June 15, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-பண்டுமுளைப்பது- பதிவு-44


     
        இயேசு கிறிஸ்து-ஔவையார்-பண்டுமுளைப்பது- பதிவு-44   
               
      “”பதிவு நாற்பத்திநான்கை விரித்துச் சொல்ல 
                             ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது ; அதை ஒரு மனுஷன் கண்டு , மறைத்து ,அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் ,தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”
                                            --------மத்தேயு - 13 : 44

பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.”
                                             --------மத்தேயு - 13 : 45

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு , போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று , அதைக் கொள்ளுகிறான்.”
                                           ----------மத்தேயு - 13 : 46

பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு , சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.”
                                           ---------மத்தேயு - 13 : 47

அது நிறைந்த போது , அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்து போடுவார்கள்.”
                                             --------மத்தேயு - 13 : 48

பண்பற்ற நிலையில் பரதேசிகளின்
களிமொழி கொஞ்சும்
கண் கவர்  வார்த்தையில் கலங்கி
இன்ப நீரோடையில்
எழில் கீதம் இசைக்கலாம் !
எழுந்து நடம் ஆடலாம் !
அழகுத் தோரணையில்
ஆவாரம் பூ சூடலாம் !
உயர்வின் உச்சியில் புரளலாம் !
புண்பட்ட மனங்களை
ஒதுக்கி விட்டு
ஒய்யார கீதம் இசைக்கலாம் !
ஊழிக் காலம் நம்மை
ஓன்றும் செய்யாது
நன்றியை கொல்லலாம் !
துரோகத்துடன் கை குலுக்கலாம் !
ஆணவக் காரர்கள்
அகம்பாவப் போர்வையில்
அதிகார உச்சியில்
இன்றைய வாழ்வை
நித்தியம் என்று நினைத்து
அநித்தியத்தின் பொருள் உணராமல்
நிலையில்லா வாழ்வை
உண்மை என்று உணர்ந்து
உவகையில் விளையாடி
உச்சி குளிரும்
அந்த பிச்சைக்கார ஏமாளிகளின்
கோமாளிக் கூத்துக்களைக் கண்டு
நாமும் வாழலாம்
நய வஞ்சகத்தின் அரவணைப்புடன்
உயர்வுப் பிச்சை
உழைப்பு தரும் வெகுமானம்
என்பதை மறந்து
அதன் வழி செல்லாமல்
ஏமாற்றி விட்டோம்
அதன் வழி
அரியணை ஏறி விட்டோம் !
இனி இறங்க மாட்டோம் - என்று
பணத்தின் மிதப்பில் குதித்தால்
உயர்வின் அஸ்திவாரம் ஆடிவிடும் .
நசுங்கி விடும் வாழ்வு ,
சிதைந்து விடும் சிந்தனை,
முளைத்து விடும் சவக் குழியின் மேல் புல்.
துரோகத்தின் விளைவால்
முடி சூட்டிய முடிகள்
முடியிழந்து நாறியிருக்கின்றன !
அடி வருடிகளின்
அரசியல் பிச்சை கழுவேறியிருக்கின்றன !
ஏமாற்றுக் காரர்களின்
பொல்லாத ஏமாற்று வித்தை
சில காலம் தான் !
உண்மை உணர்ந்து
தவறின் பிழை உணர்ந்து
செயல் உணர்ந்து
செயலின் விளைவை உணர்ந்து
வருந்தா விட்டால்
நாளைய சந்ததி கண்டிப்பாக
நம் முகத்தில் எச்சம்
உமிழக் கூட வெட்கப்படும் !
என்பதை மனக்கண் முன்
கொண்டு வரும் போது
நெஞ்சில் நிறுத்தும் போது
நித்தியத்திற்கும் , அநித்தியத்திற்கும்
உள்ள வேறுபாட்டை உணரலாம் !
ஆண்டவர்  ஒருவரே நித்தியம்
மற்றவை அனைத்தும் அநித்தியம்.
என்றும் இருந்து இந்த
உலகத்தில் உள்ள உயிர்களை
காப்பாற்றி வரும் ஆண்டவர் ;
ஆண்டு கொண்டிருப்பவர் ;
வழி நடத்துபவர் ;
கட்டி காப்பாற்றுபவர் ;
உயிர்களை ரட்சிப்பவர் ;
அன்பைப் பொழிபவர் ;
அத்தகைய ,
ஆண்டவரை உணர்ந்து ,
ஆண்டவரை அறிந்து ,
ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ,
ஆண்டவரால் ரட்சிக்கப் படுபவரால்
ஆண்டவரால் வழி நடத்துபவரால் மட்டுமே
இதை உணர்ந்து கொள்ள முடியும் ;
நித்தியத்தின் பொருள் உணர முடியும் ;
ஆண்டவரின் மகிமை உணர முடியும் ;

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அநித்தியமே
மாறக் கூடியது ;
மாற்றத்திற்கு உட்பட்டது ;
மாறும் நிலையை உடையது ;
அழியக் கூடியது ;
அழிவை நோக்கியது ;
அழிவை நோக்கி பயணிக்கக் கூடியது.

வாழ்க்கை என்பது இறப்பை நோக்கிய ஒரு பயணம்.
இதனை தடுப்பவர் , நித்திய வாழ்வைப் பெறுகிறார்
நித்தியமே ஆண்டவர்; என்பதை உணருகிறார் ;
பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைப் பெறுகிறார் ;
பிதாவின் அன்புக்கு பாத்திரமாகிறார் ;
பாpசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறார் ;
பிதாவின் குமாரனுக்குள் உட்பிரவேசிக்கிறார் ;

இந்த உலகத்தில் நமக்கு தேவை என்று
எதை சேமித்து வைக்கிறோமோ?
அது நமக்கு சொந்தமில்லை.
என்னுடைய வீடு என்கிறோம்
இன்று நமதாக இருந்த வீடு , நமது இறப்பிற்கு பிறகு ,
நமது மகளுக்கோ , மகனுக்கோ உரிமையாகிறது .
அவர்களுக்கு பிறகு பேரனுக்கோ ,
பேத்திக்கோ சொந்தமாகிறது .
கடனில் மாட்டிக் கொண்டால்
வேறொருவரிடம் கை மாறுகிறது
பல தரப்பட்ட மனிதர்களிடம் சிக்கிக் கொள்கிறது .
வாங்கிய நிலங்கள் ,
கட்டிய வீடுகள் ,
தேடிய செல்வங்கள் ,
பதுக்கிய சொத்துக்கள் ,
மாட்டிய உடைகள் ,
பூட்டிய அணிகலன்கள் ,
ஆக்கிய வியாபாரங்கள் ,
உருவாக்கிய சேமிப்புகள் ,
எதையும் நம்மால் கொண்டு செல்ல முடியாது .
இறந்த பிறகு எல்லாவற்றையும் கொண்டு செல்ல முடியாது .

பிரிந்து கிடப்பதை ,
குவிந்து கிடப்பதை ,
அடுக்கி கிடப்பதை ,
வரிசையாக கிடப்பதை ,
பரந்து கிடப்பதை ,
ஒன்றாக்கி இணைத்து விட்டால்
ஒன்றுக்குள் புகுத்தி விட்டால்
ஒருமைக்குள் அடக்கிவிட்டால்
ஒன்றை கொண்டு செல்ல முடியும் .
பலவற்றை கொண்டு செல்வதை விட
ஒன்றை கொண்டு செல்ல முடியும்.
ஒன்றை கொண்டு செல்வது எளிது
உலக வாழ்க்கைத் தேவைக்காக செயல்படும்
செயல்களால் விளைந்த பாவங்கள் எல்லாவற்றையும்
வைத்துக் கொண்டு பரலோக ராஜ்யத்திற்குள்
ஒருவனால் பிரவேசிக்க முடியாது.
பரலோக ராஜ்யத்தை கைக்கொள்ள முடியாது.
வாழ்க்கைத் தேவையின் அத்தியாவசியத்தை உணர்ந்து ,
எது வாழ்க்கைத் தேவை என்பதை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவை நமக்குத் தேவை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவை நமது வாழ்க்கைத் தேவையைப்
பூர்த்தி செய்யும் என்பதை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவையை வைத்துக் கொண்டு
நம்மால் வாழ முடியாது .
எந்த வாழ்க்கைத் தேவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது .
என்பதை உணர்ந்து
வாழ்க்கைத் தேவையை முறைப்படுத்தி
வாழ்க்கைத் தேவையை நெறிக்குள் உட்படுத்தி
வாழ்க்கைத் தேவையை ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து
பாவங்களை நீக்கி ,
புண்ணியத்தை விதைத்து ,
புண்ணியத்தை பாய்ச்சி ,
புண்ணியத்தை அறுவடை செய்து ,
புண்ணியம் என்ற ஒன்றை கைக்கொள்ள வேண்டும் .

புண்ணியம் என்ற ஒன்றை பெற்றவனால் மட்டுமே ,
புண்ணியம் என்ற ஒன்றினால் நிரப்பப்பட்டவனால் மட்டுமே ,
பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .
பரலோக ராஜ்யத்தின் நித்தியத்தை
நித்திய பொக்கிஷத்தை அடைய முடியும் .
சேர்த்து வைக்கப்பட்ட செல்வங்கள் என்று
சொல்லப்படக்கூடிய சேர்த்து வைத்த பாவங்கள்
அனைத்தையும் நீக்கி,
புண்ணியம் என்ற ஒன்றைப் பெற்று
புண்ணியம் என்ற ஒன்றைக் கொண்டு
பொக்கிஷங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட
பரலோக ராஜ்யம் என்ற நிலத்தை வாங்குகிறான்.

தான் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று
சொல்லப்படக்கூடிய பாவங்கள் அனைத்தையும் விலக்கி
புண்ணியம் என்ற ஒரே சொத்தாக புண்ணியம்
என்ற ஒரே முத்தாக மாற்றிக் கொள்கிறான்.
புண்ணியம் என்ற ஒரே முத்தை பெற்றுக் கொண்டு
சிறக்கிறான்.

பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
ஒருவனால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.
எனவே பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கி
புண்ணியம் என்ற ஒன்றாக மாற்றி
புண்ணியம் என்ற ஒன்றை மட்டும் பெற்று
புண்ணியம் என்ற ஒரே முத்தாக உருவாக்கி
அதன் பயனாக பரலோகராஜ்யத்தைப்
பெற்று கொள்கிறான்.

வாழ்க்கைத் தேவையின் செயல்களால்
விளைந்தசொத்துக்களை
பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கி
புண்ணியம் என்ற முத்தைப் பெற்றவன்
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க தகுதி
உடையவன்.

பரலோகராஜ்யத்தில் அனைத்தும் உள்ளது
பரலோகராஜ்யம் தன்னுள் அனைத்தையும் கொண்டுள்ளது
பரலோகராஜ்யம் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது
என்பதை உணர்பவனால் மட்டுமே ,
பாவம் நீக்கி புண்ணியம் பெறுபவனால் மட்டுமே ,
பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெற முடியும்.

வலையை கடலிலே விரித்து ,மீனைப் பிடித்து ,
அதையை கரையிலே இழுத்து,
நல்லவை - அல்லவைகளைப் பிரித்து எடுத்து,
தேவையானவைகளை எடுத்துக் கொண்டு,
தேவையற்றவைகளை எறிந்து போடுவார்கள்.
தேவையற்றவைகளை உதறி எறிவார்கள்.
அதைப் போல,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெற்று
தன் அத்தியாவசியத் தேவை ,
அவசியமானத் தேவை ,
விருப்பமானத் தேவை ,
ஆசைத் தேவை ,
ஆகியவற்றை அடைய ,
புண்ணியம் என்ற திறவுகோலினால்
பரலோகராஜ்யத்திற்குள் உட்பிரவேசித்து
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெறுவார்கள் .

பரலோகராஜ்யத்தின் மகிமை உணர்ந்தவர்கள்
பரலோகராஜ்யத்திற்குள் உட்பிரவேசிக்கும்
வழியை உணர்ந்தவர்கள் .

அழியக்கூடிய
அநித்திய வாழ்வில்
கவனம் செலுத்தாமல்
நித்தியத்தின் பொருள் உணர்ந்து
நித்திய வாழ்வைத் தேட வேண்டும்
என்கிறார்  இயேசு .



ஒவையார்:

“”பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவுஇன்றி
ஏற்ற கருமம் செயல்””
                                      ------ஒவையார்----மூதுரை----

துரோகம் என்பது வேறு
விரோதம் என்பது வேறு

துரோகம் செய்பவன் துரோகி
விரோதம் பாராட்டுபவன் விரோதி

விரோதியால் ஆபத்து நேராக உண்டு
துரோகியால் ஆபத்து மறைமுகமாக உண்டு

விரோதியின் ஆபத்தை சமாளிக்கலாம்
துரோகியின் ஆபத்தை சமாளிப்பது கடினம்

கொள்கை மாறுபட்டால் பிரிந்து சென்று நேராக
எதிர்ப்பான் விரோதி
மாறுபட்டாலும் பிரிந்து செல்லாமல்
குழி பறிப்பான் துரோகி

விரோதி நேராக நின்று எதிர்ப்பான்
துரோகி வேறு ஒருவனுடன் சேர்ந்து
மறைமுகமாக எதிர்ப்பான்

வளர்த்தவனை எதிர்த்து விட்டுச் செல்வான் விரோதி
வளர்த்தவனை அழித்து விடத் துடிப்பான் துரோகி

நண்பர்கள் விரோதியாகலாம்
விரோதிகள் நண்பராகலாம்

நண்பன் துரோகியாகலாம்
துரோகி நண்பனாக முடியாது

விரோதி நண்பன் ஆனால் உயிரை கொடுப்பான்
நண்பன் துரோகியானால் உயிரை எடுப்பான்

விரோதியிடம் நாம் கவனமாக இருப்பதை விட
துரோகியிடம் கவனமாக இருக்க வேண்டும்

இரண்டு வேறுபட்ட நிலைகளை , முரண்பாடுகளை
ஓன்றுடன் ஒன்று ஒப்பிட்டு
உபயோகப் படுத்துபவன் மனிதன்.
ஒப்பீடு மனிதனால் உபயோகப்படுத்தப்படும்
அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.

ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டே
பழக்கப் பட்டவன் மனிதன்.
ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவான்;
உலகத்தில் உள்ளவற்றை ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவான்;
ஒன்று உயர்ந்தது ; மற்றொன்று தாழ்ந்தது ;
என்று வேறு படுத்துவான்.
ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று கணிப்பான்.

ஒன்றை , ஒரு விளக்கத்தை
தெளிவுபடுத்துவதாக இருந்தால்,
ஒப்பீடு உபயோகப்படும்.

உலகத்தில் உள்ள பொருட்களை
ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்த முடியாது
தொடர்பு காண முடியாது.
இறைவன் உலகில் உள்ள பொருட்களை
ஒன்றை மாதிரி  மற்றொன்றை படைக்கவே இல்லை.
உலகில் உள்ள பொருட்களில் ஒன்றைப் போல
ஒன்று இருக்கவே இருக்காது.
ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மையை
தன்னுள் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும்
ஒரு சிறப்பை ,
ஒரு பண்பை ,
ஒரு தனித்துவத்தை ,
ஒரு குணத்தை ,
ஒரு நிறத்தை ,
ஒரு வடிவத்தை ,
ஒரு மணத்தை ,
ஒரு சுவையை ,
தன்னுள் கொண்டிருக்கும்
உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள
தனித்தன்மையை உணர்ந்து கொள்ளும் போது
மனிதன் பிரபஞ்ச ரகசியங்களையும்
நித்திய - அநித்திய
வேறுபாடுகளைப் புரிந்து கொள்கிறான்


மாளிகையில் வசந்தத்தை அனுபவிக்கும் மனிதனுக்கும்
வீதியோரத்தில் முடங்கிக் கிடக்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு.

செல்வம் உடையவனுக்கும்
செல்வம் இல்லாதவனுக்கும்,
படித்தவனுக்கும்
படிக்காதவனுக்கும்,
அறிவு உள்ளவனுக்கும்
அறிவு இல்லாதவனுக்கும்,
உயர்வான நிலையை அடைந்தவனுக்கும்
உயர்வான நிலையை அடையாதவனுக்கும்,
வெற்றியை கைக் கொண்டவனுக்கும்
வெற்றியை கைக் கொள்ளாதவனுக்கும்,
மேன்மை அடைந்தவனுக்கும்
மேன்மை அடையாதவனுக்கும்,
ஏற்றத்தைப் பெற்றவனுக்கும்
ஏற்றத்தைப் பெறாதவனுக்கும் வேறுபாடு உண்டு.

பிறவிப் பெருங்கடலை அறுத்து
பிறப்பு - இறப்பு சுழற்சியை எரித்து
எல்லாம் வல்ல இறைவனுடன்
இணைய வேண்டுமானால்
கர்ம வினைகளை முற்றிலுமாக களைய வேண்டும் ;
கர்ம வினைகளை கழற்ற வேண்டும் ;
கர்ம வினைகளை கழிக்க வேண்டும் ;
கர்ம வினைகளை எரிக்க வேண்டும் ;
கர்ம வினைகளை தொலைக்க வேண்டும் ;
கர்ம வினைகளை உதற வேண்டும் ;
இதை உணர்ந்து கொள்பவரால் மட்டுமே
ஓப்பீடைப் பற்றியும் ,
நித்தியம் - அநித்தியம் பற்றியும் ,
கர்ம வினை பற்றியும் ,
பாவ - புண்ணியம் பற்றியும் ,
ஒற்றுமை - வேற்றுமை பற்றியும் ,
அறிந்து கொள்ள முடியும்.

கர்ம வினையே ஒருவனை
பிறப்பு - இறப்பு சூழ்நிலையில் சிக்க வைக்கிறது ;
பிறவிப் பெருங்கடலில் நீந்த வைக்கிறது ;
இன்பத்தின் ஏற்றத்திலும்
துன்பத்தின் சகதியிலும் விழ வைக்கிறது ;
கர்ம வினைகளை
அழிப்பவரால் மட்டுமே
இறைவனுடன் இணைய முடியும்.

பாவ - புண்ணியத்தில்
பாவத்தை முற்றிலுமாக களைந்து
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
புண்ணியத்தையும் களைந்த பிறகே
பிறப்பு - இறப்பை நிறுத்த முடியும்
புண்ணியத்தை மட்டும் கொண்டால்
அதற்கான சிறப்பான ஒரு பிறவி உண்டு .  
ஆகவே கர்ம வினைகளை முற்றிலுமாக
களைந்தால் மட்டுமே
பிறப்பு - இறப்பை அறுக்க முடியும்.
இறைவனுடன் இணைய முடியும்.

அரிசி தான் அரிசியாக முளைக்கிறது
வெறும் அரிசி போட்டால் அரிசி முளைக்காது
அரிசியுடன்  உமி சேர்த்தால் மட்டுமே அரிசி முளைக்கும்.
அரிசியிலிருந்து உமியை பிரித்தால் அரிசி முளைக்காது.
ஆன்மாவில் கர்மவினை இருக்கும் வரை தான்
ஆன்மாவுக்கு பிறப்பு - இறப்பு சுழற்சி உண்டு.
ஆன்மாவில் கர்ம வினைப் பதிவுகள் இல்லையெனில்
ஆன்மாவுக்கு பிறப்பு - இறப்பு சுழற்சி கிடையாது.
அரிசியை விட்டு உமியைப் பிரித்தால்
அரிசி எவ்வாறு முளைக்காதோ?
அதைப்போல ,
ஆன்மாவை விட்டு கர்மவினையைப் பிரித்தால்
ஆன்மாவிற்கு பிறவி கிடையாது.

பிறவிப் பெருங்கடலில் நீந்தாமல் இருக்க
கர்ம வினைகளை முற்றிலுமாக கழிக்க
அளந்து பார்க்காமல்
அளவுக்குள் கொண்டு வராமல்
வரையறைக்குள் நிறுத்தாமல்
எல்லைக்;குள் மாட்டிக் கொள்ளாமல்
எவ்வளவு நன்மை பயக்கும் செயல்களை
எவ்வளவு நன்மைக்கு உகந்த செயல்களை
எவ்வளவு நல்லவைகளை தன்னுள் கொண்ட செயல்களை 
செய்ய முடியுமோ ?
அவ்வளவு செயல்களைச் செய்து
பாவத்தின் பலனைக் கழித்து
புண்ணிய பலனைச் சேர்ப்பதற்குரிய
செயல்களை வகுக்க வேண்டும்.
செய்ய வேண்டும்.

கொண்டபேர்  என்றால் கர்மவினைகளை தன்னுள்
கொண்டவர்கள் என்று பொருள்.

ஆற்றல் உடையார்க்கு என்றால்
தன்னால் முடிந்த அளவிற்கு என்று பொருள்.

கொண்டபேர்  ஆற்றல் உடையார்க்கு என்றால்
கர்மவினைகளை தன்னுள் கொண்டவர்கள்
கர்மவினையால் பாதிக்கப் பட்டு
எவ்வளவு தான்  துன்புற்றாலும்
அந்த துன்பத்தின் இடையிலும்
தன் ஆற்றலுக்கு முடிந்த அளவில்
நல்ல காரியங்களை அதிக அளவில் செய்ய வேண்டும்
நன்மைகள் அதிகம் செய்வதால்
கர்ம வினையின் தாக்கம் குறையும்
நன்மைகள் செய்யாவிட்டால் கர்ம வினையின்
தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியாது .


நல்லவைகளை தொடர்ந்து செய்து
கர்ம வினைகளைக் கழித்து
பிறப்பு - இறப்பு அறுத்து
இறைவனுடன் ஒன்றாக இணைந்து
தான் அவனாக மாற வேண்டும்
நித்திய வாழ்வைப் பெற வேண்டும்
என்கிறார்  ஔவையார் .



இயேசு கிறிஸ்து – ஔவையார்:

இயேசு ,
பாவத்தை நீக்கி
புண்ணியத்தை பெற்றவனால் மட்டுமே
பரலோக ராஜ்யத்தை கைக்கொள்ள முடியும்
என்கிறார்.

அவ்வாறே ,
ஔவையாரும் ,
கர்ம வினைகளைக் கழித்தவரால் மட்டுமே
இறைவனுடன் சேர முடியும் என்கிறார்.


      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுநாற்பத்திநான்கு ந்தான்முற்றே""