November 06, 2022

ஜபம்-பதிவு-892 மரணமற்ற அஸ்வத்தாமன்-24 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-892

மரணமற்ற

அஸ்வத்தாமன்-24

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

இத்தகைய

சிறப்பு மிக்க

வார்த்தையில்

உள்ள

உயிரோட்டத்தைத்

தெள்ளத் தெளிவாக

அறிந்தவர் நீங்கள்

அதனால் தான்

கடவுள் இதுவரை

யாருக்கும்

கொடுக்காத

சாகாவரம் என்ற

வரத்தை

யாருக்கும்

கொடுக்கக் கூடாத

சாகாவரம் என்ற

வரத்தை

கடவுளால்

கூட மறுக்க

முடியாது

கொடுத்தே ஆக

வேண்டும்

என்ற வகையில்

வார்த்தைகளைப்

பயன்படுத்தி

பிறக்கப் போகும்

உங்கள் மகனுக்கு

சாகாவரத்தை

மறைமுகமாகக்

கேட்டுள்ளீர்கள்

 

உங்கள் மகனுக்கு

சாகாவரம்

வேண்டும்

என்ற வரத்தை

கடவுளிடம்

நேரடியாகக்

கேட்டால்

கடவுள் தரமாட்டார்

என்ற

காரணத்தினால்

மனித குலத்தின்

கடைசி மனிதன்

இறந்த பிறகு

இறக்கும் மகன்

வேண்டும் என்று

நீங்கள்

கேட்டதினால்

உங்களுக்குப்

பிறக்கப்

போகும்

மகனுக்கு

சாகாவரத்தை

மறைமுகமாகக்

கேட்டுள்ளீர்கள்

 

வார்த்தைகளை

எப்படி பயன்படுத்த

வேண்டும் என்பது

உங்களுக்கு

தெள்ளத்

தெளிவாகத்

தெரிந்திருக்கிறது

 

துரோணர் :

அப்படி என்றால்

நான் கேட்ட

வரம்

 

சிவன் :

நான் கொடுப்பேனா

என்ற சந்தேகம்

ஏற்பட்டு விட்டதா

 

துரோணர் :

ஆமாம்

 

சிவன் :

கடவுளின் மேல்

சந்தேகமா

 

துரோணர் :

இல்லை

நான் கேட்ட

வரத்தின் மேல்

தான் சந்தேகம்

 

சிவன் :

நீங்கள் கேட்ட

வரம் அப்படி

 

உங்களுக்குப்

பிறக்கப் போகும்

மகனுக்கு

சாகாவரத்தைக்

கூட கொடுத்து

விடலாம்

ஆனால்

சிவ அவதாரம்

எடுக்க வேண்டும்

என்று நீங்கள்

கேட்ட வரத்தைப்

பற்றித் தான்

நான் யோசித்துக்

கொண்டிருக்கிறேன்

 

அவதாரத்தைப்

பற்றித் தெரியாமல்

கேட்டிருக்கிறீர்கள்

 

அவதாரத்தைப்

பற்றித் தெரிந்து

இருந்தால்

இவ்வாறு

கேட்டு இருக்க

மாட்டீர்கள்

 

எந்த அவதாரத்தை

எடுத்துக்

கொண்டாலும்

அந்த

அவதாரங்கள்

காரணம் இல்லாமல்

இந்த உலகத்தில்

தோன்றுவதே

இல்லை

 

அதர்மம்

தழைத்தோங்கும்

போது

தர்மத்தை நிலை

நாட்டுவதற்காக

பாதிக்கப்பட்டவர்களின்

வேண்டுகோளுக்கிணங்க

கடவுளால்

இந்த மண்ணில்

எடுக்கப்படுவது தான்

அவதாரங்கள்

 

இந்த உலகத்தில்

அதர்மம் எதுவும்

தற்போது

நடக்கவில்லை

அதர்மம்

நடப்பதற்கான

சூழ்நிலை எதுவும்

தற்போது

நிலவவில்லை

அப்படி இருக்கும்

போது நான் ஏன்

சிவ அவதாரம்

எடுக்க வேண்டும்

என்று யோசிக்க

வேண்டிய

கட்டாயத்திற்கு

என்னைத்

தள்ளி விட்டாய்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment