ஜபம்-பதிவு-1051
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-29
ஒரு இளவரசரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். சிறப்பு வாய்ந்து பாண்டவர்களில் ஒருவரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அனைவரும் வியந்து பார்க்கும் ஒருவரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். இந்த உலகமே போற்றும் ஒரு வீர்ரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அனைவராலும் விரும்பப்படும் ஒருவரைத் தான்
காதலித்து இருந்திருக்கிறேன். அதனால் நான் ஒரு இளவரசியாக இருந்து நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்து இருக்கிறேன்
பெண்ணாக இருந்து ஒரு குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து நான் தவறவும் இல்லை. இளவரசியாக இருந்து நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறவும் இல்லை.
என் விருப்பத்தைச் சொல்லி விட்டேன்
இதற்கு மேல் முடிவு எடுக்க வேண்டியது பாண்டிய நாடும்,
பாண்டிய நாட்டு மக்களும் தான்.
(என்று சொல்லி விட்டு சித்திராங்கதை அமர்ந்து விட்டாள். அரியணையிலிருந்து மன்னர் சித்திரவாகனன் எழுந்து பேசுகிறார்.)
சித்திரவாகனன் : சித்திராங்கதையின் நாவில் தமிழ் மொழி நாட்டியமாடியதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால், காதல் மொழியும் நாட்டியமாடும் என்பதை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். சித்திராங்கதை என் மகள் என்று சொல்லிக் கொள்வதை விட பாண்டிய நாட்டின் இளவரசி என்று சொல்லிக் கொள்வதில் தான் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் மட்டுமல்ல இந்த பாண்டிய நாடே பெருமைப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர் தான் இளவரசி சித்திராங்கதை.
சித்திராங்கதை பெண் என்ற முறையில் தன் மனதில் உள்ளதை சொல்லி விட்டாள். இளவரசி என்ற முறையில் முடிவெடுக்கும் உரிமையை நம்மிடம் ஒப்படைத்து விட்டாள். இதிலிருந்து சித்திராங்கதை பெண்ணாகவும் தன் கடமையிலிருந்து தவறவில்லை, இளவரசியாகவும் தன் கடமையிலிருந்து தவறவில்லை என்பதை நிரூபித்து விட்டாள். அவளை நினைத்து இந்த பாண்டிய நாடே பெருமையடைகிறது.
பெண்கள் பொதுவாகவே தனக்காக வாழ மாட்டார்கள். பிறருக்காகவே வாழ்வார்கள். சில சமயங்களில் தனக்காக வாழ்வது போலத் தோன்றும். ஆனால், அதை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அதுவும் பிறருக்காகத் தான் வாழ்கிறார்கள் என்பது தெரிய வரும்.
நாய் குட்டி போட்டவுடன் அதனுடைய உடம்பில் சக்தி குறைந்து விடும். சக்தி குறைந்ததால் அதன் உடம்பு பலகீனமாகி விடும். உடம்பு பலகீனமாகி விடுவதால் அதனால் நிற்கக் கூட முடியாமல் தடுமாறும். நிற்க முடியாத காரணத்தினால் அதனால் நடக்க முடியாது. அதனுடைய உடம்புக்கு சக்தி வர வேண்டுமானால் அந்த நாய் சாப்பிட வேண்டும்.
உடம்பில் சக்தி இல்லாத காரணத்தினால் அதனால் அலைந்து திரிந்து உணவு தேட முடியாது. நாய் உணவு சாப்பிடவில்லை என்றால் அதனால் உயிரோடு இருக்க முடியாது. இறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால், தாய் நாய் தன் உடம்புக்கு சக்தி வர வேண்டும் என்பதற்காக தன்னுடைய குட்டிகளில் ஒரு குட்டியை சாப்பிட்டு விடும்.
இந்தக் காட்சியை நாம் பார்க்கும் போது தாய் நாய் தன்னுடைய பசியை போக்க வேண்டும் என்பதற்காகவும், தான் சக்தி பெற வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தான் வாழ வேண்டும் என்பதற்காகவும், தான் இறந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தாய் நாய் தான் போட்ட குட்டிகளில் ஒன்றை சாப்பிட்டதாக நாம் எண்ணிக் கொள்வோம். ஆனால் அது தவறானது.
தாய் நாய் வாழ்ந்தால் தான், உயிரோடு இருந்தால் தான், சக்தியுடன் இருந்தால் தான், தன் குட்டிகளைகளுக்கு பால் கொடுக்க முடியும். குட்டிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். தாய் நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கவில்லை என்றால் தாய் நாயினுடைய குட்டிகள் அனைத்தும் இறந்து விடும் என்ற காரணத்திற்காகத் தான் தாய் நாய் தன் குட்டிகளில் ஒன்றை எடுத்து சாப்பிட்டு விடுகிறது.
மேலோட்டாக பார்க்கும் போது தாய் நாய் தான் போட்ட குட்டிகளில் ஒன்றை சாப்பிட்டது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்று எண்ணத் தோன்றும். ஆனால் நன்றாக ஆழ்ந்து பார்த்தால், நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தால் தாய் நாய் தான் போட்ட குட்டிகளில் ஒன்றை சாப்பிட்டது தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுப்பதற்காக என்பதையும், தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இதில், தாய் நாய் தன் உயிரைக் காப்பாற்ற செயல்படவில்லை. தன் குட்டிகளைக் காப்பாற்ற செயல்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தாய் நாய் தனக்காக வாழவில்லை. தன்னுடைய குட்டிகளுக்காக வாழ்ந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அதைப்போலத் தான் பெண்கள் சில சமயங்களில் தங்களுக்காக வாழ்வது போலத் தோன்றும். ஆனால், நன்றாக ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தங்களுக்காக வாழவில்லை, மற்றவர்களுக்காக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
சித்திராங்கதையும் தன் மனதில் உள்ளதைச் சொல்லி விட்டு முடிவை நம்மிடம் ஒப்படைத்ததில் இருந்து அவள் தனக்காக வாழவில்லை. பாண்டிய நாட்டிற்காக வாழ்கிறாள். பாண்டிய நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்து இருக்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதனால் தந்தை என்ற முறையில் நான் எடுக்கும் முடிவும், அரசன் என்ற முறையில் நான் எடுக்கும் முடிவும் சித்திராங்கதைக்கு ஏற்றதாகவும் இருக்கும், பாண்டிய நாட்டிற்கு உகந்ததாகவும் இருக்கும்.
வடநாட்டை தென்னாட்டுடன் இணைக்க முயற்சி செய்து, வட நாட்டிலிருந்து பல மன்னர்கள் தென்னாட்டின் மீது படை எடுத்து வந்திருக்கிறார்கள்.
அவர்களால் தென்னாட்டிற்குள் காலடி கூட எடுத்து வைக்க முடியவில்லை,
அவர்களால் தென்னாட்டிற்குள் நுழையக் கூட முடியவில்லை,
தென்னாட்டை வடநாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் பலிக்கவேயில்லை,
தென்னாட்டை வடநாட்டுடன் இணைக்க வேண்டும் என்று அவர்கள் மேறகொண்ட முயற்சிகள் ஒன்று கூட வெற்றி பெறவே இல்லை,
வடநாடு முழுவதும் பிடித்து அரசாண்ட மிகப்பெரும் வலிமை படைத்த மன்னர்களால் கூட தென்னாட்டை வடநாட்டுடன் இணைக்க முடியவில்லை.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////