December 16, 2011

போகர் -7000 - சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-2



            போகர் -7000  - சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

பாடல் - 1
சாயா தரிசனம் தொடர்ந்து செய்து வர கிடைக்கும் நன்மைகளை ,பலன்களை, சக்திகளை போகர்  7000 பாடலில் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு விளக்குகிறார்:

            “”””உறுதியாம் பனிரெண்டு ஆண்டுதானும்
                                 உத்தமனே தரிசனைகள் காண்பாயானால்
                  உறுதியாய் உன்ரூபங் கண்டரூபம்
                                நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து
                 சுருதியுடன் கருவிகர ணாதியோடு
                                சுத்தமுடன் உடலாவி கொண்டுமல்லோ
                 பரிதிவிட்டு உந்தன்நிழல் கூடேநிற்கும்
                                 பாலகனே சாயாவின் வண்மைபாரே””””””
                                                                      --------- போகர் ---7000 -------


“”””உறுதியாம் பனிரெண்டு ஆண்டுதானும்
                      உத்தமனே தரிசனைகள் காண்பாயானால்””””
நான் செய்யும் தவத்தால் கண்டிப்பாக பலன் உண்டு என்று மனதில் நினைத்துக் கொண்டு ,உறுதியாக ,மனது தளராமல் ,தொடர்ச்சியாக ,12 ஆண்டுகள் மன உறுதியுடன் சாயா தரிசனத்தை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் பின் கண்ட நிகழ்வுகள் நமக்கு நடக்கும் என்கிறார்  போகர்.


“””””உறுதியாய் உன்ரூபங் கண்டரூபம்
                         நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து”””””””
நாம் கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்கிறோம் .
நம்முடைய உருவத்தைப் பிரதி எடுத்தால் எப்படி இருக்குமோ? அத்தகைய உருவம் போல் அதாவது நிழல் உருவமாக இல்லாமல் நிஜமான உருவமாக நம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
ஓரு ஆள் ரூபமாய் தன்னுடைய ரூபமாய் தன்னுடனேயே திரியும் .


“”””””சுருதியுடன் கருவிகர ணாதியோடு
                         சுத்தமுடன் உடலாவி கொண்டுமல்லோ””””
உயிருடன் உள்ள ஒரு மனித உடலில் என்னவெல்லாம் இருக்குமோ ?சுருதி கருவி கரணாதியோடு ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு உடலாகக் கொண்டு நம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் நம்முடனே கூடவே உலாவும் .
நாம் படுத்தால் அதுவும் படுக்கும் .
நாம் எழுந்தால் அதுவும் எழுந்திருக்கும்.


“”””””பரிதிவிட்டு உந்தன்நிழல் கூடேநிற்கும்
                        பாலகனே சாயாவின் வண்மைபாரே”””””
பரிதி என்றால் சூரியன் என்று பொருள் .
காலையில் சூரியனுடைய ஒளி நம்முடைய உடலில் பட்டால் நிழல் தெரியும்  .அதைப் போல இரவில் சந்திரனுடைய ஒளி நம்முடைய உடலில் பட்டால் நிழல் ஒளி தெரியும்.
பகலில் சூரியனுடைய ஒளியிலும் ,இரவில் சந்திரனுடைய ஒளியிலும், நம்முடைய நிழல் எப்படி நம்மைப் பின்தொடருமோ? நம்மை விடாமல் நம்மைப் பின்தொடருமோ? நம்மை விட்டுப் பிரியாமல் பின் தொடருமோ?
அதைப் போல சாயா தரிசனம் செய்பவருக்கு நம்முடைய உண்மை அதாவது அசல் உடலுடன் ,நிழல் உருவமாக இல்லாமல் ,நிஜ உருவமும் ,கூடவே வரும் .
ஆகவே சாயா தரிசனம் தொடர்ந்து செய்து அதில் வரும் நன்மைகளை தெரிந்து கொள் என்கிறார் .


பாடல் - 2
சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து வர நடைபெறும் மகிமைகளை பின் வரும் பாடல்களில் கூறுகிறார் போகர் :

             “”””வன்மையாஞ் சொரூபநிலைப் பின்தொடர்ந்து
                                   வாகுடனே உந்தனிடம் உலாவும்பாரு
                   திண்மையாய் சயனங்கள் செய்யும்போது
                                   தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போதும்
                  தண்மையாய் உட்கார்ந் திருக்கும்போதும்
                                  தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
                 உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை
                                 உத்தமனே உந்தமக்கு கூறும்பாரே””””
                                                                                ------போகர்-- 7000 -----

“”””வன்மையாஞ் சொரூபநிலைப் பின்தொடர்ந்து
                      வாகுடனே உந்தனிடம் உலாவும்பாரு"""" 
முழுமையான உருவம் கொண்டு அதாவது ஒரு ஆள் ரூபமாய் ,தன்னுடைய ரூபமாய் ,தன்னுடனேயே திரியும் .
நாம் எந்த, எந்த இடங்களுக்கு செல்கிறோமோ ?அந்த ,அந்த இடங்களுக்கு எல்லாம் அந்த உருவம் நம்மைப் பின் தொடரும் .நம்மைச் சுற்றியே உலாவும்.



""""""""திண்மையாய் சயனங்கள் செய்யும்போது""""""
நாம் நிம்மதியாக அமைதியாக ,எந்த கவலையும் இல்லாமல், துhங்கும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே துhங்கும் .



"""""""""""தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போதும்""""""""
பூமியில் நாம் பல்வேறு இடங்களுக்கு எல்லாம் நடந்து செல்லும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே நடந்து வரும்.



""""""""""தண்மையாய் உட்கார்ந் திருக்கும்போதும்""""""
ஓய்வு எடுப்பதற்காகவும்,  வேலை செய்வதற்காகவும், நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே உட்கார்ந்து கொண்டு இருக்கும் .
                 


           """"""""""" தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
                 உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை
                                 உத்தமனே உந்தமக்கு கூறும்பாரே””””      
 ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எல்லாம்
அதாவது நல்ல விஷயங்களை பேசும் பொழுதும்,
 ரகசியங்களை பேசும் பொழுதும் ,
சாதாரண விஷயங்களை பேசும் பொழுதும் ,
அதுவும் நம்முடனேயே கூட இருக்கும் .

நம்முடைய எதிர்காலத்தை ,வருங்காலத்தை அடுத்து என்ன நடக்கும் என்ற ரகசியங்களை நமக்கு வரும் நல்லவை ,கெட்டவைகளை அது முன் கூட்டியே நமக்குச் சொல்லும் .
அதாவது சாயா தரிசனம் செய்பவருக்கு சொல்லும் என்கிறார்  போகர் .


“”“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                          போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”””

December 14, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- வரலாறு - பதிவு-1



       போகர்-7000- சாயா தரிசனம் - நிழல் தவம் - பதிவு-1

"“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - விளக்கம் :
சாயா என்றால் நிழல் என்று பொருள் .
சாயா தரிசனம் என்றால் நிழலை தரிசனம் செய்து பெறப்படும் சக்திகள் என்று பொருள்.
சாயா தரிசனம் - நிழல் தவம் ,விஸ்வரூப தரிசனம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறது .

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களால் மட்டுமே சாயா தரிசனம் செய்யப்படுகிறது .
அதற்கு கீழ்க்கண்டவை முக்கிய  காரணங்களாக சொல்லப் படுகிறது:
1 சாயா தரிசனத்தின் மகிமைகள், சாயா தரிசனத்தை செய்வதால் கிடைக்கும் சக்திகள் மக்களில் பலருக்கு  தெரியவில்லை.
2 ஆன்மீக உலகில் சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள் சரியான வகையில் இல்லாமல் இருக்கிறது.
3 சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள், செய்யும் முறைகள் ,செய்வதால் கிடைக்கும் பலன்கள்  ஆகியவற்றை விளக்கும் புத்தகங்கள் இந்த உலகத்தில் அரிதாக உள்ளன.
4 சாயா தரிசனத்தின் சூட்சும ரகசியங்கள் குரு – சீடர்  பரம்பரை மூலமாக ரகசியமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
5 சாயா தரிசனத்தை அறிந்து செய்பவர்கள் குறைவு .அதிலும் சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து பலன் அடைந்தவர்கள் அதை விட மிகக் குறைவு ஆகும்.
6 சாயா தரிசனத்தை விளக்கமாக சொல்லித் தரக்கூடிய ஆசிரியர்கள் இல்லை.

சாயா தரிசனம் இந்த உலகத்திற்கு கிடைத்த விதம் பற்றியும் ,
சாயா தரிசனத்தின் சிறப்புகள் பற்றியும் ,
சாயா தரிசனத்தைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் ,
போகர்  தன்னுடைய --போகர் - 7000 --- என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.


சாயா தரிசனத்தை என்னுடைய குரு மூலமாக நான் கற்றுக் கொண்டு ,சாயா தரிசனத்தைச் செய்து ,n>,மகிமைகளை உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்
 பயன் பெறும் வகையில் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் வகையிலும் அனைவருக்கும் என்னால் முடிந்த அளவு சூட்சும ரகசியங்களை உடைத்து விளக்குகிறேன் .

சாயா தரிசனத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்  தெரிந்து செய்து பலன்களைப் பெற்று மகிழ்ச்சி அடையட்டும்.
சாயா தரிசனத்தை தொடர்ந்து படித்து சாயா தரிசனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சாயா தரிசனம் - வரலாறு :

பாடல் -1சாயா தரிசனத்தை இந்த உலகம் பயன்படுத்துவதற்கு வெளிப்படுத்தப் பட்ட வரலாறை கீழ்க்கண்ட பாடல்களின் மூலம் போகர் கூறுகிறார் :
”””தென்திசையில் அகத்தியனார்  முனிவர்தானும்
           செப்பினார்  இந்தமுறை செப்பினார்பாரே

    பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
          பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்
          நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
    சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
          செம்மலுடன் வழிசொன்னார்  மைதான்இல்லை
    கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
          கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
                                                -----------------போகர்- 7000--------
“””””தென்திசையில் அகத்தியனார்  முனிவர்தானும்
                     செப்பினார்  இந்தமுறை செப்பினார்பாரே”””””””
தெற்கு திசையில் இருந்த வாழ்ந்த அகத்தியர் என்ற மாமுனிவர்  சாயா தரிசனம் என்ற ஒரு பயிற்சி முறை என்ற ஒன்று  உள்ளது என்று கூறியுள்ளார்


”””பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
          பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில்  உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.

மாணாக்கள் என்றால்  படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர்  இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
    நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில்  உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.

மாணாக்கள் என்றால்  படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர்  இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை ,அடைவதற்கு தேவையான சாத்திரத்தை பாடி வைத்தார் அகத்தியர்  என்கிறார்  போகர்.

சாத்திரம் என்றால் எழுதியதை செயல்படுத்திப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பொருள்.


      ”””””நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
    சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
          செம்மலுடன் வழிசொன்னார்  மைதான்இல்லை”””
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாத்திரங்கள் பலவற்றின் ரகசியங்களை எல்லாம் சொன்ன அகத்தியர்  சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும்,
சாயா தரிசனத்தை முறைப்படி செய்து எவ்வாறு பலன்களை அடைய வேண்டும் என்றும் ,
இந்த உலகத்திற்கு தேவையான ஆன்மீக விளக்கங்களை அகத்தியர் எடுத்துக் கூறவில்லை.


“””””””கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
                       கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
மையினது என்றால் சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருள் அறிவதற்கான வழி என்று பொருள்.
சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருளை காலங்கி நாதரின் சீடரான போகராகிய நான் அவருடைய அருள் ஆசியினால் சாயா தரிசனத்தின் சிறப்புகளையும் ,மகிமைகளையும் சாயா தரிசனத்தை செய்யக் கூடிய முறைகளையும் கூறினேன் என்கிறார்  போகர்.



பாடல் - 2

சாயா தரிசனத்தின் வரலாற்றை பாடல்கள் மூலம் விவரித்துக் கூறும் போகர், மேலும் விவரித்து அடுத்த பாடல்களில் சாயா தரிசனத்தின் வரலாற்றை  கீழ்க்கண்டவாறு  கூறுகிறார்:

””தானான சித்துமுனி கும்பயோனி
         தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்
    மானான காலங்கி எந்தன்நாதர்
         மகாதேவர்  கடாட்சமது கிருபையாலே
    தேனான கருக்குருவை யானும்கற்று
        தெளிவான மாணாக்கர்  பிழைக்கஎன்று
    பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
        பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
                                                                --------போகர்-7000-------
“””””தானான சித்துமுனி கும்பயோனி
                தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்””””
சித்தர்களின் தலைவரும் சித்தர்களில் உயர்வான தவ நிலையில் உள்ளவரும் சித்தர்களில் சிறந்தவரும் ஆகிய அகத்திய முனிவர்  சாயா தரிசனத்தில் உள்ள மையக் கருவையும் ,சூட்சும ரகசியங்களையும் சொல்லாமல் மறைத்து வைத்தார்


””மானான காலங்கி எந்தன்நாதர்
         மகாதேவர்  கடாட்சமது கிருபையாலே
    தேனான கருக்குருவை யானும்கற்று
        தெளிவான மாணாக்கர்  பிழைக்கஎன்று
    பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
        பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
என்னுடைய குருவான காலங்கி நாதரின் ஆசியாலும் ,அவருடைய அருளாலும் ,சாயா தரிசனத்தின் மையக் கருவை நான் கற்றுக் கொண்டேன் .

பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,
மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை அடைவதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை ,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்று உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள்  தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் ,
புரிந்து செயல்படுத்தும் வகையில்,
சாஸ்திரங்கள் பலவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து ,
இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு தனது பாடல்களில் சாயா தரிசனத்தைப் பற்றி பாடி வைத்தேன் என்கிறார்  போகர்.

""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                      போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”""




December 11, 2011

ராஜராஜேஸ்வரி-மந்திரம்-யந்திரம்-தந்திரம்-பதிவு-3



               ராஜ ராஜேஸ்வரி-மந்திரம்-யந்திரம்-தந்திரம்-பதிவு -3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

விரதம் இருக்கும் நாட்களில் நடைபெறுபவை :
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மந்திரத்தை விரதம் இருந்து உச்சாடணம் செய்யும் பொழுது கிடைக்கும் பலன்கள் , பெறும் சக்திகள் , நடக்கும் நிகழ்வுகள் , வெவ்வேறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமும் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை உச்சாடணம் செய்து முடித்து விட்டு , சிறிது நேரம் கண்ணை மூடி தியானம் செய்ய வேண்டும் . அவ்வாறு தியானம் செய்யும் பொழுது கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறும் .


இந்த நிகழ்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ள வரிசைப் படியோ ( அல்லது ) வரிசை மாற்றியோ நிகழ்வுகள் கிடைக்கும் :
1 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது முதலில் ஒரு கண் கொணட உருவம் தெரியும் .
2 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு இரண்டு கண்கள் கொண்ட உருவம் தெரியும் .
3 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு கழுத்து வரை கொண்ட உருவம் தெரியும் .
4 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு மார்பு அளவு வரை உருவம் தெரியும் .
5 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு முழு உருவமும் தெரியும் .
6 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது அம்மன் நடந்து வரும் பொழுது உண்டாகும் சலங்கை சத்தம் கேட்கும் .
7 அனைவருக்கும் மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்பது இயலாத காரியம் .


ஆனால் 48 நாட்கள் விரதம் முடித்த பிறகு விரதம் இல்லாமல் பூஜை பொருட்களைப் பயன் படுத்தாமல் ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை மட்டும் தொடர்ந்து சொல்லி வரும் பொழுது மேலே சொல்லப் பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது

வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுக்கும் ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

ராஜ ராஜேஸ்வரி - மந்திரம் :
48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .


ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை , அகார - உகார - மகார , 
ஸ்திரி , ஸ்ரீம், ஐம்,  மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,
சர்வ சகல வசி, வசி,   ராஜ மோக வசி ,
சர்வ லோக ,    சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .


சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,
எந்தனைக் கண்டோர் ,    உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,
மாத்தான் ,      வஞ்சகர்  வந்து வணங்கிட ,
என் புருவ மையம் மையைக் கண்டோர் ,

அகார - உகார - மகார ஆதரவான தன்மைப் போல் ,
ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,
வசிய வசிய வசி ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா.


ராஜ ராஜேஸ்வரி - யந்திரம் :
ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய யந்திரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது .

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்யும் பொழுது, கண்டிப்பாக ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய யந்திரத்தை வைத்துத் தான் பூஜை செய்ய வேண்டும்.


சூட்சும ரகசியம் :
எந்த தெய்வத்திடமிருந்து , எந்த சக்தியை , எந்த பலன்களை பெற விரும்புகிறோமோ , அந்த தெய்வத்தை மனதில் நிறுத்தி அந்த தெய்வத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ,
அந்த தெய்வத்திற்குரிய மந்திரம் ,
அந்த தெய்வத்திற்குரிய யந்திரம் ,
அந்த தெய்வத்திற்குரிய தந்திரம் ,
ஆகியவற்றைப் பயன்படுத்தி பூஜை செய்ய வேண்டும் அப்பொழுது தான் நாம் அதற்குரிய முழு பலன்களையும் பெற முடியும் .

அதைப்போல நாம் ராஜ ராஜேஸ்வரி அம்மனிடமிருந்து சக்தியையும் , வாழ்க்கைக்குத் தேவையான பலன்களையும் பெற ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம்,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய யந்திரம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய தந்திரம் ,
ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் .

மேலே சொல்லப்பட்ட பூஜை முறைகளில்
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய யந்திரம் ,
ஆகியவை மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளதாக நினைக்க வேண்டாம்.

மேலே சொல்லப்பட்ட பூஜை முறைகளில் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய தந்திரம்
சூட்சும முறைகளில் ரகசியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .


ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பூஜை முறைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களையும் பெற்று  , இன்புற்று சிறப்புடன் வாழுங்கள் .

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                    போற்றினேன் ராஜராஜேஸ்வரி தான்முற்றதாமே “”











December 08, 2011

ராஜ ராஜேஸ்வரி-விரதம்-பதிவு -2



 
         ராஜ ராஜேஸ்வரி-விரதம்-பதிவு -2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;

விரதம் ஆரம்பிக்கும் முறை -1 :
48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகளில் முறை - ஒன்று கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆரம்பிக்கும் முதல்நாள் காலை :
தேங்காய் , பூ , பழம் , வெற்றிலை பாக்கு , மஞ்சள் வைக்க வேண்டும் .
வாழைப்பழம் , எலுமிச்சை பழம் ,மாம்பழம் , ஆப்பிள் , ஆரஞ்சு பழம், ஆகியவற்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும் .
வசதி இருந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எத்தனை பழங்கள் வைத்தும் பூஜை செய்யலாம் .
மேலே சொல்லப்பட்டவைகளை பூஜையில் வைத்து , அகர்பத்தி ஏற்றி , சாம்பிராணி கொளுத்தி, தேங்காய் உடைத்து ,கற்பூரம் கொளுத்தி ,ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .

ஆரம்பிக்கும் முதல் நாள் இரவு:
வெண்பொங்கல் (அல்லது) சர்க்கரை ,பொங்கல் , வடை, அவல், பொரி , கடலை, வெல்லம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .


விரதம் ஆரம்பிக்கும் முறை -2 :
48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகளில் முறை - இரண்டு கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆரம்பிக்கும் முதல் நாள்
இந்த பூஜை முறையை முதல் நாள் காலை , மதியத்திற்குள் முடித்து விட வேண்டும் .
தேங்காய் ,பூ , பழம், வெற்றிலை பாக்கு ,மஞ்சள் வைக்க வேண்டும் .
வாழைப்பழம் , எலுமிச்சை பழம் ,மாம்பழம் ,ஆப்பிள் ,ஆரஞ்சு பழம் ஆகியவற்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
வசதி இருந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எத்தனை பழங்கள் வேண்டுமானாலும் பூஜையில் வைக்கலாம் .
வெண்பொங்கல் (அல்லது) சர்க்கரை , பொங்கல் , வடை , அவல்பொரி கடலை, வெல்லம் ஆகியவற்றை  பூஜையில் வைக்க வேண்டும் .
மேலே சொல்லப்பட்டவைகளை பூஜையில் வைத்து அகர்பத்தி ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி ,தேங்காய் உடைத்து ,கற்பூரம் கொளுத்தி, ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .


விரதத்தின் போது தினமும் கடைபிடிக்க வேண்டியவை :
48 நாட்கள் விரதம் இருக்கும் பொழுது தினமும் கடைபிடிக்க வேண்டிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது .

தினமும் ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானம் செய்யும் பொழுது வெற்றிலை பாக்கு ,ஒரு ஸ்வீட் (அல்லது) சர்க்கரை (அல்லது) வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மன் படத்திற்கு ,ராஜ ராஜேஸ்வரி யந்திரத்திற்கு ,கற்பூரத்தைக் காட்டி விட்டு ,அமர்ந்து 108 முறை (அல்லது) 1008 முறை ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை உச்சாடணம் செய்ய தொடங்க வேண்டும் .
மந்திர உச்சாடணம்  முடித்த பிறகு கற்பூரம் காட்டி விட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் .

காலையிலும் , மாலையிலும் மேலே சொன்ன முறைகளைப் பயன் படுத்தி பூஜை செய்ய வேண்டும் .
முடிந்தால் காலை ,மதியம் ,மாலை ஆகிய மூன்று வேளைகளில் பூஜை செய்யலாம் .
சூரியன் உதிப்பதற்கு முன்பும் ,உச்சி வேளையிலும், சூரியன் அஸ்தமனம் அடைந்த பிறகும் ,பூஜை செய்வது சிறந்த பலன்களைத் தரும் .


48 நாட்களுக்குள் 1 லட்சம் மந்திரங்களை முடிக்கும் விதமாக மந்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் .
தினமும் எவ்வளவு முறை மந்திரம் சொன்னால்,  48 நாட்களில் 1 லட்சம் ஆகும் என்று கணக்கிட்டு , ஒரு நாளைக்குரிய மந்திரங்களின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்ளுவது , சிறந்த பலன்களைத் தரும், மந்திரம் சித்தியாவதற்கு உரிய நிலைமைகளை உருவாக்கும்.

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                      போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”