July 20, 2022

ஜபம்-பதிவு-814 (சாவேயில்லாத சிகண்டி-148)

 ஜபம்-பதிவு-814

(சாவேயில்லாத

சிகண்டி-148)

 

சிகண்டி

உனக்காக நிறைய

கடமைகள்

காத்து இருக்கிறது

 

நீ செய்யப்போகும்

செயல்

யாராலும்

நினைத்துக் கூட

பார்க்க

முடியாத செயல்

காலம் காலமாக

இந்த உலகமே

நினைவில்

வைத்திருக்கக்

கூடிய செயல்

 

நீ கிளம்பலாம்

 

என்று

ஸ்தூணாகர்ணன்

சொன்னவுடன்

சிகண்டி

அவர் கால்களில்

விழுந்து

ஆசிர்வாதம்

பெற்று விட்டு

குதிரையின்

மேலே ஏறி

காற்றைக்

கிழித்துக்

கொண்டு

பாஞ்சால

நாட்டை

நோக்கி

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

புதிய

வரலாறு

படைக்க

சென்று

கொண்டிருந்தான்

ளசிகண்டி

 

வரலாற்றை

மாற்ற

முடியாது

என்று

சொன்னவர்களுக்கு

வரலாற்றை

மாற்ற

முடியும்

என்று

காட்டுவதற்கு

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

பீஷ்மரின்

இறுதி

யாத்திரையை

தொடங்குவதற்கு

கொடியசைக்க

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

இந்த

உலகத்தில்

உள்ள

யாராலும்

வீழ்த்த

முடியாது

என்று

சொல்லப்பட்ட

பீஷ்மனை

வீழ்த்த

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

சாகா வரம்

பெற்றவனை

சாகடிக்க

வேண்டும்

என்று வரம்

பெற்றவன்

சாகடிக்க

சென்று

கொண்டிருந்தான்

 

சிகண்டியின்

வரலாறு

ஆரம்பமாகி

விட்டது

 

சிகண்டி

செல்லும்

குதிரையின்

காலடித்

தடங்களைப்

பின்தொடருங்கள்

 

சிகண்டியின்

வரலாற்றைத்

தெரிந்து கொள்ளத்

தயாராகுங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-813 (சாவேயில்லாத சிகண்டி-147)

 ஜபம்-பதிவு-813

(சாவேயில்லாத

சிகண்டி-147)

 

சிகண்டினி :

தெரிந்தவர்களுக்கு சொல்ல

வேண்டிய அவசியம் இல்லை

தெரியாதவர்களுக்கு

ரகசியமாகத் தான்

பதில் சொல்ல வேண்டும்

 

அறிந்து கொள்ள

வேண்டும் என்ற ஆவலில்

யாரேனும் என்னை

ரகசியமாக அணுகும் போது

அந்த கேள்விக்கான

விடைகளை

நானே அவர்களுக்கு

அளிக்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

உனக்கு பேசக்கற்றுக்

கொடுக்க வேண்டிய

அவசியம் இல்லை

 

பேச்சிலும் சரி

வாள் வீச்சிலும் சரி

வில் வித்தையிலும் சரி

உன்னை வெல்வதற்கு

இந்த உலகத்தில்

யாரும் இல்லை

என்பதை அடிக்கடி

நிரூபிக்கிறாய்

 

சரி

இதற்காவது

பதில் சொல்

உனக்கு அடிக்கடி

தெரியும் காட்சிகள்

என்னவென்று தெரிந்ததா

தெரிந்தால் சொல்

 

சிகண்டினி :

தெரிந்தது

 

போன ஜென்மத்தில் நான்

அம்பையாக பிறந்தேன்

என்பதையும்

 

பீஷ்மரால் வாழ்க்கையை

இழந்தவள் என்பதையும்

 

பீஷ்மரைக்

கொல்வதற்காகவே

சிகண்டினியாக இந்த

ஜென்மத்தில் பிறப்பெடுத்து

சிகண்டியாக மாறி

பீஷ்மரைக் கொல்லப்

போகிறேன் என்பதையும்

தெரிந்து கொண்டேன்

 

சிகண்டினியிலிருந்து

சிகண்டியாக நான்

மறுபிறப்பு எடுக்கும் போது

நான் எதற்காக பிறந்தேன்

என்பதைத்

தெரிந்து கொண்டேன்

என்னுடைய பிறப்பின்

ரகசியத்தைத்

தெரிந்து கொண்டேன்

பீஷ்மரைக்

கொல்வதற்காகவே

பிறந்திருக்கிறேன்

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

ஸ்தூணாகர்ணன் :

விரும்பும் போது

தான் மரணம் என்ற

வரத்தைப் பெற்ற

பீஷ்மனை

உன்னால் கொல்ல முடியுமா

 

சிகண்டினி :

விரும்பும் போது தான்

மரணம் என்ற

வரத்தைப் பெற்ற

பீஷ்மனை

பீஷ்மனைக் கொல்வேன்

என்று சிவனிடம்

வரத்தைப் பெற்ற

என்னைத் தவிர வேறு

யாரால் பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

நான் தான்

பீஷ்மனைக் கொல்வேன்

 

இந்த உலகத்தில்

என்னால் மட்டுமே

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

வேறு யாராலும்

பீஷ்மனைக்

கொல்ல முடியாது

 

ஸ்தூணாகர்ணன் :

அப்படி என்றால்

 

சிகண்டினி :

பீஷ்மனைக்

கொல்வதற்காக நான்

கிளம்ப வேண்டும்

என்று சொல்ல வருகிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

இப்போது எங்கே செல்கிறாய்

 

சிகண்டினி :

என்னை பெற்றவர்களை

பார்க்க செல்கிறேன்

 

என்னுடைய பிறப்பின்

ரகசியத்தை

நான் தெரிந்து கொண்டேன்

என்பதை அவர்களுக்குத்

தெரிவிக்க செல்கிறேன்

 

பீஷ்மனைக் கொல்வதற்காக

நான் செல்ல வேண்டும்

என்ற செய்தியை

அவர்களுக்கு

சொல்ல செல்கிறேன்

 

என்னுடைய

கடமையை செயல்படுத்த

நான் செல்ல வேண்டும்

என்பதை

சொல்ல செல்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

சிகண்டினி

நீ உடலால் மட்டுமல்ல

உள்ளத்தாலும்

உணர்வாலும்

மனத்தாலும்

நீ சிகண்டி என்ற

ஆணாக மாறி விட்டாய்

பெண்ணிலிருந்து நீ

ஆணாக மாறி விட்டாய்

 

இக்கணம் முதல்

நீ சிகண்டி என்ற ஆணாக

பிறப்பெடுத்து விட்டாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-812 (சாவேயில்லாத சிகண்டி-146)

 ஜபம்-பதிவு-812

(சாவேயில்லாத

சிகண்டி-146)

 

அது மட்டுமல்ல

நாடிப்பிடித்துப் பார்த்து

நோயைக் கண்டறிந்து

வைத்தியம் பார்க்கும்

முறையும் நம்

நாட்டில் தான் இருக்கிறது

 

நாடிப்பிடித்து

பார்ப்பவர்களும் நம்

நாட்டில் தான்

இருக்கிறார்கள்

 

நாடிப்பிடித்து பார்த்து

எந்த நோய் உடலைத்

தாக்கியிருக்கிறது

என்பதையும்

 

நோய் எதனால்

ஏற்பட்டது என்பதையும்

 

எந்த மருந்து

கொடுத்தால் நோய்

குணமாகும் என்பதையும்

கண்டறிந்து வைத்தியம்

செய்யக்கூடிய

வைத்தியர்களும் நம்

நாட்டில் தான் உள்ளனர்

 

நம் நாட்டின்

வைத்திய முறைகளின்

பெருமைகளைக்

கேள்விப் பட்டு

அயல் நாடுகளில்

இருந்து வந்து

நம் நாட்டின்

வைத்திய முறைகளைக்

கற்றுக் கொண்டு

செல்கின்றனர்

நம் நாட்டில்

இருந்து அயல்

நாடுகளுக்குச் சென்று

வைத்திய முறைகளை

கற்றுக் கொடுத்து

விட்டு வருகின்றனர்

 

இதிலிருந்து நம் பாரத நாடு

வைத்திய முறையில்

எவ்வளவு உயர்ந்த

நிலையில் இருக்கிறது

என்பதைத் தெரிந்து கொள்

 

சிகண்டினி :

அதனைப்

பயன்படுத்தி என்னை

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுவீர்களா

 

ஸ்தூணாகர்ணன் :

கண்டிப்பாக மாற்றுகிறேன்

 

அறுவை சிகிச்சை

செய்வதற்கு முன்னரும்

பின்னரும்

பத்தியத்துடன்

இருக்க வேண்டும்

பத்திரமாக

இருக்க வேண்டும்

 

நான் சொல்கிற

முறையின்படி செய் என்று 

ஸ்தூணாகர்ணன் சொன்ன

முறைகளைப் பின்பற்றி

அவர் சொன்னபடியே

நடந்து கொண்டாள்

சிகண்டினி

 

அறுவை சிகிச்சை

அனைத்தும்

முடிந்த பின்னர்

மறுபிறப்பு எடுத்து

நிம்மதியாக ஓய்வு

பெற்று முடித்த

சிகண்டினியிடம்

பேசத் தொடங்கினார்

ஸ்தூணாகர்ணன்

 

ஸ்தூணாகர்ணன் :

இப்போது என்ன

உணர்கிறாய்

 

சிகண்டினி :

என்னை ஒரு முழு

ஆணாக உணர்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

உன்னுடைய பல

கேள்விக்கான பதில்கள்

கிடைத்து இருக்குமே

 

சிகண்டினி :

ஆமாம்

கிடைத்து விட்டது

 

ஸ்தூணாகர்ணன் :

அப்படி என்றால்

 

உன்னால் தாம்பத்ய

சுகத்தை எனக்குத்

தர முடியுமா

உன்னால் எனக்கு

குழந்தையைத் தர முடியுமா

என்று உன்னுடைய

மனைவி கேட்ட

இரண்டு கேள்விகளுக்கும்

உன்னால் பதில்

சொல்ல முடியுமா

 

சிகண்டினி :

பதில் சொல்ல

என்னால் முடியும்

 

ஸ்தூணாகர்ணன் :

பதில் சொல்கிறாயா

 

சிகண்டினி :

தற்போது சொல்ல

வேண்டிய அவசியம் இல்லை

என்று நினைக்கிறேன்

 

ரகசியமான கேள்விகள்

ரசசியமாகக்

கேட்கப்பட்ட கேள்விகள்

ரகசியத்தை தன்னுள்

அடக்கி வைத்திருக்கும்

கேள்விகள்

என்னுடைய மனைவி

கேட்ட இரண்டு கேள்விகள்

 

அவைகளுக்கான பதிலை

தனிமையில் தான்

சொல்ல வேண்டும்

வெளிப்படையாக

சொல்லக் கூடாது

 

ஸ்தூணாகர்ணன் :

நாம் தனியாகத்

தானே இருக்கிறோம்

தனிமையில் தானே

இருக்கிறோம்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-811 (சாவேயில்லாத சிகண்டி-145)

 ஜபம்-பதிவு-811

(சாவேயில்லாத

சிகண்டி-145)

 

நீங்கள் செய்யப்போகும்

உதவியை மறக்காமல்

நன்றியுடனும் இருக்கலாம்

 

உங்களை தெய்வமாக

நினைத்தும் வழிபடலாம்

 

உங்களுக்காக எதையும்

செய்யக் கூடியவனாகவும்

இருக்கலாம்

 

உங்களுக்காக உயிரையும்

கொடுக்கக்கூடிய

நிலையிலும் இருக்கலாம்

 

இரண்டில் எது

வேண்டுமானாலும் நடக்கலாம்

 

நீங்கள் செய்யப் போகும்

உதவியை மறந்து

நான் நன்றி

மறந்தும் இருக்கலாம்

 

அல்லது

 

நன்றி மறக்காமலும்

இருக்கலாம்

 

எதுவும் என்

கையில் இல்லை

விதியின் கைகளில்

இருக்கிறது

 

அதனால் தான்

என்னால் எந்த ஒரு

வாக்குறுதியையும்

இப்போது என்னால்

கொடுக்க முடியவில்லை

 

அனைத்தையும் காலத்தின்

கைகளில்

கொடுத்து விட்டேன்

 

என்னை உங்களுடைய

பிள்ளையாக ஏற்றுக் கொண்டு

பெண்ணிலிருந்து ஆணாக

மாறுவதற்குத் தேவையான

உதவிகளைச் செய்யுங்கள்

 

காலம் என்ன நினைக்கிறது

என்று பார்ப்போம்

 

ஸ்தூணாகர்ணன் :

உதவி பெறுவதற்காக

உதவி செய்பவர்களின்

காலைப்

பிடிப்பவர்கள் மத்தியில்

 

உண்மையை பேசிய உன்னை

எனக்கு ரொம்ப

பிடித்து இருக்கிறது

 

நீ என்றும் என்னிடம்

உண்மையாகத்

தான் இருப்பாய்

 

உண்மையைப் பேசுகிறவர்கள்

எத்தகைய

சோதனைகள் வந்தாலும்

உண்மையாகத் தான்

இருப்பார்கள்

 

உன்னை என்னுடைய

பிள்ளையாக ஏற்றுக் கொள்ள

முடிவு எடுத்து விட்டேன்

 

உன்னை என்னுடைய

பிள்ளையாக ஏற்றுக் கொள்வதில்

எனக்கு மகிழ்ச்சியே

 

இக்கணம் முதல் நீ

என்னுடைய பிள்ளை

 

நீ பெண்ணிலிருந்து

ஆணாக மாறுவதற்கு

தேவையான

அனைத்து வைத்திய

முறைகளையும்

உனக்கு அளிக்கிறேன்

 

சிகண்டினி :

இதற்கான வைத்திய

முறைகள் நம்

நாட்டில் இருக்கிறதா

 

ஸ்தூணாகர்ணன் :

நமது பாரத

நாட்டில் தான்

அனைத்து விதமான

வைத்திய முறைகளும்

உள்ளன

 

உலகத்திலேயே நம்

பாரதநாடு தான்

வைத்திய முறையில்

உயர்ந்த நிலையில்

இருக்கிறது

 

நம்முடைய பாரத

நாட்டில் தான்

அனைத்து வியாதிகளுக்கும்

மருந்து இருக்கிறது

உலக அளவில்

தீர்க்க முடியாத

வியாதிகள் என்று

சொல்லப்படும்

வியாதிகளுக்கும்

மருந்து இருக்கிறது

 

சிக்கலான அறுவை

சிகிச்சை முறைகளும்

உலகத்திலேயே செய்ய

முடியாது என்று

சொல்லப்பட்டுக்

கொண்டு இருக்கும்

அறுவை சிகிச்சைகளும்

நம்முடைய

பாரத நாட்டில்

செய்யப்பட்டு வருகிறது

 

நுணுக்கமான

வைத்திய முறைகளை

அறிந்து வைத்திருக்கும்

வைத்தியர்களும்

 

தீர்க்கவே முடியாத

வியாதிகளுக்கு

மருந்துகளை தெரிந்து

வைத்தியம் செய்து

கொண்டிருக்கும்

வைத்தியர்களும்

 

அறுவை சிகிச்சை

செய்தே

ஆக வேண்டும் என்று

சொல்லப்பட்ட

வியாதிகளுக்கு

அறுவை சிகிச்சை

இல்லாமல் மருந்துகளின்

மூலமே குணப்படுத்தும்

முறையினைத்

தெரிந்து வைத்திருக்கும்

வைத்தியர்களும்

 

அரிய வகை வைத்திய

முறைகளைத் தெரிந்து

வைத்திருக்கும்

வைத்தியர்களும்

 

நம் பாரத நாட்டில்

உள்ளனர்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////