January 28, 2012

இயேசு கிறிஸ்து- திருவள்ளுவர்-தீயினாற்-பதிவு-3




       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பதிவு-3
      
                              “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
 இயேசு கிறிஸ்து:
 வசனங்கள்-1
இயேசு ஜனங்களை வரவழைத்து , அவர்களை நோக்கி , மனுஷனைத் தீட்டுப்படுத்தக் கூடியவை எவை என்பதையும் , தீட்டுப் படுத்தாதவை எவை என்பதையும் கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது ,  வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் என்றார் .“
                                                                      மத்தேயு - 15 : 11

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை மனிதனை களங்கப்படுத்தாது, அவனை அசுத்தப் படுத்தாது ,
வாய்க்குள்ளே செல்பவைகள் மனிதனுடைய பசியைத் தீர்ப்பதற்காகத் தான் உள்ளே செல்கிறதே தவிர ,
அவைகளால் மனிதனுக்கு எந்த விதமான கெட்ட பெயர்களையும் , அவமானத்தையும் ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தாது ,  
சூழ்நிலையை உருவாக்காது .

ஆனால் மனிதனுடைய வாயிலிருந்து வெளிவருபவை அதாவது மனிதனுடைய வார்த்தைகள் ,
அவன் பேசும் பேச்சுக்கள் ,அவன் வெளிவிடும் சொற்கள்,
அவைகள் தவறானவைகளாக இருந்தால் ,
தீய சொற்களைக் கொண்டவைகளாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை வருத்தப்பட வைக்கக் கூடியதாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை புண்படுத்துவதாக இருந்தால்,
தன்னுடைய சொற்களால் , தன்னுடைய வார்த்தைகளால் , தன்னுடைய பேச்சுக்களால் , தனக்கே அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாக இருந்தால் ,
அவைகள் தான் மனிதனுக்கு கெட்ட பெயரையும்,
தீர்க்க முடியாத களங்கத்தையும் உண்டாக்கி விடும் என்கிறார்  இயேசு .



 வசனங்கள்-2 
மனிதனை களங்கப் படுத்துபவை எவை என்றும் , மனிதனை களங்கப் படுத்தாதவை எவை என்றும் கூறிய இயேசு கிறிஸ்து,
வாய்க்குள்ளே செல்பவை எந்த காரணங்களுக்காக மனிதனை களங்கப்படுத்தாது என்பதைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:


வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசன வழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? ”
                                                                      மத்தேயு - 15 : 17

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை அதாவது மனிதன் சாப்பிடும்  எல்லா உணவுப் பொருட்களும் அவனுடைய வயிற்றுக்குள் சென்று ஜீரணம் ஆகி விடும்.

அவ்வாறு ஜீரணம் ஆகிய உணவானது ஏழு தாதுக்களாக மாற்றம் அடைகிறது,
அவைகளாவன : இரசம் , இரத்தம்,  சதை , கொழுப்பு,  எலும்பு,  மஜ்ஜை ,
ஆண்-சுக்கிலம்; பெண்-சுரோணிதம் ஆகியவை ஆகும்

ஜீரணமானவை தவிர ஜீரணமாகாதவை அதாவது தேவையற்றவை கழிவு பொருட்களாக ஆசனவாய் வழியாக வெளியே சென்று விடும் என்ற உண்மையை ,

நீங்கள் அறிந்தும் , அறியாதது போல் இருக்கிறீர்களா ,
உணர்ந்தும் , உணராதது போல் இருக்கிறீர்களா ,
தெரிந்தும் , தெரியாதது போல் இருக்கிறீர்களா ,
என்று ஜனங்களை நோக்கி இயேசு கேட்கிறார்



 வசனங்கள்-3 :
வாயிலிருந்து வெளிப்படுபவை எவ்வாறு மனிதனை களங்கப்படுத்தும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் இயேசு விளக்குகிறார்:

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இதயத்திலிருந்து புறப்பட்டு வரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்.”
                                                                                                மத்தேயு - 15 : 18
 மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் அவனுடைய வாயிலிருந்து நேரடியாக வெளிவருவது இல்லை.
அந்த சொற்களுக்குரிய அதாவது,
                    அதனுடைய மூலம்,
                    அதனுடைய ஆதாரம்,
                    அதனுடைய வேர்,
                    அதனுடைய அடிப்படை,
                    எங்கே இருக்கிறது என்றால்
                     இருதயத்தில் இருக்கிறது.

இருதயத்தைப் பாதித்த நிகழ்வுகள்,
வருத்தப் பட வைத்த துன்பங்கள்,
கனன்று கொண்டிருக்கும் எரிமலைகள் ,
நீக்க முடியாத கவலைகள்,
அடக்கி வைக்கப்பட்டு இருதயத்தில் கொதித்து கொண்டிருக்கும் விஷயங்கள்,
ஆகியவை
இருதயத்திலிருந்து நேராக புறப்பட்டு வெளியே வாய் வழியாக வந்து,
எதிரே இருப்பவரை பாதிக்கும் விதத்திலும்,
எதிரே இருப்பவரை மனம் வருத்தப்பட வைக்கும் விதத்திலும்,
போன்ற செயல்களைச் செய்வது மட்டுமில்லாமல்,
தனக்கும் அவமானத்தை உண்டாக்கும் வகையிலும் இருக்கும்.

இவ்வாறு வாயிலிருந்து ஆவேசமாக வெளிப்படும் வார்த்தைகள் ,மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் அறிவில்லாமல் சொற்களாக வெளிப்படும் .
அவைகளே மனிதனை களங்கப்படுத்தும் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-4 
இருதயத்திலிருந்து வாய்வழியாக வெளிப்படும் வார்த்தைகள் எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்கும் என்று சொன்ன இயேசு ,
அவைகள் எத்தகைய விதத்தில் களங்கப்பட்டு இருக்கும் ,அசுத்தமடைந்து இருந்தும் ,தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும், என்பதை பின்வரும் வசனங்களில் கூறுகிறார்:

எப்படியெனில் ,இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும் , விபசாரங்களும் , வேசித் தனங்களும் , களவுகளும், பொய்ச் சாட்சிகளும், துhஷணங்களும் புறப்பட்டு வரும்.”
                                                                                மத்தேயு - 15 : 19
இருதயத்தில் வைக்கப்பட்டிருப்பவை ,
புதைத்து வைக்கப் பட்டிருப்பவை,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருப்பவை ,
எவைகள் என்று கணக்குப் பார்ப்போமாகில்,

இழிவுகளைத் தன்னகத்தே கொண்ட பொல்லாத சிந்தனைகள்,
இரக்கத் தன்மைகள் அற்ற எதற்கும் அஞ்சாத கொலை பாதகங்கள் ,
களங்கங்களைப் பற்றிக் கவலைப் படாத வேசித் தனங்கள்,
நல்லவை , கெட்டவை ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்காத களவுகள் ,
பாதிப்பு யாருக்கு என்று நினைத்துப் பார்க்காத பொய்ச் சாட்சிகள்,
அருவெறுக்கத் தக்க நினைவுகளைச் சுமந்த துhஷணங்கள்,
ஆகியவை இதயத்தில் இருக்கும் .இவை வெளியே சொற்களாக வெளி வரும் பொழுது,

மற்றவருடைய மனதை பாதிக்கும் வகையில் வெளி வரும்.
மற்றவருடைய மனதை துன்பப் படுத்தும் வகையில் வெளிவரும்.
இவைகள் தான்  , இந்த சொற்கள் தான்,
வாயிலிருந்து வெளிப்படும் கொடூரத் தன்மைகள் கொண்ட இவைகள் தான்,
சொல்பவரையும் , கேட்பவரையும் மனது வருத்தப்பட வைக்கும் என்கிறார் இயேசு  .



திருவள்ளுவர்:

     “”””தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
            நாவினாற் சுட்ட வடு “””
                                                                ----திருவள்ளுவர்----திருக்குறள்----
உடம்பின் மேல் புறத்தில் நெருப்பினால் ஏற்படக் கூடிய காயங்களையும், வடுக்களையும் , மருத்துவ உதவிகள் பெற்று , மருந்துகள் போடுவதன் மூலம்  உடம்பின் மேல் ஏற்படும் காயங்களைச் சரிப் படுத்திக் கொள்ளலாம்.
அதாவது உடம்பின் புறத்தே ஏற்படக் கூடிய காயங்களை சரி செய்து கொள்ளலாம்.

அதைப் போல் அந்தக் காயத்தினால் ஏற்பட்ட வலிகளும் ,மனத்திற்கு ஏற்பட்ட கவலைகளும் , துன்பங்களும் வெளியில் உண்டாகிய காயங்கள் மறையும் பொழுது ஆறும் பொழுது உள்ளுக்குள் வலியும் ஆறிவிடும். துன்பங்களும் கரைந்து விடும்.

ஆனால் ஆறாத ஒன்று உண்டு ,ஆற்ற முடியாத ஒன்று உண்டு. அது என்னவெனில் , அது வாயிலிருந்து வெளிப்படும் சொற்களே ஆகும்.
அத்தகைய வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் ,தேவையற்ற சொற்கள், துன்பத்தை விளைவிக்கக் கூடிய சொற்கள் ,மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கக் கூடிய சொற்கள் வெளிப்படும் பொழுது,
மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கும் பொழுது ,துன்பப் பட வைக்கும் பொழுது, அவைகள் ஆற்ற முடியாத துன்பத்தை மற்றவர்  மனதில் உண்டாக்கி விடும்.

நம் வாயிலிருந்து வெளிப்பட்டவை யாரை வருத்தப் பட வைக்க பேசப்பட்டதோ  அவரை வருத்தப் பட வைக்கும்.
பிறகு நமது மனது குழப்பம் நீங்கி , தெளிவு பெற்று , அமைதி பெறும் பொழுது, யோசித்துப் பார்த்தால் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்வோம் .
அந்த நிலையில் ,அந்த கால கட்டத்தில்  நம்முடைய மனதிலும் ஆற்ற முடியாத கவலைகளும், துன்பங்களும் உண்டாக்கி விடும் .
வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் , தன்னையும் பிறரையும் மனது வருத்தப்பட வைப்பதோடு மட்டுமில்லாமல் ஆற்ற முடியாத துன்பத்தையும் கொடுத்து விடும் என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்:
வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப்படுத்தும் என்றார்  இயேசு.

அவ்வாறே
திருவள்ளுவரும் வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப் படுத்தும் என்கிறார்.


இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்.


                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”