July 20, 2022

ஜபம்-பதிவு-807 (சாவேயில்லாத சிகண்டி-141)

 ஜபம்-பதிவு-807

(சாவேயில்லாத

சிகண்டி-141)

 

ஸ்தூணாகர்ணன் :

இல்லை நாம்

கற்றுக் கொள்ளும் கல்வி

பெறும் அனுபவம்

ஆகிய இரண்டின் மூலம்

அறியாமைத் திரை விலகும்


சிகண்டினி :

ஆனால்

சிலரை

அறிவுள்ளவர்கள் என்றும்

சிலரை

அறிவற்றவர்கள் என்றும்

சொல்கிறோமே

 

ஸ்தூணாகர்ணன் :

கற்றுக் கொள்ளும் கல்வி

பெறும் அனுபவம்

அனைவருக்கும் ஒரே

மாதிரியாக இருக்காது

மனிதருக்கு

மனிதர் வேறுபடும்

அதனால் தான்

வெளிப்படும் அறிவும்

மனிதருக்கு

மனிதர் வேறுபடுறது

 

வெளிப்படும் அறிவின்

தன்மையைப் பொறுத்து

மனிதர்களில் சிலரை

அறிவுள்ளவர்கள் என்றும்

அறிவற்றவர்கள் என்றும்

சொல்கிறோம்

 

சிகண்டினி :

கடந்த சில

மாதங்களாகவே

ஒரே நிகழ்வுகளைக் கொண்ட

சில காட்சிகள்

எனக்கு அடிக்கடி வந்து

போய்க் கொண்டே

இருக்கிறது

 

உறங்கும் போதும் சரி

விழித்திருக்கும்

போதும் சரி

கடவுளை வணங்கும்

போதும் சரி

தவம் செய்யும்

போதும் சரி

அந்த காட்சிகள் எனக்கு

அடிக்கடி தெரிந்து

கொண்டே இருக்கிறது

 

அந்தக் காட்சிகளை

முதலில் நான்

சாதாரணமாகத் தான்

எடுத்துக் கொண்டேன்

ஆனால்

நாட்கள் ஓட ஓடத்தான்

எனக்குத் தெரிந்தது

அந்தக் காட்சிகள்

சாதாரணமான காட்சிகள்

இல்லை என்று

 

ஏதோ ஒன்றை எனக்கு

சொல்ல வரும்

காட்சிகள் என்று

 

அந்தக் காட்சிகள்

என்ன சொல்ல வருகிறது

என்பதைக் கண்டுபிடிக்க

நான் எவ்வளவோ

முயற்சிகள் செய்தேன்

என்னால் கண்டுபிடிக்கவே

முடியவில்லை

 

ஸ்தூணாகர்ணன் :

அந்தக் காட்சிகள் உன்னைப்

பற்றியதாகவும் இருக்கலாம்

உன்னுடன்

சம்பந்தப்பட்டதாகவும்

இருக்கலாம்

 

சிகண்டினி :

அதைத் தான் என்னால்

கண்டுபிடிக்க

முடியவில்லையே

 

அந்தக் காட்சிகள்

எனக்கு என்ன சொல்ல

வருகிறது என்று

தெரியவில்லையே

 

அந்தக் காட்சிகள்

தெளிவில்லாமல் பார்க்க

முடியாத வகையில்

இருப்பதாலும்

முழுமையான நிகழ்வுகளாக

இல்லாமல் இருப்பதாலும்

வார்த்தைகள் சரியாக

கேட்காமல் இருப்பதாலும்

தான் அந்த காட்சிகள்

என்ன சொல்ல வருகிறது

என்பதை என்னால்

கண்டு பிடிக்க

முடியவில்லை

 

எனக்குள் என்ன தான்

நடந்து கொண்டிருக்கிறது

 

எனக்குள் எழுகின்ற

காட்சியை

மறைத்து வைத்திருக்கும்

திரை எது

 

ஸ்தூணாகர்ணன் :

உனக்குள் எழுகின்ற

காட்சியை கர்மா

என்ற திரை மறைத்து

வைத்திருக்கிறது

 

சிகண்டினி :

கர்மா என்ற திரை

எதனால் விலகும்

 

எப்போது விலகும்

 

அந்த காட்சி எனக்கு

எப்போது வெளிப்படும்

 

அந்த காட்சியை எப்போது

நான் தெளிவாகப்

பார்க்க முடியும்

புரிந்து கொள்ள முடியும்

 

ஸ்தூணாகர்ணன் :

உனக்குள் எழுகின்ற

காட்சியை

மறைத்து வைத்திருக்கும்

கர்மா என்ற திரை

காலத்தின் மூலம்

விலகும் போது

உனக்குள் எழுகின்ற

காட்சி வெளிப்படும்

 

அப்போது அந்த

காட்சிகள் உனக்குத்

தெளிவதாகத் தெரியும்

 

அப்போது அந்த

காட்சிகள் உனக்கு

எதற்காக ஏற்பட்டது

என்பதைப் புரிந்து

கொள்வாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment