September 04, 2018

திருக்குறள்-பதிவு-13


                        திருக்குறள்-பதிவு-13

இங்கிலாந்தில்
1859 ஆம் ஆண்டு
நவம்பர் 24 ஆம் நாள்
காலை பொழுது
விடிந்து கொண்டிருந்த
போது இந்த
உலகத்திற்கு தெரியவில்லை
ஒரு புதிய கருத்து
அன்று எழும்பப் போகிறது;
அந்த கருத்து
உலகம் முழுவதும்
பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தப் போகிறது;
கடவுள் உண்டு
என்று சொல்பவர்களுக்கும்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களுக்கும்
பெரிய போராட்டம்
வெடிக்கப் போகிறது;
வரலாற்றில்
மறக்க முடியாத
நாளாக இந்த நாள்
இருக்கப் போகிறது
என்று தெரியாமல்,
குமுறப்போகும்
எரிமலையின் சீற்றம்
தெரியாமல்,
சுழன்றடிக்கப் போகும்
சூறாவளிக் காற்றின்
வேகம் தெரியாமல்,
பொங்கப்போகும்
கடலின் கோபம் தெரியாமல்,
இந்த உலகம்
உறக்கத்திலிருந்து
மெதுவாக விழித்துக்
கொண்டிருந்தது

1859 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம்
24 ஆம் நாள் மதியம்
01.00 மணிக்கு
“On the Origin of
Species by Means of
Natural Selection, or the
Preservation of
Favoured Races in the
Struggle for life”
என்ற புத்தகம்
வெளியிடப்பட்டது
உயிர்களின் தோற்றம்
என்று அழைக்கப்படும்
இந்த புத்தகம்
சொல்ல வருவது
பரிணாம வளர்ச்சி
கோட்பாடு
இந்த புத்தகத்தை
எழுதியவர்
சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின்
எழுதிய இந்த புத்தகம்
வெளியான அன்றே
1250 பிரதிகளும் விற்று
தீர்ந்து விட்டன
அந்த புத்தகத்தின்
அன்றைய விலை
15 ஷில்லிங்

சார்லஸ் டார்வினின்
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாடு
சொல்ல வருவது
இது தான்
உயிரினங்கள் அனைத்தும்
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றமடைந்து, சின்ன
உயிரிகளிலிருந்து பெரிய
உயிரியாக மாற,
ஒவ்வொரு விலங்கினமாக
மாறி மாறி
இன்றைய உருவத்துக்கு
வந்திருக்கின்றன
எதுவும் ஒரே நாளில்
படைக்கப்பட்டதல்ல

உயிரினங்களின்
வாழ்க்கைப் போராட்டத்தில்
தகுதியும், திறமையும்
உள்ளவை நிலைத்து நிற்கும்
மற்றவை அழிந்து போகும்
இது புதிய இனங்களின்
உருவாக்கத்திற்கு
வழியேற்படுத்தும்

அதுமட்டுமல்ல
மனிதன் குரங்கிலிருந்து
வந்தவன் என்றார்
சார்லஸ் டார்வின்

உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டை கேட்டு
உலகமே ஸ்தம்பித்தது

உலகில் உள்ள
உயிர்கள் அனைத்தையும்
ஒரே நாளில் ஆண்டவன்
உருவாக்கினார் என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
டார்வினின் கருத்து
மாறுபட்டு இருந்தது

ஆண்டவன் மனிதனை
படைத்தார் என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு மாறாக
குரங்கிலிருந்து வந்தவன்
மனிதன் என்று
டார்வின் சொன்ன
கருத்து பைபிளுக்கு
விரோதமாக இருந்தது

பல நூற்றாண்டு காலமாக
பைபிளில் சொல்லப்பட்டு
வந்த கருத்துக்கு
மாறாக டார்வின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
ஒட்டு மொத்த
கிறிஸ்தவர்களின் எதிர்ப்புக்கு
ஆளானது டார்வினின் புத்தகம்

பல நூற்றாண்டு காலமாக
மக்கள் நம்பிக் கொண்டு
இருந்த நம்பிக்கைக்கு
எதிராக டார்வினின்
கருத்து இருப்பதால்,
மக்களின் நம்பிக்கையை
கொச்சைப் படுத்தும்
வகையில்
டார்வினின் கண்டுபிடிப்பு
இருப்பதால்,
மக்களின் நம்பிக்கையை
தகர்க்கும் விதத்தில்
சார்லஸ் டார்வினின்
கண்டு பிடிப்பு இருப்பதால்,
மக்கள் தாங்கள்
கொண்ட நம்பிக்கையே
தவறோ என்று மக்கள்
சந்தேகிக்கும் வகையில்
டார்வினின் கண்டுபிடிப்பு
இருப்பதால்
டார்வினின் கண்டுபிடிப்பை
கிறிஸ்தவர்களும்
கிறிஸ்தவ அமைப்புகளும்
கடுமையாக எதிர்த்தன

டார்வின் கண்டு பிடித்த
கண்டுபிடிப்பு
சரியானது என்று சொல்லி
டார்வினுக்கு ஆதரவாக
ஒரு கூட்டம் கூடியது

இத்தகைய சூழ்நிலையில்
உலகம் இரண்டாக
உடைந்தது
கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள் ஒரு புறமும்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
மறு புறமும் இருந்தனர்

கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள்
டார்வினை எதிர்த்தனர்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
டார்வினை ஆதரித்தனர்

---------  இன்னும் வரும்
---------  04-09-2018
///////////////////////////////////////////////////////////