November 06, 2022

ஜபம்-பதிவு-887 மரணமற்ற அஸ்வத்தாமன்-19 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-887

மரணமற்ற

அஸ்வத்தாமன்-19

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

நீங்கள் பேசியதை

என் அண்ணனிடம்

சொன்னால்

என்ன நடக்கும்

தெரியுமா

 

துரோணர் :

நம் இருவருக்கும்

திருமணம் நடக்கும்

 

கிருபி :

என் அண்ணனிடன்

சென்று சொல்கிறேன்

 

துரோணர் :

என்ன சொல்லப்

போகிறீர்கள்

 

கிருபி :

நம்முடைய

ஆசிரமத்தின்

எல்லைக்குள்

அமர்ந்திருக்கும்

துரோணர் என்ற

பெயர் கொண்டவர்

என்னை

காதலிப்பதாகச்

சொல்லிக் கொண்டு

புலம்பிக் கொண்டு

இருக்கிறார் என்று

சொல்கிறேன்

 

துரோணர் :

நீங்கள் சென்று

உங்கள் அண்ணன்

கிருபரை

சந்தித்து

சொல்வதற்குள்

இந்நேரம் ஒருவர்

கிருபரிடம் சென்று

என்னைப் பற்றி

உங்கள்

அண்ணனிடம்

சொல்லி

இருப்பார்

 

கிருபி :

யார் அவர்

 

துரோணர் :

அக்னிவேஸ்யர்

ஆசிரமத்தில் வசிக்கும்

ஆசிரமவாசி ஒருவர்

 

கிருபி :

அக்னிவேஸ்யருக்கும்

உங்களுக்கும்

என்ன தொடர்பு

 

துரோணர் :

அக்னிவேஸ்யர்

என்னுடைய குரு

நான்

அவருடைய சீடன்

 

என்னுடைய குரு

அக்னிவேஸ்யர்

உங்கள்

அண்ணனை

சந்திக்கச் சொல்லி

என்னை அனுப்பி

இருக்கிறார்

 

நானும் உங்கள்

அண்ணனை

சந்திப்பதற்காகத்

தான் வந்தேன்

ஆனால் அதற்குள்

உங்களைச்

சந்தித்து விட்டேன்

 

நான் தங்கள்

அண்ணனை

சந்திக்க

வந்திருப்பதை

அக்னிவேஸ்யர்

ஆசிரமத்தில்

இருக்கும்

ஆசிரமவாசி

இந்நேரம் உங்கள்

அண்ணனிடம்

சொல்லி இருப்பார்

 

விஷயத்தைக்

கேள்விபட்டு

உங்கள்

அண்ணன்

என்னைத்

தேடி

வருவார்

 

நீங்கள் உங்கள்

அண்ணனை

தேடிச் செல்வதற்குள்

உங்கள் அண்ணன்

என்னைத் தேடி

வந்து கொண்டிருப்பார்

 

கிருபி :

உங்களை என்னால்

புரிந்து கொள்ளவே

முடியவில்லை

 

உங்களைப்

புரிந்து கொள்ள

எவ்வளவோ

முயற்சி செய்தேன்

முடியவில்லை

 

அற்புதமான

அறிவு  

உங்களிடம்

இருக்கிறது

 

யாரிடமும் இல்லாத

திறமை

உங்களிடம் இருக்கிறது

 

யாராக

இருந்தாலும்

மயக்கி விடும்

பேச்சுத் திறமை

உங்களிடம் இருக்கிறது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

 

 

 

 

No comments:

Post a Comment