July 20, 2022

ஜபம்-பதிவு-811 (சாவேயில்லாத சிகண்டி-145)

 ஜபம்-பதிவு-811

(சாவேயில்லாத

சிகண்டி-145)

 

நீங்கள் செய்யப்போகும்

உதவியை மறக்காமல்

நன்றியுடனும் இருக்கலாம்

 

உங்களை தெய்வமாக

நினைத்தும் வழிபடலாம்

 

உங்களுக்காக எதையும்

செய்யக் கூடியவனாகவும்

இருக்கலாம்

 

உங்களுக்காக உயிரையும்

கொடுக்கக்கூடிய

நிலையிலும் இருக்கலாம்

 

இரண்டில் எது

வேண்டுமானாலும் நடக்கலாம்

 

நீங்கள் செய்யப் போகும்

உதவியை மறந்து

நான் நன்றி

மறந்தும் இருக்கலாம்

 

அல்லது

 

நன்றி மறக்காமலும்

இருக்கலாம்

 

எதுவும் என்

கையில் இல்லை

விதியின் கைகளில்

இருக்கிறது

 

அதனால் தான்

என்னால் எந்த ஒரு

வாக்குறுதியையும்

இப்போது என்னால்

கொடுக்க முடியவில்லை

 

அனைத்தையும் காலத்தின்

கைகளில்

கொடுத்து விட்டேன்

 

என்னை உங்களுடைய

பிள்ளையாக ஏற்றுக் கொண்டு

பெண்ணிலிருந்து ஆணாக

மாறுவதற்குத் தேவையான

உதவிகளைச் செய்யுங்கள்

 

காலம் என்ன நினைக்கிறது

என்று பார்ப்போம்

 

ஸ்தூணாகர்ணன் :

உதவி பெறுவதற்காக

உதவி செய்பவர்களின்

காலைப்

பிடிப்பவர்கள் மத்தியில்

 

உண்மையை பேசிய உன்னை

எனக்கு ரொம்ப

பிடித்து இருக்கிறது

 

நீ என்றும் என்னிடம்

உண்மையாகத்

தான் இருப்பாய்

 

உண்மையைப் பேசுகிறவர்கள்

எத்தகைய

சோதனைகள் வந்தாலும்

உண்மையாகத் தான்

இருப்பார்கள்

 

உன்னை என்னுடைய

பிள்ளையாக ஏற்றுக் கொள்ள

முடிவு எடுத்து விட்டேன்

 

உன்னை என்னுடைய

பிள்ளையாக ஏற்றுக் கொள்வதில்

எனக்கு மகிழ்ச்சியே

 

இக்கணம் முதல் நீ

என்னுடைய பிள்ளை

 

நீ பெண்ணிலிருந்து

ஆணாக மாறுவதற்கு

தேவையான

அனைத்து வைத்திய

முறைகளையும்

உனக்கு அளிக்கிறேன்

 

சிகண்டினி :

இதற்கான வைத்திய

முறைகள் நம்

நாட்டில் இருக்கிறதா

 

ஸ்தூணாகர்ணன் :

நமது பாரத

நாட்டில் தான்

அனைத்து விதமான

வைத்திய முறைகளும்

உள்ளன

 

உலகத்திலேயே நம்

பாரதநாடு தான்

வைத்திய முறையில்

உயர்ந்த நிலையில்

இருக்கிறது

 

நம்முடைய பாரத

நாட்டில் தான்

அனைத்து வியாதிகளுக்கும்

மருந்து இருக்கிறது

உலக அளவில்

தீர்க்க முடியாத

வியாதிகள் என்று

சொல்லப்படும்

வியாதிகளுக்கும்

மருந்து இருக்கிறது

 

சிக்கலான அறுவை

சிகிச்சை முறைகளும்

உலகத்திலேயே செய்ய

முடியாது என்று

சொல்லப்பட்டுக்

கொண்டு இருக்கும்

அறுவை சிகிச்சைகளும்

நம்முடைய

பாரத நாட்டில்

செய்யப்பட்டு வருகிறது

 

நுணுக்கமான

வைத்திய முறைகளை

அறிந்து வைத்திருக்கும்

வைத்தியர்களும்

 

தீர்க்கவே முடியாத

வியாதிகளுக்கு

மருந்துகளை தெரிந்து

வைத்தியம் செய்து

கொண்டிருக்கும்

வைத்தியர்களும்

 

அறுவை சிகிச்சை

செய்தே

ஆக வேண்டும் என்று

சொல்லப்பட்ட

வியாதிகளுக்கு

அறுவை சிகிச்சை

இல்லாமல் மருந்துகளின்

மூலமே குணப்படுத்தும்

முறையினைத்

தெரிந்து வைத்திருக்கும்

வைத்தியர்களும்

 

அரிய வகை வைத்திய

முறைகளைத் தெரிந்து

வைத்திருக்கும்

வைத்தியர்களும்

 

நம் பாரத நாட்டில்

உள்ளனர்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment