September 13, 2018

திருக்குறள்-பதிவு-19


                       திருக்குறள்-பதிவு-19

டார்வினின்
பரிணாமக் கோட்பாட்டை
அனைவரும்
ஏற்றுக் கொள்ளும்
வகையில்
ஹக்ஸ்லி பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய வார்த்தைகளில்
உண்மைகள் இருப்பதையும்,
டார்வினின் கண்டுபிடிப்பு
உண்மை தான்
என்பதையும்,
உணர்ந்த மக்கள்
ஹக்ஸ்லியின்
பேச்சுக்கு நடு, நடுவே
தங்களை மறந்து
மெய்மறந்து
கரகோஷம் எழுப்பினர்
இது அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஹக்ஸிலியின்
வார்த்தைகளைக் கேட்ட
மக்கள் கூட்டம்
அவருடைய கருத்தை
ஏற்றுக் கொண்டது;
நிதானமான
அவருடைய பேச்சும்
மக்கள் புரிந்து கொள்ளும்
வகையில் அவர்
அளித்த விளக்கங்களும்
அங்குக் குழுமியிருந்த
மக்கள் அனைவருடைய
மனங்களையும் கவர்ந்தது;
உண்மைகளை
அழகாக எடுத்துரைத்த
விதம் அனைவரையும்
வியப்படைய வைத்தது;
ஹக்ஸ்லியின்
பேச்சின் முடிவில்
மக்கள் அனைவரும்
இவர் எவ்வளவு
அழகாக பேசினார் என்று
ஒரே நேரத்தில் ஒன்றாக
விண்ணை பிளக்க
வாழ்க டார்வின்
நிலைபெறுக
டார்வினிஸம் என்று
கரகோஷமிட்டு
தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்
இது அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

உண்மையை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளும் வகையில்
அற்புதமாக பேசுபவருக்கே
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷமும்,
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷமும் கிடைக்கும்.

இத்தகைய
இந்த இரண்டு விதமான
கரகோஷங்களும்
டார்வினின் பரிணாமக்
கோட்பாட்டை
உதாரணங்களுடன்
அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
எளிமையாக பேசிய
ஹக்ஸிலிக்கு கிடைத்தது.

அன்றைய விவாதத்தில்
டார்வின் கண்டுபிடிப்பு
வெற்றி பெற்றாலும்
அன்று முதல் இன்று வரை
டார்வின் கண்டுபிடிப்பு
ஒரு விவாதப்
பொருளாகவே இருந்து
வருகிறது.

பரிணாமக் கோட்பாடு
உலகிடையே மிகுந்த
தாக்கத்தை ஏற்படுத்தி
மாபெரும் புயலைக்
கிளப்பி இருந்தாலும்
அதனைக் கொஞ்சமும்
பொருட் படுத்தாமல்
டார்வின் தனது
ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்

அந்தக் கால வரலாறு
முதல் இந்தக் கால
வரலாறு வரை
எடுத்துப் பார்த்தால்,
விஞ்ஞானமானது
மதத்திற்கு
அடிமையாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற எழுதப்படாத
விதி இந்த
சமுதாயத்தில் இருக்கிறது

விஞ்ஞானமானது
மதத்தை எதிர்த்து
கருத்து சொல்வதோ,
மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக்
காட்டி பேசுவதோ,
கூடாது
அப்படி விஞ்ஞானமானது
மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக் காட்டி
செயல்படும் போது
மதமானது அதைப்
பொறுத்துக் கொள்ளாமல்
விஞ்ஞானத்திற்கு எதிராக
செயல்களைச் செய்ய
ஆரம்பிக்கும்

மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக் காட்டி
கருத்து சொல்பவர்களை
மதமானது விட்டு
வைப்பதில்லை
மதத்தில் உள்ள தவறுகளை
சுட்டிக் காட்டுபவர்களை
தாங்கள் சொன்ன
கருத்துக்கள் தவறு என்று
மதமானது சொல்ல
வைக்கிறது;
அவர்களை அடிமையாக
வைக்கிறது;
அடிமையாக இருக்க
மறுப்பவர்களை கொல்கிறது;
இது தான் மதத்தின்
முக்கிய செயல்பாடாக
அன்று முதல் இன்று
வரை இருந்து இருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக
ஆண்டவன் தான்
மனிதனைப் படைத்தான்
என்று பைபிளில்
சொல்லப்பட்டவைகளுக்கு
எதிராக இருக்கும்
தன்னுடைய கண்டுபிடிப்பை
வெளியிட்டால்
எத்தகைய பிரச்சினைகள்
ஏற்படும் என்பதை
சார்லஸ் டார்வின்
உணர்ந்து இருந்தும்
தன்னுடைய உயிருக்கே
ஆபத்து ஏற்படும்
என்று தெரிந்து இருந்தும்
மதத்திற்கு எதிராக
இருக்கும்
தன்னுடைய கண்டுபிடிப்பை
சார்லஸ் டார்வின்
வெளியிட்டது
அவருடைய தைரியத்தை
குறிக்கவில்லை;
உண்மை இந்த
சமுதாயத்திற்கு கிடைக்க
வேண்டும் என்ற
சார்லஸ் டார்வினின்
உயர்ந்த குணத்தைக்
குறிக்கிறது;

சார்லஸ் டார்வின்
நினைத்தது போலவே
உலகெங்கும் உள்ள
கிறிஸ்தவர்கள்
சார்லஸ் டார்வினுக்கு
எதிராகவும்
அவருடைய கண்டுபிடிப்புக்கு
எதிராகவும்
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
ஒன்றாக அணி
திரண்டு நிற்கிறார்கள்

--------- இன்னும் வரும்
--------- 13-09-2018
/////////////////////////////////////