February 29, 2024

பட்டினத்தார்-(10)-ஞானம் அடைந்தவர்கள் பிச்சை எடுக்கக் கூடாது-29-02-2024

 

பட்டினத்தார்-(10)-ஞானம் அடைந்தவர்கள் பிச்சை எடுக்கக் கூடாது-29-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

புத்த மதத்திலும்,

ஜைன மதத்திலும்,

பிச்சை எடுப்பது

முக்கியமான ஒன்றாக

வலியுறுத்தப்பட்டது

 

பிச்சை எடுப்பது

அவ்வளவு எளிதான

ஒன்றல்ல

 

அனைவராலும்

பிச்சை எடுக்க முடியாது

 

பணம் பதவி அதிகாரம்

படைத்தவர்கள்

பிச்சை எடுப்பதின் மூலம்

ஆணவம் அழியும்

என்பதையும்,

இந்த உலகம் அழியக்கூடியது

என்பதையும்,

எல்லாம் மாயை

என்பதையும்,

உணர்ந்து கொள்ள வேண்டும்

என்பதற்காக

பிச்சை எடுக்க வேண்டும்

என்பது முக்கியமான

ஒன்றாக வலியுறுத்தப்பட்டது

 

ஆனால் இப்போது

உள்ள மதங்கள்

தங்கள் மதம் தான்

உயர்ந்தது என்பதையும்,

தங்கள் கடவுள் தான்

உயர்ந்தது என்பதையும்,

ஆணவத்தோடு

வலியுறுத்துவதால்

மனிதத் தன்மை

இறந்து போய்

மதவெறி மேலோங்கி

நிற்கிறது

 

பிச்சை யார் எடுக்க

வேண்டும் என்பதையும்

யார் எடுக்கக் கூடாது

என்பதையும்

பட்டினத்தார்

வாழ்க்கை மூலம்

தெரிந்து கொள்ளலாம்

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------29-02-2024

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////