுடைய
பேச்சை
கேட்கவில்லை;

நீ என்னுடைய
பேச்சை
மதிக்கவில்லை ;”

“என்னுடைய
பேச்சை
கேட்டிருந்தால்
இத்தகைய ஒரு
நிலை உனக்கு
ஏற்பட்டிருக்காது”

“என்னுடைய
பேச்சை கேட்டால்
வாழ்க்கையில்
நன்றாக
இருப்பார்கள்”

“என்னுடைய
பேச்சை
கேட்டவர்கள்
அனைவரும்
வாழ்க்கையில்
நன்றாக
இருக்கிறார்கள்”

“என்னுடைய
பேச்சை
கேட்காதவர்கள்
தான் வாழ்க்கையில்
நன்றாக இல்லை”

“நீயும் என்னுடைய
பேச்சை
கேட்கவில்லை”

“உன்னுடைய
இந்த நிலைக்கு
என்னுடைய
பேச்சை
கேட்காததே
காரணம்”

“என்று வசைமாரி
பொழிந்து
குறை சொல்வார்கள்”

“அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
புதிய தொழிலைத்
தொடங்கும் போது
அறிவுரை
சொல்வார்கள்
தொழிலில்
நஷ்டம் ஏற்படும்
போது குறை
சொல்வார்கள்
இந்த இரண்டு
செயலைத் தான்
செய்வார்கள் “

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////