November 06, 2022

ஜபம்-பதிவு-881 மரணமற்ற அஸ்வத்தாமன்-13 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-881

மரணமற்ற

அஸ்வத்தாமன்-13

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

காதலையும்

காமத்தையும்

புரிந்து கொள்வது

கடினம்

காதலையும்

காமத்தையும்

புரிந்து

கொள்பவர்கள்

காதலின்

ஆழத்தில்

காமத்தின்

உச்சத்தில்

கடவுளைக்

காணலாம்

 

காதலையும்

காமத்தையும்

தெளிவாகத்

தெரிந்தவர்கள்

தவம் செய்ய

வேண்டியதில்லை

காதலிலும்

காமத்திலும்

கடவுளைக்

கண்டு

விடலாம்

 

காதலின்

ஆழத்திலும்

காமத்தின்

உச்சத்திலும்

காலம்

என்பது

கிடையாது

 

காலம் இல்லாத

நிலையில் தான்

கடவுளைக்

காண முடியும்

காலம் எங்கே

இல்லையோ

அங்கே

கடவுள்

இருப்பார்

 

காலம் இல்லாத

நிலைக்கு

காதலும் காமமும்

நம்மை அழைத்துச்

செல்லும்

அந்த நிலையை

தவற விட்டவர்கள்

கடவுளைக்

காண முடியாது

அந்த நிலையைத்

தவற விடாதவர்கள்

கடவுளைக் கண்டு

விடுகிறார்கள்

 

எத்தனையோ

வருடங்கள்

தவம் செய்தாலும்

காண முடியாத

கடவுளை

காதலின் ஆழத்திலும்

காமத்தின் உச்சத்திலும்

கண்டு விடலாம்

 

காதல் கொள்பவர்கள்

காதலில் திளைத்து

விடுவதாலும்

காமம் கொள்பவர்கள்

காமத்தில் மூழ்கி

விடுவதாலும்

கடவுளைத்

தவற விட்டு

விடுகிறார்கள்

 

கடவுளைக் காண

விரும்புபவர்கள்

இந்த இரண்டுக்குள்

செல்லாத

காரணத்தினால்

தவம் செய்கிறார்கள்

 

அவர்கள்

காதலையும்

காமத்தையும்

தவறாக

நினைக்கிறார்கள்

 

தவறாக

நினைக்கின்ற

காரணத்தினால்

தான் எளிதாக

பார்க்க முடிந்த

கடவுளை

கடினப்பட்டு

தவம் செய்து

பார்க்கிறார்கள்

 

இயல்பாக அடைய

வேண்டிய ஒன்றை

இயல்பாக அடைய

முடியாமல்

எப்படி இயல்பாக

அடைவது

என்பது

தெரியாமல்

கடினப்பட்டு

கஷ்டப்பட்டு

வேதனைப்பட்டு

அடைகிறார்கள்

 

காதல் செய்யும்

போதும்

காமத்தில்

ஈடுபடும்

போதும்

விழிப்பு

நிலையில்

இருந்தால்

மட்டுமே

காதலின்

ஆழத்திலும்

காமத்தின்

உச்சத்திலும்

கடவுளைக்

காண  முடியும்

 

விழிப்பு நிலை

இல்லாத

காரணத்தினால் தான்

காதலின் ஆழத்திலும்

காமத்தின் உச்சத்திலும்

கடவுளை தரிசனம்

செய்ய முடியாமல்

தவற விட்டு

விடுகின்றனர்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment