June 21, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-28



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-28

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்

பிற மதத்தவர்கள்
ஒன்றாகக் கூடி
வழிபாடு செய்யும்
வழிபாட்டுத்
தலங்களை அழிப்பது
இடித்து தரைமட்டமாக்கி
இல்லாமல் செய்வது
எரித்து இருந்த
இடம் தெரியாமல்
ஆக்குவது
பிற மதத்தவர்களின்
வழிப்பாட்டுத் தலங்களை
கைப்பற்றி
தங்கள் வழிபாட்டுத்
தலங்களாக மாற்றிக்
கொள்வது போன்ற
செயல்களையும்

பிற மதத்தவர்கள்
புனிதமாக் கருதும்
வழிபாட்டு
பொருட்களை எரிப்பது
வழிபாட்டுச் சின்னங்களை
இழிவு படுத்துவது
வழிபாட்டு
நூல்களை அழிப்பது
போன்ற செயல்களையும்

பிற மதத்தவர்கள்
வழிபாடு செய்யும்
கடவுள் உருவங்களை
சிதைப்பது
இழிவு படுத்துவது
அழிப்பது
போன்ற செயல்களையும்

பிற மதத்தின்
தெய்வங்களை வழிபாடு
செய்பவர்களின்
தலையை வெட்டுவது
கழுவேற்றி கொல்வது
உயிருடன் எரிப்பது
தூக்கிலிடுவது
துப்பாக்கியால் சுட்டுக்
கொல்வது
போன்ற செயல்களையும்
செய்வார்கள்

இத்தகைய
நினைத்து கூட
பார்க்க முடியாத
கொடுமையான செயல்களை
எந்தவித அச்சமுமின்றி
செய்து தாங்கள்
சார்ந்திருக்கும் மதத்தை
நிலைநிறுத்த
முயற்சி செய்வது
வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்
செய்யும் செயலாகும்.

அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
உலகில் நடைபெற்ற
வரலாறுகளை எடுத்துக்
கொண்டாலும் சரி
இந்தியாவில் நடைபெற்ற
வரலாறுகளை எடுத்துக்
கொண்டாலும் சரி
தமிழ்நாட்டில் நடைபெற்ற
வரலாறுகளை எடுத்துக்
கொண்டாலும் சரி
தங்கள் மதத்தை
நிலைநாட்ட
தங்கள் கடவுளை
வணங்க வைக்க
பிற மதம் மற்றும்
கடவுளை அழிப்பதை
குறிக்கோளாகக் கொண்டு
செயல்பட்டவர்கள்
கடவுளை வெறியுடன்
வணங்கியவர்கள்
என்பது தெளிவாகும்

தங்கள் மதத்தை
பிறரை பின்பற்றச் செய்ய
தங்கள் கடவுளை
பிறரை வணங்க வைக்க
உலக அளவில்
மூன்று வழிமுறைகள்
வரிசையாக கடை
பிடிக்கப்பட்டு
பின்பற்றப்பட்டு வருகிறது

முதலில்
தங்கள் மதத்தை
பற்றியும்
தங்கள் கடவுளைப்
பற்றியும்
மக்களிடையே சொல்லி
மதத்தையும், கடவுளையும்
பரப்ப முயற்சி செய்வார்கள்
மக்கள் நம்பவில்லை
என்றால்
இரண்டாவதாக
பிற மதத்தையும்
பிற மதத்தின்
கடவுள்களையும்
இழிவாகப் பேசுவார்கள்
இந்த முயற்சியிலும்
வெற்றி அடைய
முடியவில்லை என்றால்
மூன்றாவதாக
பிற மதத்தில்
உள்ளவர்களை
விலை கொடுத்து
வாங்குவார்கள்

மதத்தை பரப்ப
நினைப்பவர்கள்
இந்த முறையைப்
பின்பற்றித் தான்
தங்கள் மதத்தையும்
தங்கள் கடவுளையும்
பரப்பி வருகின்றனர்
என்பதை
நம்மைச் சுற்றி
நடைபெறும்
நிகழ்வுகளை வைத்து
நாம் அறிந்து
கொள்ள முடியும்

இத்தகைய நிகழ்வுகள்
அனைத்தும் கடவுளை
வெறியுடன்
வணங்குபவர்களால்
மட்டுமே
செய்யப்பட்டு வருகிறது

தன்னுடைய மதமே
உயர்ந்தது
தன்னுடைய தெய்வமே
உயர்ந்தது
பிற மதங்கள்
உயர்ந்தவை அல்ல
பிற மதத்தினுடைய
தெய்வங்கள்
உண்மையானது அல்ல
என்று சொல்பவர்கள் தான்
கடவுளை வெறியுடன்
வணங்குபவர்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்
  
பயத்துடன்
கடவுளை வணங்குபவர்கள்
இதிலிருந்து மாறுபட்டவர்கள்

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்களை
அடுத்து பார்ப்போம்

--------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////