June 09, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 21


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 21

புத்தர் ஞானம்
அடைந்த பின்
பன்னிரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு
தன்னுடைய ஊர் திரும்புகிறார்

புத்தர் ஞானம் பெற்றவராக
புத்தர் என்ற உயர்ந்த
நிலையை அடைந்தவராக
அனைவராலும்
அறியப்பட்டிருந்த காலம்.

எல்லாத்
திசைகளிலும் இருந்து
புத்தரைக் காண வந்து
அவர் காலடியில் வீழ்ந்து
உண்மை அறிய வேண்டும்
என்ற எண்ணத்தில்
புத்தரை மக்கள் வணங்கினார்கள்

ஆனால் அவர் தயக்கத்துடன்
பார்க்க சென்றது
தன் மனைவி
யசோதரையைத் தான்
தன் மனைவி யசோதரை
என்ன சொல்வாள்
என்று தயக்கத்துடன் சென்றார்

தன் மனைவி
யசோதரை முன் போய் நின்றார்

யசோதரை அவரை
ஞானம் பெற்ற புத்தராக
பார்க்கவில்லை
அவரைத் தன் கணவனாகத்
தான் பார்த்தாள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு நாள்
நள்ளிரவில்
தன்னையும் தன்
பிள்ளையையும் தனியாக
விட்டு விட்டுச் சென்ற
தன் கணவனாகவே
பார்த்தாள்

அவர் கைவிட்டு போன
இரவுக்கு மறுநாள்
காலையில்
எழுந்து பார்த்தபோது
தன் கணவன் இல்லை
என்று தெரிந்ததும்
அவள் எப்படிக் கவலையும்
மன வேதனையும்
அடைந்து இருப்பாள்

தன் கணவன்
எங்கே சென்றார்
என்று தெரியாமல்
அவர் உயிருடன் இருக்கிறாரா
உயிருடன் இல்லையா
என்பது தெரியாமல்
யசோதரை 12 ஆண்டுகள்
எவ்வளவு கவலையுடன்
இருந்திருப்பாள்.

அதே கவலையுடன் தான்
தன்னை நடு இரவில்
விட்டு விட்டு சென்ற
கணவனாகவே யசோதரை
புத்தரை பார்த்துக் கேட்டாள்

ஏன் எங்களை இரவில்
தனியாக விட்டு விட்டு
எதுவும் சொல்லாமல்
சென்றீர்கள்
என்று கேட்டாள்

அதற்கு புத்தர் எந்தவித
பதிலும் அளிக்கவில்லை
புத்தர் பதில்
சொல்லி இருக்கலாம்
பெரிய அரண்மனை
உதவி புரிய பணியாட்கள்
அதிகப்படியான செல்வம்
கொடுத்து விட்டு தானே
சென்றிருக்கிறேன் என்று
ஆனால் அவரால்
அப்படி சொல்ல முடியாது
அது சரியான பதில்
இல்லை என்பது
புத்தருக்குத் தெரியும்

ஏனென்றால் அவைகள்
யாவும் ஒரு பெண்
மணந்து கொண்ட
கணவனுக்கு ஈடாகாது
என்பது அவருக்கு தெரியும்
அதனால் புத்தர்
எதுவும் பேசவில்லை

யசோதரை மீண்டும் கேட்டாள்
ஏன் நீங்கள் அடைந்த
ஞானத்தை
இந்த அரண்மனையிலேயே
மனைவி குழந்தைகளுடன்
இருந்து அடைந்து
இருக்க முடியாதா என்று
யசோதரை கேட்டாள்
புத்தர் யசோதரை கேட்ட
இந்த கேள்விக்கும்
பதிலே சொல்லவில்லை
மௌனம் காத்தார்

12 வருடமாக அடக்கி
வைத்திருந்த கோபதாபங்களும்,
மன வேதனைகளும்,
கவலைகளும் அழுகைகளாக
வெடித்துச் சிதறியது
12 ஆண்டுகால இதய
வேதனை புயலாய்ப்
பொங்கிச் சீறியது
கணவன்
அருகில் இல்லாமல்
வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்
தனது மனைவியிடம்
எந்த பதில் சொன்னாலும்
அது சரியாக இருக்காது
என்பது புத்தருக்குத் தெரியும்

அதனால் தான் புத்தர்
யசோதரையிடம் பதில்
எதுவும் சொல்லாமல்
அமைதி காத்தார்

உலகம் முழுக்க
புத்தரை தெய்வமாக
வணங்கும் இந்த உலகம்
யசோதரையை
கவனிக்கத் தவறி
விட்டது

புத்தரை போற்றிய
அளவிற்கு இந்த உலகம்
யசோதரையை நினைவு
கொள்ளவில்லை என்பது
வேதனையான விஷயம்

உலகம் மறந்து விட்ட
யசோதரையை
பத்தினி தெய்வமாக
நாம் ஏற்று
அவருக்கு உரிய
மரியாதையை செலுத்துவோம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////