March 19, 2012

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்-ஏதிலார்குற்றம்-பதிவு-25




         இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர் -ஏதிலார்குற்றம் -பதிவு-25

         “”பதிவு இருபத்துஐந்தை விரித்துச் சொல்ல
                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

““நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்காதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.“”
                                                       ------------மத்தேயு - 7 : 1

ஏனெனில் , நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் ; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின் படியே உங்களுக்கும் அளக்கப்படும.
                                                          ----------மத்தேயு - 7 : 2

 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் ,உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”
                                                           ----------மத்தேயு - 7 : 3

மாயக்காரரே ! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
                                                            --------மத்தேயு - 7 : 5

விடியலைத் தொலைத்துவிட்டு ,
வீதியோரத்தில் போட்டு விட்டு ,
வாழ்வின் முன்னேற்றத்தின் அடிச்சுவடுகளை ,
கன்னியரின் கடை விழியில் கட்டி வைத்து விட்டு
வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இருக்கும் வரை,

சுகபோகத்தின் சாயலில் விழுந்து ,
பணத்தின் பவிசில் பல்லிளித்து ,
காலத்தின் கட்டுப்பாடுகளின்
கடமையை உணராமல் அலைந்து கொண்டிருக்கும்
நாகரிகம் என்ற பெயரில் நடுத்தெருவில் அரைகுறை
ஆடையுடன் சுற்றிக் கொண்டிருக்கும்
பாதையோர கன்னிகள் இருக்கும் வரை ,

மமதையும் , மயக்கு மொழி பேச்சுகளும் ,
உப்பரிகையில் உழன்றாடும் போதையும் ,
அலைந்து திரியும்
நாதியற்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை ,

அரியணையின் அரவணைப்பில் துயின்று
சுகத்தின் சாயல் தனக்கு மட்டும் தான் - என்று
சொல்லிக் கொண்டு
நிஜத்தின் சாயலை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
பணமுதலைகள் இருக்கும் வரை ,

தோல்வியை மக்களுக்கு பரிசாக வழங்கி விட்டு
வெற்றி தங்களுக்கு மட்டும் தான் என்று
எழுதாத சட்டமாக வைத்திருக்கும்
பொருளாதார நிபுணர்கள் இருக்கும் வரை ,

ஆறறிவு மனிதரை ஐயறிவு மானிட புழுவாக மாற்றி விட்டு ,
துன்பச் சகதியில் சுழன்றாடி சுகம் காண,
தள்ளிவிடும் உயர்ந்தோர்  இருக்கும் வரை ,

பட்டங்களும் , பதவிகளும் தனக்கு மட்டும் தான்
தன் வாரிசுகளுக்கு மட்டும் தான் - என்று
சுயநல கிருமிகளாக அரசியல்வாதிகள் இருக்கும் வரை  ,

புகழும் ,செல்வாக்கும்,
மக்களுக்கு கொடுக்கும் மரியாதையும் ,
பாராட்டும் , புகழும் , அடிவருடும் ரசிகனும் ,
தனக்கு வேண்டும் என்று விரும்பும் ,
சுயதம்பட்டம் சுயபுகழ் தேடுபவர்கள் இருக்கும் வரை ,

மதம் என்ற பெயரில் ரத்த
ஆறை ஓட விட்டு ,
சாதி என்ற பெயரில் - அந்த
ரத்த ஆற்றில் நீந்தி
மொழியின் பெயரால் பேதத்தை உண்டாக்கி
ரத்த ஆற்றை குடிக்கும் ஓநாய்கள் இருக்கும் வரை ,

சமுதாயம் உருப்படாது ;
சமுதாய நிலை உயராது ;
சமுதாய மக்கள் திருந்தமாட்டார்கள் - என்று
சமுதாயத்தையும் , சமுதாய மக்களையும் , மற்றவர்களையும்,
தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் ,
சகோதர , சகோதரிகளையும் , உறவினர்களையும் ,

தவறான செயல் செய்பவர்கள்
தவறான மனதை உடையவர்கள்
தவறான வழி நடப்பவர்கள் - என்று
எப்பொழுதும் , எந்நேரமும் , எக்காலத்தும் ,
மற்றவர்களையே , பிறரையே குற்றவாளிகள் என்று சொல்லாதீர்கள் .
நீங்களே நீதிமான்களாக மாறி பிறர்  குற்றவாளிகள் என்று
தீர்ப்பு அளிக்காதீர்கள் .

நாம் நல்ல மனம் கொண்டவராக ;
நாம் நல்ல வார்த்தை பேசுபவராக ;
நாம் நல்ல செயல் செய்பவராக ;
நாம் நல்ல வழியில் நடப்பவராக ;
நாம் நல்லவற்றையே நினைப்பவராக ;
இருந்தால் மட்டுமே ,
மற்றவர்களையும் ,மற்றவர்களுடைய செயல்களையும்
விமர்சிக்கும் உரிமை உண்டு .

நம் மனமே அழுக்கு அடைந்து இருக்கும் போது ,
நம் செயல்களே கறைப்படிந்து இருக்கும் போது ,
நம் வார்த்தைகளே பொய்களால் நிரப்பப் பட்டிருக்கும் போது ,
நம் எண்ணங்களே சாக்கடையாகி துர்நாற்றம்
வீசிக் கொண்டு இருக்கும் போது ,
நம் மனம் இரக்கமற்று சாத்தான் குடி கொண்டு இருக்கும் போது ,
எப்படி மற்றவரை குற்றவாளி - என்று
நாம் சொல்ல முடியும் அந்த தகுதி நமக்கு இல்லை .

எப்பொழுது நீங்கள் சமுதாயத்தையும்
மற்றவரையும் குற்றவாளிகள் - என்று
குறை கண்டு பிடித்து சொல்கிறீர்களோ
அப்பொழுது சமுதாயமும் , மக்களும் , பிறரும்
உங்களை குற்றவாளிகள் என்று உங்களை கை காட்டும்
உங்களைப் பார்த்து எள்ளி நகையாடும்
உங்களை நினைத்து மனதிற்குள் சிரித்து விளையாடும் - ஆகவே
பிறரை குற்றவாளிகள் என்று சொல்லாதீர்கள் .

அப்பொழுது தான் நீங்களும்
விமர்சனத்திற்கு ஆளாக மாட்டீர்கள் ;
விமர்சனத்திற்கு உட்பட மாட்டீர்கள் ;
விமர்சனத்தால் பாதிக்கப்பட மாட்டீர்கள் ;
விமர்சனத்தால் மனம் உடைய மாட்டீர்கள் ;
விமர்சனத்தால் வாழ்க்கையை வெறுக்க மாட்டீர்கள் ;

இல்லையென்றால் ,
நீங்களும் விமர்சனத்திற்கு உட்படக் கூடிய நிலை உண்டாகும் ;
விமர்சனத்தால் பாதிப்பு அடையக் கூடிய நிலை உண்டாகும் ;
விமர்சனத்தால் கவலைகள் பெருக வழி உண்டாகும் ;

நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகள் - என்று
விமர்சனம் செய்தால்
மற்றவர்களும் உங்களை குற்றவாளிகள்
என்று விமர்சனம் செய்வார்கள்
நீங்கள் மற்றவர்களுடைய குணநலன்களை
எந்த அளவுகோலால் அளக்கிறீர்களோ
அவ்வாறே உங்கள் குணநலன்களும்  அளக்கப்படும்
என்கிறார்  இயேசு .


மேலும் ,
உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை உணராமல் ;
உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை பார்க்காமல் ;
உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை அறியாமல் ;

உன் சகோதரன் கண்ணிலிருக்கிற ,
அசுத்தத்தை பார்ப்பதால் என்ன பயன் ?
முதலில் உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை நீக்கு
பிறகு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற
அசுத்தத்தை எப்படி நீக்குவது
கண்ணை எப்படி சுத்தப்படுத்துவது
என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து நீக்கலாம் .

அதாவது முதலில் உன்னிடமுள்ள குறைகள்
எவை என்று கண்டு பிடித்து நீக்கு - பிறகு
மற்றவரிடமுள்ள குறைகளைக் காணலாம்
மற்றவரிடமுள்ள குறைகளை நீக்கும் முறைகளை ஆராயலாம்
என்கிறார்  இயேசு .

தனி மனிதன் தன்னிடம் உள்ள குறைகளை உணர்ந்து திருந்தினால்
இந்த சமுதாயம் திருந்தும் என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர் :

   “”””ஏதிலார்  குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
         தீதுண்டோ மன்னும் உயிர்க்கு “””
                          ------திருவள்ளுவர்-----திருக்குறள்--

அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவும் ;
மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ;
ஓட்டு வங்கிகளைப் பெருக்கி கொள்வதற்காகவும் ;
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் ;
மதக் கலவரங்களை ஏற்படுத்துவதும் ,
கோயிலை இடிக்க ஓடுவதும் ,

மக்களுக்கு நேரும் இடையூறைப் பற்றிக் கவலைப் படாமல்
உண்ணாவிரதம் - என்ற
பெயரில் நடுத்தெருவில் அமர்ந்து கொள்வதும்

தீர்ப்புகள் எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும் சரி   
நீதிமன்ற தீர்ப்பே ஆனாலும் சரி
சட்டத்தை மதிக்க மாட்டோம்  - என்று
இரு மாறுபட்ட மனங்கள் மோதிக் கொள்வதும் ,

மத வெறியில் மனிதர்களை மாய வைத்து
இரத்த ஆற்றில் நீந்துவதும் ,

சாதியின் பெயரைச் சொல்லி சமதர்மக்
கோட்பாட்டைத் தகர்ப்பதும் ,

பிரிவிணையாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் ;
நயவஞ்சக எண்ணம் கொண்டு அழிப்பதாலும் ;
இரக்கமதை நசுக்குவதாலும் ;
ஏழ்மையதை உதைப்பதாலும் ;
அறியாமையதை விதைப்பதாலும் ;
அடிமைத் தனத்தை வளர்ப்பதாலும் ;
அறிவதனை மாய்ப்பதாலும்  ;
சிந்தனையை சிதைப்பதாலும் ;
பிரித்தாளும் சூழ்ச்சிகள் வளர்ந்து கொண்டிருப்பதாலும் ;
முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகள் போடப்பட்டு இருப்பதாலும் ;
மதவெறி துhண்டப்படுவதாலும் ;
சாதி உணர்வு தழைப்பதாலும் ;
மடமைகள் அரியணை ஏறுவதாலும் ;
கொடுமைகள் செங்கோல் பிடித்து அரசாள்வதாலும் ;
வறுமை எங்கும் சுதந்திரமாக உலாவுவதாலும் ;
உண்மைகள் மாய்வதாலும் ;
பொய்மைகள் வளர்வதாலும் ;

சமுதாயம் சீரழிந்து கிடக்கிறது .
சமுதாய மக்கள் தீயவைகளில்
தீய எண்ணங்களில் தீய செயல்களில்
மூழ்கித் திளைக்கின்றனர் - என்று
மற்றவரிடம் உள்ள குறைகளைக் காண்பவர்
தன்னிடம் உள்ள குறைகளைக் காணவேண்டும் .


நட்பு தேடி உண்மையாக வந்தவனிடம்
துரோக வலை விரித்து குழி பறித்தவன் ;

காதல் மொழி பேசி வந்தவளிடம் ,காமவலை வீசி
கன்னியின் வாழ்வை சிதைப்பவன் ;

உயிர்  கொடுத்து உலவ விட்ட
தாயின் அன்பை மதிக்காமல் அவளை உதாசீனப் படுத்தியவன் ;

ரத்தத்தை உழைப்பாக்கி அல்லும் பகலும்
ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்த தந்தையை அவமானப் படுத்தியவன் ;

நயவஞ்சக வேலை செய்து
ஏமாற்றி வயிறு வளர்க்கும் தான்
வெளியில் நல்லவன் போல் நடிப்பவன் ;

பிணம் தின்னிக் கழுகுகளும் கரையான்களும்
தொடக்கூட கூச்சப்படும்
அவமானச் சின்னம் தான் - என்று
தன்னைப் பற்றி தன்னிடம் உள்ள குறைகளைப் பற்றி
அறிந்து கொள்ள வேண்டும் .

மற்றவரிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்பவர்
தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்ளும் மனது விட்டால் ,
அதனை களையும் வழிமுறை அறிந்து களைந்து விட்டால் ,
துhய்மை பெற்று விட்டால் ,
அறிவு விளக்கம் பெற்று விட்டால் ,

உயிருக்கும் , உடலுக்கும் எந்தவித
துன்பமும் இல்லை ; துயரமும் இல்லை ;


ஓவ்வொரு தனி மனிதனும் தன்னிடம் உள்ள குறைகளை
கண்டறிந்து களைந்து விட்டால்
சமுதாயத்தில் சண்டை ஏற்படாது .
உயர்வு - தாழ்வு மனப்பான்மை உண்டாகாது .

பொய் , சூது , கொலை , கொள்ளை , கற்புநெறி பிறழ்தல் - என்ற
பஞ்சமா பாதகங்கள் நடை பெறாது .

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும்
உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும்
துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழும் .

இதனை செய்யாமல் , இதனை மேற்கொள்ளாமல்
மற்றவர்  குற்றங்களை மட்டும் விமர்சனம் செய்து விட்டு
தன் குற்றங்களை காணாமல் விட்டு விட்டால்
சமுதாயத்தால் நாமும் விமர்சனத்திற்கு உள்ளாவோம் ;
குற்றவாளிகளாக ஆக்கப்படுவோம் ;

இதனால் அமைதி குலைந்து சண்டைகள் பெருகி
நிம்மதி இழக்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது
என்கிறார்  திருவள்ளுவர் .
     


இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு ,மற்றவர்களை குற்றவாளிகள் என்று விமர்சனம் செய்தால்
மற்றவர்களும் உங்களை குற்றவாளிகள்
என்று விமர்சனம் செய்வார்கள் .

ஆதலால் , முதலில் உங்களிடமுள்ள குறைகளை
கண்டறிந்து நீக்கி விட்டு மற்றவர்களுடைய
குறைகளைக் காண வேண்டும் என்கிறார்.


அவ்வாறே,
திருவள்ளுவரும் ,முதலில் தன்னிடமுள்ள குறைகளை
கண்டுபிடித்து நீக்கிவிட்டு பிறகு மற்றவர்களுடைய
குறைகளைக் காண வேண்டும் என்கிறார்.


              “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுஇருபத்துஐந்து  ந்தான்முற்றே “”