November 06, 2022

ஜபம்-பதிவு-885 மரணமற்ற அஸ்வத்தாமன்-17 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-885

மரணமற்ற

அஸ்வத்தாமன்-17

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அக்குழந்தைகள்

தன்னுடைய

குழந்தைகள்

என்பதை

பின்னால்

தெரிந்து கொண்ட

சரத்வான்

அரண்மனைக்கு

வந்து தனது

அடையாளத்தை

வெளிப்படுத்தி

அந்தக்

குழந்தைகளுக்கு

வில்வித்தை

வேதங்கள்

சாஸ்திரங்கள்

மற்றும்

பிற உலக

ரகசியங்களை

கற்றுக்

கொடுக்கிறான்

 

இவ்வாறு பல

கலைகளிலும்

கற்றுத்

தேர்ந்திருக்கும்

அந்த இரட்டைக்

குழந்தைகளில்

ஒருவர் என்னுடைய

அண்ணன்

பெயர் கிருபன்

இன்னொருவர் அது

நான் தான்

என்னுடைய

பெயர் கிருபி

 

அதுமட்டுமல்ல

என்னுடைய

அண்ணன் ஒரு

சிரஞ்சீவி

அவருக்கு

சாவே

கிடையாது

 

இவ்வாறு

விசித்திரமாகப்

பிறந்தவர்கள்

நாங்கள்

மற்றவர்களிடமிருந்து

வேறுபட்டவர்கள்

நாங்கள்

தனித்திறமையைப்

பெற்றவர்கள்

நாங்கள்

யாருடனும்

ஒப்பிட

முடியாதவர்கள்

நாங்கள்

 

இத்தகைய

சிறப்புகளைப்

பெற்ற

எங்களைப்

பற்றிப்

புரிந்து

கொண்டிருப்பீர்கள்

எங்களைப் பற்றித்

தெரிந்து

கொண்டிருப்பீர்கள்

எங்களுடைய

தனித்தன்மையைப்

பற்றி அறிந்து

கொண்டிருப்பீர்கள்

 

இப்போது

என்னைப் பார்த்து

ஒருவித பய

உணர்ச்சி

உங்களுக்கு

ஏற்படுகிறது

அல்லவா

 

இனி என் வழியில்

குறுக்கிட மாட்டீர்கள்

அல்லவா

விலகிச் சென்று

விடுவீர்கள்

அல்லவா

 

துரோணர் :

உங்களைப் பார்த்து

நான் ஏன் பயப்பட

வேண்டும்

உங்களைப் பார்த்து

நான் ஏன் விலகிச்

செல்ல வேண்டும்

இன்னும் நான்

உங்களை

காதலித்துக்

கொண்டு தான்

இருக்கிறேன்

உங்களைக்

காதலித்துக்

கொண்டு தான்

இருப்பேன்

உங்களைத்

தொடர்ந்து

கொண்டு தான்

இருப்பேன்

 

கிருபி :

எதைச் சொன்னாலும்

பயப்பட மாட்டேன்

என்கிறீர்கள்

யார் நீங்கள்

 

துரோணர் :

இப்போதாவது

என்னை யார்

என்று

உங்களுக்குக்

கேட்கத்

தோன்றியதே

 

துரோணர் :

என்னுடைய

பெயர் மட்டும்

தெரிந்தால்

போதுமா

அல்லது

என்னைப் பற்றி

முழுமையாக

தெரிந்து கொள்ள

வேண்டுமா

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment