March 24, 2020

பரம்பொருள்-பதிவு-160


                ஜபம்-பதிவு-408
              (பரம்பொருள்-160)

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நிம்மதி என்றால்
என்ன என்று தெரிந்து
வைத்திருக்கிறார்களா
என்று தெரியவில்லை
ஆனால்
வருங்கால உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும் நிம்மதியாக
வாழ வேண்டும்
என்றால் நாளை காலை
பாண்டவர்கள் சார்பாக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும் “

“நாளை காலை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கவில்லை என்றால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறவே
முடியாது - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

“நாளைய தினத்தை
தவற விட்டு விட்டால்
நம்மால் களப்பலி
கொடுக்கவே
முடியாது - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

“நாளை காலை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும்
என்றால் இன்று இரவு
அரவானின் ஆசையை
நிறைவேற்ற
வேண்டும் - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

"அரவானுடைய ஆசையை
நிறைவேற்றுவதற்கு
அரவானுக்கு
கண்டிப்பாக-நாம்
ஒரு பெண்ணை
அனுப்பித் தான்
ஆக வேண்டும்
என்ற உண்மையை
நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும் “

“நீ இவைகளை
தெரிந்து வைத்துக்
கொள்ளாத காரணத்தினால்
தான் களப்பலி எவ்வளவு
முக்கியமானது
என்பதையும்-நாளை
களப்பலி கொடுப்பதற்கு
செய்ய வேண்டிய
செயல்கள் எவை
என்பதையும் உணர்ந்து
அதை நீ செய்யவில்லை”

தர்மர் :
“எங்களால் முடிந்த
அளவு முயற்சி
செய்தோம் முடியவில்லை “

கிருஷ்ணன் :
“முடிக்க வேண்டிய
விஷயத்தை
முடிக்கவில்லை - எனில்
எத்தகைய தவறான
விளைவுகள் ஏற்படும் என்று
உனக்கு தெரிந்திருந்தும்
முயற்சி செய்தேன்
என்று நீ சொல்வதை
என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை தர்மா “

தர்மர் :
“முயற்சி செய்த
எங்கள் மேல் எந்தத்
தவறும் இல்லை “

கிருஷ்ணன் :
“தவறு உங்கள் மேல்
இல்லை என்றால் - தவறு
பெண்கள் மேல் தான்
இருக்கிறது என்கிறாயா தர்மா “

தர்மர் :
“நான் அவ்வாறு
சொல்ல வரவில்லை
பெண்கள் மனதை
புரிந்து கொள்ள
முடியவில்லை
என்று தான் நான்
சொல்ல வந்தேன் “

கிருஷ்ணன் :
“ஆமாம் பெண்களின்
மனதை புரிந்து கொள்ளவே
முடியாது தான்”

“வருங்கால உலகத்தில்
பெண்கள் அனைவரும்
மானத்தோடு வாழ
வேண்டும் என்பதற்காக
உலூபி என்ற பெண்
தன்னுடைய மகனையே
களப்பலியாகக் கொடுக்க
சம்மதித்தத்தை
நினைக்கும் போது
பெண்ணினத்தை நினைத்து
பெருமைப் படுவதா
(அல்லது)
பெண்களின் மானத்தை
காப்பாற்றுவதற்காக
களப்பலியாகப்
போகும் அரவானை
எந்த ஒரு பெண்ணும்
திருமணம் செய்ய
சம்மதிக்கவில்லை என்பதை
நினைக்கும் போது
பெண்ணினத்தை நினைத்து
வேதனைப்படுவதா
என்று தெரியவில்லை”

“ஆமாம் பெண்களின்
மனதை புரிந்து கொள்ள
முடியவில்லை தான் “

பீமன்  :
“இப்போது என்ன
செய்வது பரந்தாமா? “

கிருஷ்ணன்  :
“மனிதனால்
ஒரு செயலைச் செய்ய
முடியும் என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் நேரில் வரமாட்டார் ;
மனிதனால் - ஒரு
செயலைச் செய்ய
முடியவில்லை என்ற
நிலை வரும்போது தான்
நேரம் பார்த்து
கடவுள் நேரில் வருவார் “

“ஆமாம் இப்போது
என்னுடைய நேரம்  

“ஆமாம் நான் களத்தில்
இறங்க வேண்டிய நேரம் “

பீமன் :
“என்ன செய்யப்
போகிறீர்கள் பரந்தாமா ?“

கிருஷ்ணன் :
 “-----------------------------“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-03-2020
//////////////////////////////////////////

March 22, 2020

பரம்பொருள்-பதிவு-159


               ஜபம்-பதிவு-407
             (பரம்பொருள்-159)

(பாண்டவர்கள்
அறைக்குள்
நுழைகிறார்
கிருஷ்ணன்)

கிருஷ்ணன் :
“நாளை மறுநாள்
நடக்கவிருக்கும்
அமாவாசையை
நாளைய
தினத்திலேயே
வரும்படி செய்யப்
போகிறேன் - அதனால்
நாளை அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்குத்
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்யுங்கள்
என்று சொன்னேனே
செய்து விட்டீர்களா ?
நான் சொன்ன
ஏற்பாடுகள்
அனைத்தையும்
செய்து முடித்து
விட்டீர்களா?”

பீமன் :
“நாளை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்குத்
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து விட்டோம்
ஆனால்……………..? "

கிருஷ்ணன் :
“என்ன ஆனால் ?”

தர்மர் :
“அரவானைத்
திருமணம் செய்து
கொள்ளக்கூடிய
எந்த பெண்ணும்
கிடைக்கவில்லை”

கிருஷ்ணன் :
“ஏன்
கிடைக்கவில்லை?”

தர்மர் :
“யாரும்
சம்மதிக்கவில்லை”

கிருஷ்ணன் :
“ஏன்
சம்மதிக்கவில்லை?”

தர்மர் :
“நாளை களப்பலியாகப்
போகும் அரவானை
யாரும் திருமணம்
செய்து கொள்ள
விரும்பவில்லை
அதனால்
தான் யாரும்
சம்மதிக்கவில்லை “

கிருஷ்ணன் :
“பொன் தருவதாக
சொன்னீர்களா ? “

தர்மர் :
“சொன்னோம் “

கிருஷ்ணன் :
“பொருள் தருவதாக
சொன்னீர்களா ?”

தர்மர் :
“சொன்னோம்”

கிருஷ்ணன் :
“ஆடை ,
அணிகலன்கள்
ஆபரணங்கள்
தருவதாக
சொன்னீர்களா?”

தர்மர் :
“சொன்னோம்”

கிருஷ்ணன் :
“நிலம், வீடு,
வயல் தருவதாக
சொன்னீர்களா?”

தர்மர் :
“சொன்னோம்”

கிருஷ்ணன் :
“இவ்வளவு
செல்வங்கள்
தருவதாக சொல்லியும்
பிறகு ஏன் யாரும்
சம்மதிக்கவில்லை?”

தர்மர் :
“அரவான்
இறந்த பிறகு
விதவையாக
இவ்வளவு
செல்வங்களை
வைத்துக் கொண்டு
இந்த உலகத்தில்
எப்படி
நிம்மதியாக
வாழ முடியும் ;
நிம்மதியாக
வாழ முடியாது
என்ற காரணத்தினால்
தான் யாரும்
சம்மதிக்கவில்லை”

கிருஷ்ணன்  :
“செல்வத்தில்
நிம்மதி கிடையாது
என்பதை மக்கள்
உணர்ந்திருப்பதாக
சொல்கிறாய்”

“நிம்மதியா அல்லது
செல்வமா என்ற
நிலை வரும்போது
தான் மக்கள்
நிம்மதியைத் தான்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்”

“நிம்மதி என்பது
தங்களுடைய
சந்தோஷங்கள்
அனைத்தையும்
இழந்து விட்டு
செல்வங்களை
சேர்ப்பதோ
அல்லது
பிறரை ஏமாற்றி
அவர்களுடைய
செல்வங்களை
அபகரிப்பதோ
கிடையாது என்பதை
இந்த உலகத்தில்
உள்ள மக்கள் தெரிந்து
வைத்திருக்கிறார்களா
என்று தெரியவில்லை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 22-03-2020
//////////////////////////////////////////


March 19, 2020

பரம்பொருள்-பதிவு-158


                ஜபம்-பதிவு-406
              (பரம்பொருள்-158)

உலூபி  :
“நீ எந்தவொரு
செயலைச் செய்யும்
போதும் அந்த செயல்
சரியான செயலாகத்
தான் இருக்கும் என்ற
காரணத்தினால் தான்
நீ எந்தவொரு
செயலைச் செய்யும்
போதும் நான்
எந்தவிதமான
தடையையும்
ஏற்படுத்தியதில்லை “

“இப்போது நீ செய்யப்
போகும் களப்பலி என்ற
செயலுக்குக் கூட நான்
தடையை ஏற்படுத்தவில்லை”

“தடையை ஏற்படுத்த
முடியாது என்பது
எனக்குத் தெரியும் “

“இருந்தாலும் நான் செய்த
செயல்கள் அனைத்தும்
பெற்ற மகனின் உயிரைக்
காப்பாற்றுவதற்காக
ஒரு தாய் செய்யும்
செயல்கள் தான்  ;
ஒரு தாய் செய்யும்
செயல்களைத் தான்
நானும் செய்தேன் ; “

“முடிந்தவரை முயற்சி
செய்தேன் உன்னுடைய
களப்பலியைத் தடுப்பதற்கு ;
முடியாது என்பதை
முயற்சி செய்தபின்
தான் தெரிந்து கொண்டேன் “

“நீ செய்யப் போகும்
களப்பலி என்ற செயல்
சரியானது தான்
என்பதை நான்
தாமதமாகத் தான்
தெரிந்து கொண்டேன்”

“பரந்தாமன் ஶ்ரீகிருஷ்ணன்
உன்னிடம் கையேந்தி
நின்றார் என்ற
காரணத்திற்காகவோ ;
உன்னுடைய தந்தை
ஒப்புதல் அளித்தார்
என்ற காரணத்திற்காகவோ  ;
உன்னுடன் இரத்த
சம்பந்தம் கொண்டவர்கள்
ஒப்புதல் அளித்தார்கள்
என்ற காரணத்திற்காகவோ ;
நான் உன்னை ஆசிர்வாதம்
அளித்து உன்னை
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போவதில்லை “

“என்னுடைய மகன்
அரவான் செய்யும் செயல்
சரியான செயலாகத் தான்
இருக்கும் என்ற
காரணத்திற்காகத் தான்
நான் உன்னை ஆசிர்வதித்து
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போகிறேன்”

“என்னுடைய மகன்
அரவான் ஒரு செயலைச்
செய்தால் அதில் ஆயிரம்
நன்மைகள் இருக்கும்
என்ற காரணத்திற்காகத் தான்
நான் உன்னை ஆசிர்வதித்து
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போகிறேன்”

“மற்றவர்கள் வாழ்வதற்காக
உன்னுடைய வாழ்க்கையையே
அழித்துக் கொள்வதற்காக
தயாராகிக் கொண்டிருக்கும்
உன்னுடைய செயலைக்
கண்டு நான் பெருமை
அடைகிறேன் என் மகனே”

“தியாகத்தின் உருவமாக
திகழ்ந்து கொண்டிருக்கும்
உன்னை பெற்று எடுத்ததற்காக
நான் மிகுந்த மகிழ்ச்சி
அடைகிறேன் என் மகனே”

“யாருக்கும் கிடைக்காத
மிகப்பெரிய பாக்கியம்
உனக்கு கிடைத்திருக்கிறது
ஆமாம் !
தாயே தன்னுடைய
மகனை களப்பலிக்கு
அனுப்பும் மிகப்பெரிய
பாக்கியம் உனக்கு
கிடைத்திருக்கிறது “

(என்று சொல்லி விட்டு
உலூபி சுவரில் மாட்டி
வைக்கப்பட்டிருந்த
வாளை எடுத்தாள் ;
தன்னுடைய கட்டை
விரலால் வாளில்
அழுத்தமாகக் கீறினாள் ;
உலூபியின் கட்டை
விரலில் இருந்து
இரத்தம் அருவியென
கொட்டியது இரத்தத்தால்
நனைந்திருந்த கட்டை
விரலால் உலூபி
தன்னுடைய மகன்
அரவானின் நெற்றியில்
இரத்தத்தால்
திலகம் இட்டாள் )

(இந்த உலகத்தை
காப்பாற்றுவதற்காக
தன்னுடைய இரத்தத்தையே
கொடுப்பதற்காக காத்துக்
கொண்டு இருக்கும்
அரவானின் நெற்றியில்
உலூபி தன்னுடைய
கட்டை விரலில் இருந்து
வழியும் இரத்தத்தால்
இரத்தத் திலகமிட்டாள்)

“செல் மகனே செல் !”

“இந்த உலகத்தை
காப்பாற்றக் கூடிய
மிகப்பெரிய பொறுப்பு
உன்னிடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது”

“உனக்கு அளிக்கப்பட்ட
பொறுப்பை
நிறைவேற்றுவதற்காக
செல் மகனே செல் !”

“வருங்கால உலகத்தை
காப்பாற்றுவதற்காக
செல் மகனே செல் ! “

(தாயிடம் ஆசிகள் பெற்று
விட்டு அரவான்
உலூபியின் அறையை
விட்டு வெளியே
சென்று கொண்டிருந்தான் ;
அரவான் செல்லும்
திசையையே பார்த்துக்
கொண்டிருந்தாள் உலூபி ;
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
சிந்திய கண்ணீர் இந்த
பூமியை நனைத்தது)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 19-03-2020
//////////////////////////////////////////