July 20, 2022

ஜபம்-பதிவு-813 (சாவேயில்லாத சிகண்டி-147)

 ஜபம்-பதிவு-813

(சாவேயில்லாத

சிகண்டி-147)

 

சிகண்டினி :

தெரிந்தவர்களுக்கு சொல்ல

வேண்டிய அவசியம் இல்லை

தெரியாதவர்களுக்கு

ரகசியமாகத் தான்

பதில் சொல்ல வேண்டும்

 

அறிந்து கொள்ள

வேண்டும் என்ற ஆவலில்

யாரேனும் என்னை

ரகசியமாக அணுகும் போது

அந்த கேள்விக்கான

விடைகளை

நானே அவர்களுக்கு

அளிக்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

உனக்கு பேசக்கற்றுக்

கொடுக்க வேண்டிய

அவசியம் இல்லை

 

பேச்சிலும் சரி

வாள் வீச்சிலும் சரி

வில் வித்தையிலும் சரி

உன்னை வெல்வதற்கு

இந்த உலகத்தில்

யாரும் இல்லை

என்பதை அடிக்கடி

நிரூபிக்கிறாய்

 

சரி

இதற்காவது

பதில் சொல்

உனக்கு அடிக்கடி

தெரியும் காட்சிகள்

என்னவென்று தெரிந்ததா

தெரிந்தால் சொல்

 

சிகண்டினி :

தெரிந்தது

 

போன ஜென்மத்தில் நான்

அம்பையாக பிறந்தேன்

என்பதையும்

 

பீஷ்மரால் வாழ்க்கையை

இழந்தவள் என்பதையும்

 

பீஷ்மரைக்

கொல்வதற்காகவே

சிகண்டினியாக இந்த

ஜென்மத்தில் பிறப்பெடுத்து

சிகண்டியாக மாறி

பீஷ்மரைக் கொல்லப்

போகிறேன் என்பதையும்

தெரிந்து கொண்டேன்

 

சிகண்டினியிலிருந்து

சிகண்டியாக நான்

மறுபிறப்பு எடுக்கும் போது

நான் எதற்காக பிறந்தேன்

என்பதைத்

தெரிந்து கொண்டேன்

என்னுடைய பிறப்பின்

ரகசியத்தைத்

தெரிந்து கொண்டேன்

பீஷ்மரைக்

கொல்வதற்காகவே

பிறந்திருக்கிறேன்

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

ஸ்தூணாகர்ணன் :

விரும்பும் போது

தான் மரணம் என்ற

வரத்தைப் பெற்ற

பீஷ்மனை

உன்னால் கொல்ல முடியுமா

 

சிகண்டினி :

விரும்பும் போது தான்

மரணம் என்ற

வரத்தைப் பெற்ற

பீஷ்மனை

பீஷ்மனைக் கொல்வேன்

என்று சிவனிடம்

வரத்தைப் பெற்ற

என்னைத் தவிர வேறு

யாரால் பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

நான் தான்

பீஷ்மனைக் கொல்வேன்

 

இந்த உலகத்தில்

என்னால் மட்டுமே

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

வேறு யாராலும்

பீஷ்மனைக்

கொல்ல முடியாது

 

ஸ்தூணாகர்ணன் :

அப்படி என்றால்

 

சிகண்டினி :

பீஷ்மனைக்

கொல்வதற்காக நான்

கிளம்ப வேண்டும்

என்று சொல்ல வருகிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

இப்போது எங்கே செல்கிறாய்

 

சிகண்டினி :

என்னை பெற்றவர்களை

பார்க்க செல்கிறேன்

 

என்னுடைய பிறப்பின்

ரகசியத்தை

நான் தெரிந்து கொண்டேன்

என்பதை அவர்களுக்குத்

தெரிவிக்க செல்கிறேன்

 

பீஷ்மனைக் கொல்வதற்காக

நான் செல்ல வேண்டும்

என்ற செய்தியை

அவர்களுக்கு

சொல்ல செல்கிறேன்

 

என்னுடைய

கடமையை செயல்படுத்த

நான் செல்ல வேண்டும்

என்பதை

சொல்ல செல்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

சிகண்டினி

நீ உடலால் மட்டுமல்ல

உள்ளத்தாலும்

உணர்வாலும்

மனத்தாலும்

நீ சிகண்டி என்ற

ஆணாக மாறி விட்டாய்

பெண்ணிலிருந்து நீ

ஆணாக மாறி விட்டாய்

 

இக்கணம் முதல்

நீ சிகண்டி என்ற ஆணாக

பிறப்பெடுத்து விட்டாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

No comments:

Post a Comment