November 01, 2018

திருக்குறள்-பதிவு-44


                      திருக்குறள்-பதிவு-44

பிரபஞ்சத்தின்
மையப்பகுதி பூமி
இந்த பூமியை
மையமாக வைத்துத்தான்
சூரியன் சுற்றி
வருகிறது
இதற்கு பூமி
மையக் கோட்பாடு
(Geocentric Theory)
என்று பெயர்
இதனை
தாலமி (கி.பி.85-165)
என்பவர் கூறினார்

தாலமியின் காலகட்டத்தில்
கிறிஸ்தவ மதம்
அதிக அளவு
அதிகாரத்தை
உடையதாக இருந்தது;
அளவிடற்கரிய
செல்வாக்கை
கொண்டதாக இருந்தது;
எத்தகைய ஒன்றையும்
நிர்ணயிக்கக்கூடிய
சக்தியாக இருந்தது;
தேவையுள்ள
அரசை உருவாக்கக்கூடிய
சக்தியாகவும்;
தேவையுள்ள
அரசையே ஆட்டி வைக்கக்
கூடிய சக்தியாகவும்;
தேவையில்லாத
அரசை அகற்றக்கூடிய
சக்தியாகவும்;
அது திகழ்ந்தது

கிறிஸ்தவ மதம்
அசைக்க முடியாத
மாபெரும் சக்தியாக
திகழ்ந்து கொண்டிருந்த
அந்த காலகட்டத்தில்
வாழ்ந்த விஞ்ஞானிகளை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு ஒன்றுபட்டு
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்

இரண்டு
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்


பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
ஒன்றுபட்டு கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்
மதிக்கப்பட்டனர்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்
துன்புறுத்தப்பட்டனர்
அல்லது
கொல்லப்பட்டனர்

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு ஒன்றுபட்டு
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்தவர்கள்
எந்தவித அச்சமும்
இல்லாமல் தாங்கள்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை
இந்த சமுதாயத்திற்கு
சொன்னார்கள்

பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக கண்டுபிடிப்பை
கண்டுபிடிக்கிறவர்கள்
தண்டிக்கப் படுகிறார்கள்
என்பதை உணர்ந்த
சில விஞ்ஞானிகள்
தாங்கள் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை வெளியே
சொல்லவே பயந்தனர்
அவர்களில் ஒரு சிலர்
தாங்கள் கண்டுபிடித்த
கண்டுபிடிப்புகள்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருந்தாலும்
எதைப் பற்றியும்
கவலலைப்படாமல்
துணிந்து தாங்கள்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை
இந்தச் சமுதாயத்திற்கு
சொன்னார்கள்

இத்தகைய
விரும்பத்தகாத
சூழ்நிலை நிலவிய
சமயத்தில்
தாலமி சொன்ன
கருத்தானது
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
எதிராக இல்லாமல்
இருந்ததாலும்;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்களுடன்
ஒன்று பட்டு
இருந்ததாலும்;
கிறிஸ்தவ மதக்
கோட்பாட்டை
எந்தவிதத்திலும்
பாதிக்காமல் இருந்த
காரணத்தினாலும்;
கிறிஸ்தவ சமயவாதிகளின்
மனம் புண்படும்
வகையில் இல்லாத
காரணத்தினாலும்;
தாலமியின்
கண்டுபிடிப்பில் உள்ள
கருத்தானது
முதலில் கிறிஸ்தவ
மதவாதிகளால் ஏற்றுக்
கொள்ளப்பட்டு சரி
என்று ஒப்புதல்
அளிக்கப்பட்ட பிறகே
தாலமியின்
கண்டுபிடிப்பான
பூமி மையக் கொள்கையை
இந்த உலகம்
ஏற்றுக் கொண்டது

பூமி மையக்
கோட்பாட்டை தாலமி
சொன்ன நாள் முதல்
பல நூற்றாண்டுகளாக
பூமி தான்
பிரபஞ்சத்தின்
மையப்பகுதி என்றும்
அதனையே சூரியன்
சுற்றி வருகிறது
என்றும்
நம்பப்பட்டு வந்தது

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
ஒன்றுபட்டு தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பான
பூமி மையக் கொள்கையை
தாலமி சொன்னார்

தாலமிக்கு பல
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் வந்த
நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
என்பவர் பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்துக்கு
எதிராக உள்ளதாகக்
கருதப்படும் தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பே
சரி என்றும்
தாலமி சொன்ன
பூமி மையக்
கொள்கை தவறு
என்றும் சொன்னார்.

---------  இன்னும் வரும்
---------  01-11-2018
///////////////////////////////////////////////////////////