January 08, 2019

திருக்குறள்-பதிவு-81


                        திருக்குறள்-பதிவு-81

"Father Bruno……….!
நீங்கள் இந்த
நீதிமன்றத்தில்
ஒரு குற்றவாளியாக
குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள் !
உங்கள் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களுக்கு பதில்
சொல்வதற்கு மட்டுமே
உங்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது !
எதிர்த்துக் கேள்வி
கேட்பதற்கு உங்களுக்கு
எந்தவிதமான அனுமதியும்
வழங்கப்படவில்லை
என்பதை முதலில்
நீங்கள் தெரிந்து
கொள்ளுங்கள்…………..! “

" பல குற்றங்களுக்கு
காரணமானவர் நீங்கள் !
குற்றவாளி என்று
சொல்வதற்கு முழுத்
தகுதியுடையவர் நீங்கள் !
ஒரு குற்றவாளி எங்களைப்
பார்த்து எப்படி கேள்விகள்
கேட்க முடியும்…………………! "

"கேள்விகள் கேட்கும்
அதிகாரம் எங்களிடம்
மட்டுமே உள்ளது
கேட்கும் கேள்விகளுக்கு
மட்டுமே பதில்
சொல்லுங்கள் என்றார்
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori) “

"உங்கள்மேல் குற்றம்
சுமத்தி உங்களை
குற்றவாளி என்று
நிரூபிக்க பல்வேறு
விதமான ஆதாரங்கள்
உள்ளன "

"நீங்கள் எழுதிய
அறிக்கைகள் ;
வெனிஸ் நகரத்தில்
நடத்தப்பட்ட விசாரணையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
நீங்கள் அளித்த பதில்கள் ;
நீங்கள் எழுதியுள்ள
புத்தகங்கள் ;
மற்றும் பைபிளில்
ஆண்டவரால் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
நீங்கள் சொல்லியுள்ள
கருத்துக்கள் ; ஆகிய
அனைத்தையும் நாங்கள்
ஆராய்ந்து பார்த்ததில்
ஒரே ஒரு விஷயம்
மட்டும் தெள்ளத்
தெளிவாக விளங்குகிறது "

"அதாவது நீங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிரானவர்
என்பதும் ;
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்பதும் ;
கிறிஸ்தவ மத
நம்பிக்கைக்கு
எதிரானவர் என்பதும் ;
தெளிவாகிறது "
என்றார் விசாரணைக்குழு
கார்டினல்களில் ஒருவர் “

"எனக்கு இயேசு
கிறிஸ்துவின் மீதும்
கிறிஸ்தவ மதத்தின்
மீதும் நம்பிக்கை
உண்டு ஆனால்
கிறிஸ்தவ மதத்தில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
நம்பிக்கைகளின் மேல்
நம்பிக்கை கிடையாது"

"நான் ஒரு தத்துவவாதி
நான் ஒரு மிகப்பெரிய
தத்துவ அறிஞனும்
கிடையாது : மிகப்பெரிய
விஞ்ஞானியும் கிடையாது :
தத்துவமும், விஞ்ஞானமும்
எனக்குப் பிடிக்கும் :
த‘த்துவமும், விஞ்ஞானமும்
என்ன சொல்கிறதோ
அதை பேசினேன் :
அது உங்களுக்கு
பிடித்து இருந்தால்
ஏற்றுக் கொள்ளுங்கள் :
பிடிக்கவில்லை என்றால்
விட்டு விடுங்கள்  :
அப்படி செய்யாமல்
என்னை கைது பண்ணி
குற்றவாளியாக்க ஏன்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள்…………….? "

"நான் தத்துவமாகவும்,
விஞ்ஞான ரீதியாகவும்
பேசிய பேச்சுக்களையும்       
கண்டு பிடித்து சொன்ன
கருத்துக்களையும் கிறிஸ்தவ
மதத்துடன் இணைத்து
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டான் ;
என்று குற்றம் சுமத்தி
கிறிஸ்தவ மதத்திற்கு
விரோதியாக என்னை
அடையாளப்படுத்தி ;
கிறிஸ்தவ மக்கள்
என்னை விரோதியாக
நினைக்கும்படி வைத்ததோடு
மட்டுமல்லாமல் ;
என்னை குற்றவாளி என்று
நிரூபிக்க முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள் !"
என்றார் ஜியார்டானோ
புருனோ.

" நீங்கள் எழுதிய
எழுத்துக்கள் பேசிய
பேச்சுக்கள் அனைத்தும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக இருக்கிறது
என்று ஒரு நாள்
கூட நீங்கள் நினைத்துப்
பார்த்ததில்லையா……………………..?

“ Father Bruno
நீங்கள் கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவ
குடும்பத்தில் வளர்ந்து ;
கிறிஸ்தவராக
இருந்த நீங்கள் :
கிறிஸ்தவ பழக்க
வழக்கங்கங்களைக் கற்று
கிறிஸ்தவ
மதபோதகரான நீங்கள் :
கிறிஸ்தவ மதபோதகர்களில்
சிறந்தவராகக்
கருதப்படும் நீங்கள்
ஏன் நீங்கள் சார்ந்துள்ள
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறீர்கள் ”
என்றார் விசாரணைக்
குழுவில் உள்ள
கார்டினல்களில்
இன்னொருவர்.

“ நான் மதவாதி அல்ல !
ஒரு தத்துவவாதி !!
நான் மதத்தை
பின்பற்றவில்லை ;
தத்துவத்தைத் தான்
பின்பற்றினேன் ;
நான் சொன்னது
தத்துவ ரீதியாக
சரியானது ;
நீங்கள் அதை
மத ரீதியாக
தவறு என்கிறீர்கள் ;
உங்களுக்கும் எனக்கும்
ஒரே ஒரு
வித்தியாசம் தான்
நீங்கள் மதவாதி
நான் தத்துவவாதி
அவ்வளவு தான்” என்றார்
ஜியார்டோனோ புருனோ

---------  இன்னும் வரும்
---------  08-01-2019
///////////////////////////////////////////////////////////