April 18, 2021

பதிவு-6-தேறற்க- திருக்குறள்

 பதிவு-6-தேறற்க-

திருக்குறள்

 

குறை

சொல்பவர்களுக்கு

இத்தகைய
குணங்கள் தான்

இருக்கும்

 

நாம் எந்த ஒரு

செயலைச் செய்யத்

தொடங்கினாலும்

(அல்லது)

நாம் எந்த ஒரு

செயலைச் செய்து

கொண்டிருந்தாலும்

(அல்லது)

எந்த ஒரு செயலைச்

செய்து முடித்திருந்தாலும்

அந்த செயலைப்

பற்றி குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்கள்

குறை சொல்பவர்கள்

 

நம்மீது உள்ள

பொறாமையின்

காரணமாகவும்

வயிற்றெரிச்சல்

காரணமாகவும்

நாம் செய்ய

முடியாததை

இவன் செய்து

விட்டானே

இவன் செய்த

செயலால்

வாழ்க்கையில்

உயர்ந்து விடுவானே

என்ற கெட்ட

எண்ணத்தில்

மட்டும் தான்

குறை சொல்வார்கள்

 

குறை சொல்பவர்கள்

எல்லோரும்

குறை சொல்லிக்

கொண்டு தான

இருப்பார்கள்

அவர்கள் வாழ்க்கை

முழுவதும்

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்கள்

 

நான்கு சுவற்றுக்குள்

உட்கார்ந்து கொண்டு

தொலைக்காட்சி

பார்த்துக் கொண்டு

புத்தகங்கள்

படித்துக் கொண்டு

செல்லை

நோண்டிக் கொண்டு

உலகத்திற்கு

அறிவுரை சொல்கிறேன்

என்று சொல்லிக்

கொண்டு

அனைவரையும்

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்கள்

ஆனால் களத்தில்

இறங்கி வேலை

செய்யவே

மாட்டார்கள்

 

இவர்களை

திருத்தவே முடியாது

இத்தகையவர்கள்

சொல்லும் சொற்களை

காதில் போட்டுக்

கொள்ளவே கூடாது

இவர்களுக்கு

பெருந்தன்மை என்பது

துளியும் இருக்காது

மற்றவர்களை

மட்டம் தட்டுவதிலேயே

காலத்தை

செலவழிப்பார்கள்

செயலில் இறங்கி

எதையும் செய்ய

மாட்டார்கள்

எதையும் பேசிக்

கொண்டு தான்

திரிவார்கள்

தற்பெருமை பேசிக்

கொண்டு

அலைவார்கள்

 

இத்தகைய

தன்மைகளைக்

கொண்ட

இவர்களுடைய

வார்த்தைகளை

புறந்தள்ளி விட்டு

நாம் நம்முடைய

கடமையை சரிவர

செய்து கொண்டே

இருப்போமேயானால்

நாம் வாழ்க்கையில்

உயர்ந்த நிலைகளை

அடைந்து விடுவோம்

 

நாம் உயர்ந்த

நிலைகளை

அடைந்த பிறகு

திரும்பிப் பார்த்தால்

நம்மை குறை

சொன்னவர்

அந்த இடத்திலேயே

நின்று கொண்டு

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்

வாழ்க்கையில்

முன்னேறாமல்

அதே இடத்தில்

நின்று கொண்டு

குறை சொல்லிக்

கொண்டு தான்

இருப்பார்

 

நாம் எந்த ஒரு

செயலை செய்யத்

தொடங்கினாலும்

(அல்லது)

நாம் எந்த ஒரு

செயலைச் செய்து

கொண்டிருந்தாலும்

(அல்லது)

நாம் எந்த ஒரு

செலையும் செய்து

முடித்திருந்தாலும்

அது சம்பந்தமாக

உதவி செய்பவர்கள்

அறிவுரை சொல்பவர்கள்

குறை சொல்பவர்கள்

ஆகியோர்

நமக்கு முன்னால்

வந்து பேசினாலோ

(அல்லது)

உதவி செய்கிறேன்

என்று சொன்னாலோ

அந்த செயல்கள்

நமக்கு நன்மைகளைத்

தரக்கூடியவைகளா

இருக்கிறதா

என்பதை முதலில்

ஆராய வேண்டும்.

நன்றாக ஆராய்ந்த

பிறகு அவைகளில்

எவைகள் நமக்கு

நன்மைகளைத்

தரக்கூடியவை

என்பதை உணர்ந்து

அவைகளை மட்டும்

செயல்படுத்த வேண்டும்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

“””தேறற்க

யாரையும் தேராது

தேர்ந்தபின்

தேறுக தேறும்

பொருள்”””””

 

என்ற

திருக்குறளின் மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

-------சுபம்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

-------18-04-2021

//////////////////////////////////////////

பதிவு-5-தேறற்க- திருக்குறள்

 பதிவு-5-தேறற்க-

திருக்குறள்

 

அறிவுரை

சொல்பவர்களின்

அனுபவங்களை

கேட்டுக் கொண்டு

நமக்கும் இப்படித் தான்

நடைபெறும் என்று

நாமும் நினைத்து

விட்டால் நம்மால்

நம்முடைய

வாழ்க்கையில் - எந்த

ஒரு செயலையும்

செய்ய முடியாது

 

யார் எந்த

அறிவுரைகளை

வழங்கினாலும் சரி

(அல்லது)

இந்த உலகமே

திரண்டு வந்து

அறிவுரை

வழங்கினாலும் சரி

அவர்கள் சொல்லும்

அனைத்து

அறிவுரைகளையும்

கேட்டாலும் நாம்

எடுக்கும் முடிவே

இறுதி முடிவாக

இருக்க வேண்டும்.

 

அதனால் யார்

சொன்னாலும்

அறிவுரையைக்

கேட்டுக் கொள்ளுங்கள்

அதனை பின்பற்ற

வேண்டுமா

(அல்லது)

பின்பற்ற

வேண்டாமா

என்பதை நாம்

தான் முடிவு

செய்ய வேண்டும்

 

மூன்று :

“குறை சொல்பவர்கள்”

 

அறிவுரை

சொல்பவர்களுக்கும்

குறை

சொல்பவர்களுக்கும்

ஒரே ஒரு

வித்தியாசம்

தான் உண்டு

 

அறிவுரை சொல்பவர்கள்

நாம் நன்றாக

இருக்க வேண்டும்

என்ற காரணத்திற்காக

அறிவுரை

சொல்வார்கள்

ஆனால்

குறை சொல்பவர்கள்

நாம் நன்றாக

இருக்கிறோமே

என்ற காரணத்திற்காக

குறை சொல்வார்கள்

 

குறை சொல்பவர்களும்

அறிவுரை

சொல்பவர்களைப் போல்

களத்தில் இறங்கி

வேலை செய்ய

மாட்டார்கள்

பேச்சோடு நிறுத்தி

கொள்வார்கள்

 

குறை சொல்பவர்கள்

இரண்டு காரணத்திற்காக

மட்டும் தான்

குறை சொல்வார்கள்

 

தன்னால் செய்ய

முடியாததை நாம்

செய்து விட்டோமே

என்ற பொறாமையினால்

குறை சொல்வார்கள்

நாம் செய்த செயலால்

நாம் வாழ்க்கையில்

உயர்ந்து விடுவோமோ

என்ற காரணத்திற்காக

குறை சொல்வார்கள்

 

குறை சொல்பவர்கள்

மிகவும் ஆபத்தானவர்கள்

அவர்களை அருகிலேயே

சேர்க்காமல் இருப்பது

நம்முடைய

வாழ்க்கைக்கும் நல்லது

நம்முடைய

குடும்பத்திற்கும் நல்லது

நம்முடைய

முன்னேற்றத்திற்கும்

நல்லது

 

நாம் வாழ்க்கையில்

நன்றாக இருக்க

வேண்டும் என்றால்

நாம் வாழ்க்கையில்

முன்னேற வேண்டும்

என்றால்

நாம் வாழ்க்கையில்

நினைத்ததை

அடைய வேண்டும்

என்றால்

குறை சொல்பவர்களின்

வார்த்தைகளை

மதிக்கவே கூடாது

 

குறை சொல்பவர்கள்

கெட்ட எண்ணம்

கொண்டவர்களாக

இருப்பார்கள் ;

தன்னை விட

உயர்ந்தவர்கள் யாரும்

இல்லை என்று

நினைப்பவர்களாக

இருப்பார்கள் ;

தங்களை விட

திறமைசாலி

யாரும் இல்லை

என்ற சிந்தனை

கொண்டவர்களாக

இருப்பார்கள் ;

தன்னைப் பற்றியும்

தன்னுடைய குடும்ப

நலத்தைப் பற்றியும்

தன்னுடைய

சந்ததிகளைப்

பற்றியும் மட்டுமே

நினைக்கும் சுயநலம்

மிக்கவர்களாக

இருப்பார்கள் ;

யாரையும் மதித்து

நடக்க மாட்டார்கள் ;

அவர்களை

மதிப்பவர்களையும்

அவமானப் படுத்தும்

விதத்தில் நடந்து

கொள்வார்கள் ;

யாருடைய பேச்சுக்கும்

மரியாதை கொடுக்க

மாட்டார்கள் ;

யாருடைய பேச்சையும்

கேட்டு நடக்க

மாட்டார்கள் ;

பிறருடைய

திறமைக்கு மதிப்பு

கொடுக்க மாட்டார்கள் ;

பிறருடைய

உணர்வுகளுக்கு

மதிப்பு கொடுக்க

மாட்டார்கள் ;

நல்லவர்களாக

நடிப்பார்கள் ;

தங்களை இந்த

சமுதாயத்தில்

நல்லவர்களாக

காட்டிக் கொள்வார்கள் ;

உண்மை பேசுபவர்களாக

நடிப்பார்கள் ;

பிறருக்கு உதவிகள்

செய்வதாக நடிப்பார்கள் ;

அன்பு செய்வதாக

நடிப்பார்கள் ;

இரக்க சுவாவம்

உள்ளவர்களாக

தங்களை காட்டிக்

கொள்வார்கள் ;

கருணை உள்ளம்

கொண்டவர்களாக

தங்களை

வெளிப்படுத்திக்

கொள்வார்கள் ;

ஆணவத்தால்

ஆடுபவர்களாக

இருப்பார்கள் ;

சுருக்கமாகச்

சொல்ல வேண்டும்

என்றால்

குறை சொல்பவர்கள்

தங்களை விட

உயர்ந்தவர்கள் யாரும்

இல்லை என்ற

எண்ணம்

கொண்டவர்களாக

இருப்பார்கள்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

-------18-04-2021

//////////////////////////////////////////

பதிவு-4-தேறற்க- திருக்குறள்

 பதிவு-4-தேறற்க-

திருக்குறள்

 

இரண்டு :

“அறிவுரை சொல்பவர்கள்”

 

அறிவுரை சொல்பவர்கள்

களத்தில் இறங்கி

வேலை செய்யாதவர்கள்

பேச்சில் மட்டும்

அறிவுரை சொல்பவர்கள்

பேசுவதோடு நிறுத்தி

கொள்பவர்கள்

 

அறிவுரை சொல்பவர்கள்

அனைவருமே

தாங்கள் புத்தகத்தில்

படித்ததையும் ;

தாங்கள்

கேள்விப் பட்டதையும் ;

தங்கள் வாழ்க்கையில்

நடந்ததையும் ;

தன்னைச் சுற்றி

வாழ்பவர்களுடைய

வாழ்க்கையில்

நடந்ததையும்;

தனக்கு தெரிந்தவர்கள்

வாழ்க்கையில்

நடந்ததையும் ;

தனக்கு தெரியாதவர்கள்

வாழ்க்கையில்

நடந்ததையும் ;

அடிப்படையாக

வைத்துத் தான்

அறிவுரை

சொல்வார்கள்.

 

ஒரு நிகழ்ச்சியின்

விளைவானது

இடம்

காலம்

சூழ்நிலை

தொடர்பு

கொள்ளும் பொருள்

தொடர்பு           

கொள்ளும் மனிதர்

கர்மவினை

ஆகியவற்றைப்

பொறுத்து தான்

நடைபெறும்

 

அன்று ஒருவருடைய

வாழ்க்கையில்

நடந்த நிகழ்ச்சியும்

இன்று நம்முடைய

வாழ்க்கையில்

நடைபெற்றுக்

கொண்டிருக்கின்ற

நிகழ்ச்சியும்

ஒரே மாதிரியாக

இருக்கின்ற

காரணத்தினால்

நிகழ்ச்சியின்

விளைவும் ஒரே   

மாதிரியாகத் தான்

இருக்கும் என்று

நினைக்கக் கூடாது

நிகழ்ச்சிகள்

அனைத்தும்

ஒரே மாதிரியாக

இருந்தாலும்

விளைவுகள்

வெவ்வேறாகத்

தான் இருக்கும்

             

இந்த உண்மையினை

உணராமல் வேறு

ஒருவருடைய

வாழ்க்கையில்

நடந்த நிகழ்ச்சியும்

நம்முடைய

வாழ்க்கையில்

நடைபெற்றுக்

கொண்டிருக்கின்ற

நிகழ்ச்சியும்

ஒரே மாதிரியாக

இருப்பதால்

இதனை கவனித்துக்

கொண்டிருக்கும்

அறிவுரை சொல்பவர்கள்

நிகழ்ச்சிகள்

ஒரே மாதிரியாக

இருப்பதால்

விளைவும் 

ஒரே மாதிரியாகத்

தான் இருக்கும்

என்று தவறான

எண்ணம் கொண்டு

அறிவுரை சொல்வார்கள்

அறிவுரை சொல்பவர்கள்

 

நாம் ஒரு செயலில்

ஈடுபடும் போது

அறிவுரை

சொல்பவர்கள்

அவர் வாழ்வில் கற்ற

(அல்லது)

அவர் வாழ்வில் பெற்ற

நிகழ்ச்சியின்

விளைவை

வைத்துத் தான்

அறிவுரை சொல்வார்கள்

 

ஒரு காலத்தில்
தோல்வியில் முடிந்த

நிகழ்ச்சியின்

விளைவானது

இன்னொரு காலத்தில்

வெற்றி அடையும்

ஒரு காலத்தில்

வெற்றியில் முடிந்த

நிகழ்ச்சியின்

விளைவானது

இன்னொரு காலத்தில்

தோல்வி அடையும்

எல்லா காலத்திலும்

நிகழ்ச்சியின்

விளைவானது

வெற்றி பெறும்

என்றோ

தோல்வி அடையும்

என்றோ சொல்ல

முடியாது

ஏனென்றால்

நிகழ்ச்சியின்

விளைவானது

எல்லா காலத்திலும்

ஒரே மாதிரியாக

இருக்காது

இருக்க முடியாது

மாறிக் கொண்டே

இருக்கும்

 

ஒரு நிகழ்ச்சியின்

விளைவானது

இடம்

காலம்

சூழ்நிலை

தொடர்பு

கொள்ளும் பொருள்

தொடர்பு           

கொள்ளும் மனிதர்

கர்மவினை

ஆகியவற்றைப்

பொறுத்து

மாறிக் கொண்டே

இருக்கும்

ஒரே மாதிரியாக

இருக்காது என்பதை

உணராமல் இருக்கும்

அறிவுரை சொல்பவர்கள்

நிகழ்ச்சியின்

விளைவை

அடிப்படையாக வைத்து

அதை அனுபவமாக

கருதிக் கொண்டு

அறிவுரை சொல்லிக்

கொண்டு இருப்பார்கள்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

-------18-04-2021

//////////////////////////////////////////