February 16, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-உடையார்முன்-பதிவு-11





                இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-உடையார்முன்-பதிவு-11
      
                        “”பதிவு பதினொன்றை விரித்துச் சொல்ல
                                                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
                                   குடும்பத்தில் உள்ளவர்கள் ,
                                   உறவு முறைகள் ,
                                   நெருக்கமான நண்பர்கள் ,
                                    நெருக்கமில்லாத நண்பர்கள் ,
                                    வீட்டிச் சுற்றி இருந்தவர்கள்,
                                    வீட்டைச் சுற்றி இருந்து விட்டு சென்றவர்கள் ,
                                    அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் ,
ஏதேனும் விழா நடத்தினால்,
விழாவுக்கு நம்மை வரும்படி அழைத்தால்,
நாம் செய்ய வேண்டியவை யாவை ? என்பதை இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் கூறுகிறார் :


வசனம்-1:
நீ அழைக்கப் பட்டிருக்கும் போது போய் தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே , உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்.”
                                                                       -----லுhக்கா - 14 : 10

பணம் பல வழிகளில் அடைந்து உயர்ந்தாலும் ;
செல்வச் செழிப்பில் திளைத்து மகிழ்ந்தாலும் ;
தொழில்கள் பல செய்து வெற்றி பெற்றாலும் ;
நிலங்கள் பலவற்றை வாங்கி வைத்திருந்தாலும் ;
வீடுகள் பலவற்றை கட்டி , நல்ல நிலைதனை அடைந்தாலும் ;
அறிவாளி என்று பலர்  பாராட்டினாலும் ;
புத்திசாலி என்று பலர்  சிறப்பித்தாலும் ;
ஏவல் செய்வதற்கு பணியாள் பல வைத்திருந்தாலும் ;
பதவி சுகத்தில் திளைத்தாலும் ;
அதிகார போதையில் மிதந்தாலும் ;
சமுதாயம் உயர்ந்தோன் என்று அடையாளக் குறி வைத்து
அழைக்கக் கூடிய தகுதிகள் பல பெற்றாலும் ;
பிறர்  உங்களை கையெடுத்து கும்பிடும் அளவுக்கு
மதிப்பு உங்களுக்கு இருந்தாலும் ;

திருமணம் சடங்கு விழாக்களுக்கு சென்றால் ,
அமர்வதற்கு என்று வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் நாற்காலிகளில் ,
கடைசி வரிசையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும் .

விழாவை நடத்துவோர் ,
விழாவை நடத்துபவருடைய குடும்பத்தார் ,
விழாவை நடத்துபவருடைய உறவினர்கள் ,
விழாவை நடத்துபவருடைய சுற்றத்தார் ,
நம்மை அடையாளம் கண்டு கொண்டு
அன்பாகவும் , அமைதியாகவும்  ,பண்பாகவும்
முன் வரிசையில் வந்து அமருங்கள் என்று நம்மை கேட்பார்கள் .

நாம் அதை மறுத்தால் ,
அவருடைய கோரிக்கையை , ஏற்க மணமில்லாமல் ,
கடைசி வரிசையிலேயே அமர்ந்து கொள்கிறேன் என்று சொன்னால்,
அவர்கள் அன்பின் மேலிட்டால்
அன்பு அதிகமாகி நம்மை
நம்முடைய கையைப் பிடித்து இழுத்துச் சென்று முன் வரிசையில் அமர வைப்பார்கள் .

இந்தக் காட்சியைக் காண்பவர்கள் ,
இந்தக் காட்சியைக் காணும் அன்பர்கள் ,
விழாவிற்கு வந்தவர்கள் ,
விழாவை சிறப்பிக்க வந்தவர்கள் ,
நம்மை ஆச்சரியக் கண் கொண்டு
வியப்பு மேலிட்டால் பார்த்து ,

சிறப்பான தகுதிகள் பலவற்றை கொண்டவராக இருப்பார் ;
சமுதாயத்தில் உயர்ந்தவராக இருப்பார் ;
விழாவுக்கு வந்திருப்பவர்களில் சிறந்தவராக இருப்பார் ;
சமுதாய அங்கீகாரத்தை பெற்றவராக இருப்பார் ;
அவ்வளவு பெற்றும் அவர்  அமைதியாக,  அடக்கமாக ,
எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் ,பின் வரிசையில் அமர்ந்திருக்கிறார்;
எவ்வளவு உயர்ந்தவர்  இவர் ,
மனதில் சிறந்தவர்  இவர் ,
அடக்கத்தில் அருமையானவர்  இவர் - என்று
இந்த சமுதாயமும் , சமுதாய மக்களும் விழாவுக்கு வந்திருப்பவர்கள் ;
அவரை நம்மை போற்றி புகழ்வார்கள் ;
ஆச்சரியக் கண் கொண்டு பார்ப்பார்கள்;
அதிசயத்தில் திளைப்பார்கள் ;
இதைத் தான் இயேசு ,
தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்கிறார் .



வசனம் -2,3 :
ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப் பட்டிருக்கும் போது , பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே ; உன்னிலும் கனமுள்ளவன் ஒரு வேளை அவனால் அழைக்கப் பட்டிருப்பான்.”
                                                                    ------லுhக்கா - 14 : 8

அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து; இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போக வேண்டியதாயிருக்கும்.”
                                                                --------லுhக்கா - 14 : 9

நாம் நம்மை தாழ்த்திக் கொண்டு கடைசி வரிசையில் அமராமல் ,
ஆணவத்தை மண்டையில் ஏற்றிக் கொண்டு ,
கர்வத்தை மனத்தில் பதித்துக் கொண்டு ,
          அறிவில் தெளிந்தவன் ;
          ஆன்மீகத்தில் உயர்ந்தவன் ;
          இன்பத்தைத் துய்ப்பவன் ;
          ஈகையில் சிறந்தவன் ;
          உண்மையே பேசுபவன் ;
          ஊருக்கெல்லாம் உழைப்பவன்;     
          எளிமையில் விளங்குபவன் ;
          ஏழ்மைக்கு உதவுபவன் ;
          ஐயத்தை விளக்குபவன் ;
          ஓற்றுமையை உணர்த்துபவன் ;
          ஓர்மையில் தெளிந்தவன் ;
          ஓளஷதத்தில் சிறந்தவன் ;
          எஃதையும் வெல்லுபவன் ;
என்று தன்னை நினைத்துக் கொண்டு ,

அறிவு தெளிவு பெறாமல் ,
சிந்தனை சீர்திருத்தம் பெறாமல் ,
முன் வரிசையில் சென்று அமர்ந்தால் ,
நம்மை விட உயர்ந்தவர்  யாரேனும் விழாவுக்கு வந்தால் ,
விழாவை நடத்துவோர்  நாற்காலி இல்லை அமர இடம் தேவை - என்ற
காரணங்களைக் காட்டி நம்மை பின் வரிசையில் உள்ள நாற்காலியில்
சென்று அமரச் சொல்வர் .

விழாவுக்கு வந்திருப்போர் ,
இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் ,
வினாக் குறிகளை விழிகளில் தேக்கிக் கொண்டு பார்க்கும்;
சுட்டெரிக்கும் சுடர் நெருப்பில் நமது மனம் வெந்து சாம்பலாகும் ;
அவமானத்தால்  தலை கவிழும் ;
            இதயம் உடையும்;          
            கோபம் எழ நேரம் பார்க்கும் ;
            கண்ணீர்த் துளிகள் கண்களை விட்டு
            இந்த உலகத்தை எட்டி பார்க்க நேரம் பார்க்கும் ;
அதனால் தான் இயேசு ,
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் என்கிறார் .



வசனம்-4 :
 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் , தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான் என்றார்.”
                                                                      - லுhக்கா - 14 : 11
பணம் ,பதவி ,புகழ் ,செல்வாக்கு ,அதிகாரம்-  என்று
பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும்
சமுதாயத்தில் தன்னை தாழ்த்திக் கொள்கிறவன் எவனும்
இந்த சமுதாயத்தால் உயர்த்தப் படுவான் .

பணம் ,பதவி ,புகழ் ,செல்வாக்கு, அதிகாரம்-  என்று
பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும்
சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் கொள்கிறவன் எவனும்
இந்த சமுதாயத்தால் தாழ்த்தப் படுவான்.

என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர்:
          “””””உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
                  கடையரே கல்லா தவர்”””””
                                                       ----திருவள்ளுவர்---திருக்குறள்----
                
                                       பணம் படைத்தவனிடம் ,
                                      பணம் இல்லாதவன் ,
                                      பணிந்து தான் இருக்க வேண்டும் .

                    அதிகாரம் உள்ளவனிடம் ,
                    அதிகாரம் இல்லாதவன் ,
                   அடங்கித்தான் இருக்க வேண்டும் .

                                     பதவி உள்ளவனிடம் ,
                                    பதவி இல்லாதவன் ,
                                    ஒடுங்கித்தான் இருக்க வேண்டும் .

                உயர்ந்தவனிடம் ,
                தாழ்ந்தவன் ,
                அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .


பணம் படைத்தவனிடம் ,
அதிகாரம் உள்ளவனிடம் ,
பதவி உள்ளவனிடம் ,
உயர்ந்தவனிடம் ,
இவைகள் இல்லாதவன்
பணிந்து ,அடங்கி ,அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .
என்ற எழுதப்படாத ஒரு விதி இந்த சமுதாயத்தில் இருக்கிறது .

அது சமுதாயத்தை மட்டுமில்லை
மக்கள் மனங்களையும் அரித்து விட்டிருக்கிறது .
இதை மாற்ற நினைத்தவர்கள்
சீர்திருத்த முற்பட்டவர்கள் தான்
மாண்டு போனார்களே ஒழிய
சமுதாயம் மாறவில்லை;
மக்கள் திருந்தவில்லை ;
அறியாமை விலகவில்லை ;
அறிவொளி பரவவில்லை ;
சமுதாயம் தன்னுடைய சட்ட திட்டங்களை மாற்றவில்லை ;
சமுதாயம் தன்னுடைய கொடுமைக்கார முகமூடியைக் கழற்றவில்லை ;

பணம் படைத்தவனிடம் ,
அதிகாரம் உள்ளவனிடம் ,
பதவி உள்ளவனிடம் ,
உயர்ந்தவனிடம் ,
உள்ள சமுதாய மேன்மைக்கான
அடையாளக் குறியீடுகள் உள்ளவனிடம்

அவைகள் இல்லாதவன்
பணிந்து ,வணங்கி ,அடங்கி
அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .

நான் அடங்கிப் போக மாட்டேன் ,
எனக்கு மானம் இருக்கிறது ,
சுயமரியாதை இருக்கிறது ,
தன்மானம் இருக்கிறது ,
என்று வீர வசனங்கள் பேசி ,

கொடுமை கண்டு ஆர்த்தெழுவேன் ;
மடமை முன் மண்டியிட மாட்டேன் ;
சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன் ;
மானத்தை மண்டியிடச் செய்து விட்டு வாழ மாட்டேன் ;

என்று வீண் வசனம் பேசி திரிந்து கொண்டு ,
இந்த அவனியில் எந்த மூலையிலும் சென்று ,
நிம்மதியாக வாழ முடியாது .

பணம் படைத்தவனிடம் பல்லிளிக்கிறது சமுதாயம் ;
பதவி உள்ளவனிடம் அடிபணிகிறது சட்டம் ;
அதிகாரம் உள்ளவனிடம் வளைந்து கொடுக்கிறது நீதி ;
என்ற நிலை இச் சமுதாயத்தில்
இருக்கும் வரை ,
உடையவனிடம் இல்லாதவன்
பணிவாகத் தான் இருக்க வேண்டும் .
அத்தகையை ஒரு நிலையை நம் வாழ்க்கையில்
ஏற்படுத்திக் கொண்டால் தான்
நாம் நம் வாழ்க்கையை
நிம்மதியாக , அமைதியாக ஓட்ட முடியும் .


அதைப் போல ,
அறிவு விளக்கம் பெற்றவனிடம் ;
புத்தி தெளிவு பெற்றவனிடம் ;
ஞானத் தன்மை அடைந்தவனிடம் ;
சிந்தனை சீர்பெற்று விளங்குபவனிடம் ;
கலைகளை கசடறக் கற்றவனிடம் ;
மறைபொருளை மறைப்பின்றி உணர்ந்தவனிடம் ;
சூட்சுமத்தின் ரகசியத்தை அறிந்தவனிடம் ;
இன்பத்தின் இனிமையை அனுபவித்தவனிடம் ;
துன்பத்தைக் களைய படித்தவனிடம் ;

இத்தகைய தன்மைகள் உள்ளவனிடம்
இத்தகைய தன்மைகள் இல்லாதவர்கள்
இத்தகைய தன்மைகளில்
எத்தகைய தன்மையை பெறவேண்டும்
என்று நினைக்கிறார்களோ,


அத்தகையவரிடம் சென்று ,
அன்பாக ,பணிவாக ,அடக்கமாக
உடையவன் முன் இல்லாதவன் எவ்வாறு
தன் வாழ்விற்கு
தேவையான நிம்மதியைப் பெற்றுக் கொண்டு
அமைதியாக இருக்கிறானோ ?
நிம்மதியாக வாழ்க்கையை நடத்துகிறானோ ?

அத்தகைய ஒரு நிலையில் ,
அடிமையாக இருந்து ,
அமைதியாக இருந்து ,
பணிவாக இருந்து ,
தனக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் .

இத்தகைய ஒரு நிலையில் ,
அமைதியாக ,அடக்கமாக , பணிவாக
அடிமையாக இருந்து கற்க முடியாது என்றால்
அவரால் வாழ்க்கையில்
எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியாது .

தனக்குத் தெரியாத ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சி செய்பவன் சீடன்
கற்றுக் கொள்ள  நினைப்பவனுக்கு கற்றுக் கொடுப்பவர்  குரு
என்பதை மனதில் கொண்டால் இயற்கையாகவே
அமைதி பணிவு வந்து விடும்
என்கிறார் திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு , தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்தால் உயர்த்தப்படுவான் ;
தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்தால் தாழ்த்தப்படுவான் ;
என்கிறார் .


அவ்வாறே
திருவள்ளுவரும் , தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்திற்குத் தேவையானவைகளை  பெற்றுக் கொள்வதால்,
இந்த சமுதாயத்தால் மதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இந்த சமுதாயத்தால் உயர்த்தப்படுவான் ;

தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாமல் , உயர்த்திக் கொள்கிறவன் இந்த சமுதாயத்திற்கு தேவையானவைகளைப்  பெற முடியாமல் போவதால் ,
இந்த சமுதாயத்தால் அவமானம் அடையக் கூடிய சூழ்நிலை உருவாகி இந்த சமுதாயத்தால் தாழ்த்தப்படுவான்;
என்கிறார்.


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                        போற்றினேன் பதிவுபதினொன் றுந்தான்முற்றே “”


February 14, 2012

இயேசு கிறிஸ்து-திருமூலர்-படமாட-பதிவு-10




  இயேசு கிறிஸ்து-திருமூலர்-படமாட-பதிவு-10

                                 “”பதிவு பத்தை விரித்துச் சொல்ல
                                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
நாம் யாருக்கு எதைச் செய்தால் ஆண்டவன் ஏற்றுக் கொள்வார்  என்பதைப் பற்றி இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வசனம்-1:
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ , அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .“
                                                                             மத்தேயு - 25 : 40

சோகத்தின் சுமையை சுமந்து கொண்டு செல்வோர் ;
கவலையின் நிழலில் கண்ணீர்  சிந்துவோர் ;
துன்பச் சூறாவளியில் துவண்டு கிடப்போர் ;
தோல்வியின் கனலில் எரிந்து  தவிப்போர் ;
ஏமாற்றப் பட்டோரால் ஏங்கி இருப்போர் ;
துரோகத்தால் துன்பப்பட்டு கிடப்போர் ;
அறியாமையால் அழுது தவிப்போர் ;
ஏழ்மையால் வருந்தி இருப்போர் ;
காலத்தால் பாதிக்கப் பட்டோர் ;
சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர் ;
ஜாதியால் தள்ளி வைக்கப் பட்டோர் ;
மதத்தால் பாதிக்கப் பட்டோர் ;
இனத்தால் ஏமாற்றப் பட்டோர் ;
மொழி வெறியால் ஏமாற்றப் பட்டோர் ;
மனதால் பாதிக்கப் பட்டோர் ;

போன்ற
பல்வேறு நிலைகளில்,
கவலைகள் பல தன்னுள் கொண்டோர்
உதவி என்று வந்தால் அந்த எளியவர்களுக்கு,
எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு,
உன்னால் முடிந்த உதவியைச் செய்தால்
அவர்களுக்கு நீ செய்த உதவியானது
எனக்கு
அதாவது இயேசுவுக்கு
அதாவது கடவுளுக்கு - சேரும்
என்று
உண்மையாக சத்தியமாக சொல்லுகிறேன் என்கிறார்   இயேசு .
ஏழைக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் இயேசு



வசனம்-2 :
மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ , அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .”
                                                                          மத்தேயு - 25 : 45

மிகவும் எளியவர்களாகிய,
மிகவும் துன்பப்பட்டவர்களாகிய ,
மிகவும் கவலை கொண்டவர்களாகிய ,
மிகவும் விரக்தி கொண்டவர்களாகிய ,
மிகவும் வறுமையில் வாழ்க்கையை ஓட்டும்
இவர்களுடைய கண்ணிலிருந்து சிந்தும் கண்ணீரை துடைக்காமல்,
இதயத்திலிருந்து சிந்தும் இரத்தத்தைத் தடுக்காமல்,
உதவி என்று கரம் நீட்டியவருக்கு உதவி செய்யாமல் விட்டால்,
அந்த எளியோருக்கு செய்யாத உதவி

எனக்கு
அதாவது இயேசுவுக்கு
அதாவது ஆண்டவனுக்கு செய்ய வில்லை .
எளியவர்களுக்கு செய்யாதது எனக்கு செய்யாதது ,
எளியவர்களுக்கு செய்யாதது ,
ஆண்டவனுக்கு செய்யாதது என்கிறார்  இயேசு .




நீங்கள் எளியவர்க்கு இரங்கினால் ஆண்டவர்  உங்களை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் .
நீங்கள் எளியவர்க்கு இரங்கவில்லை எனில் ஆண்டவர்  உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்
என்கிறார்  இயேசு.



திருமூலர் :
               “””””படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
                        நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
                       நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
                      படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
                                                     ---------திருமூலர்---திருமந்திரம்-----

படமாடக் கோயில் என்றால் கோயிலில் உள்ள கடவுள் சிலை என்று பொருள் .
நடமாடக் கோயில் என்றால் அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதன் என்று பொருள் .

         “””””படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
                  நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா””””
கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு
பலவிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு
பன்னீர் , இளநீர் , பால் , சந்தனம், விபூதி
போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் .
சாமி சிலைகளை குளிப்பாட்டுகிறோம் .

பல வித ஆடைகள் கொண்டு
வேளைக்கு ஒன்று அல்லது நாளுக்கு ஒன்று
என்று உடை உடுத்துகிறோம் .

பலவிதமான அணிகலன்களை அணிவிக்கிறோம்
பலவகையான அணிகலன்களை சூட்டி
அலங்காரம் செய்கிறோம் .
அழகு செய்கிறோம் .

கோயிலில் இருக்கும் சாமி சிலைக்கு உணவு படைக்கிறோம் ;
பலவிதமான சுவை மிக்க உணவு படைக்கிறோம்  ;
பலவிதமான உணவுகள் கொண்டு படையல் போடுகிறோம் ;

இவற்றையெல்லாம் கோயிலில் உள்ள சாமி சிலைக்கு செய்வதால் என்ன பயன்?
இவற்றையெல்லாம் கல்லாக இருக்கும் சிலைக்கு செய்வதால் என்ன பயன்?
ஒரு பயனும் இல்லை .

கோயிலில் உள்ள கடவுளுக்கு செய்வது ,
செய்யும் செயல்கள் ,
வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ,
ஏழ்மையில் நடமாடிக் கொண்டிருக்கும் ,
மனிதருக்கு ஏழைக்கு சென்று சேர்வதில்லை
அதாவது
நடமாடும் கோயிலான மனிதனுக்கு பயன் இல்லை
நடமாடும் ஏழைக்கு பயன் இல்லை
என்கிறார்  திருமூலர் .



         “”””நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
                படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
உண்ண வழி இல்லாமல் தவிக்கும் ஏழைக்கு;
பசித்து வற்றிப் போன வயிற்றை உடைய ஏழைக்கு;
காய்ந்து கருகிப் போன வாழ்க்கை உடைய ஏழைக்கு;
பசியினால் தினம் தினம் வருந்தும் ஏழைக்கு;
உணவு கிடைக்காமல் இறந்து கொண்டிருக்கும் ஏழைக்கு ;
உணவு கொடுக்க வேண்டும்.

உடுத்த ஆடை இல்லாமல் ,
மானத்தை மறைக்க ஆடை இல்லாமல்,
ஏழ்மையினால் கந்தலாடை அணியும் ,
ஏழைக்கு ஆடை கொடுக்க வேண்டும்.

வறுமையில் சிக்கி முன்னேறத் துடிப்பவர்க்கு,
பொருளாதார வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்க்கு,
அன்றாட வாழ்க்கைத் தேவையை நிறைவேற்ற முடியாமல்
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு ,
பொருளாதார உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு
வறுமையில் வாடும் ஓர்  ஏழைக்கு உதவிகள் செய்தால்;
உண்ண உணவு இல்லாதவர்க்கு உணவு கொடுத்தால்;
உடுத்த உடை இல்லாதவர்க்கு உடுத்த உடை கொடுத்தால்;
இருக்க இடம் இல்லாதவர்க்கு இருக்க இடம் கொடுத்தால்;
அதை விட புண்ணியம் வேறு இல்லை.
இத்தகைய காரியத்தை இத்தகைய செயலை
எளியவருக்கு செய்வதை
மனது நிறையும் படி செய்வதை கடவுள் ஏற்றுக் கொள்வார் .
அது வீணாகாது.
இல்லாத ஒருவருக்கு கிடைக்கிறது.

அதை விடுத்து சிலைகளுக்கு
செலவு செய்வதால் என்ன பயன்?

மனது விருப்பப்பட்டு செய்யப்படும் உதவியானது ,
எந்தவிதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல்
மனிதருக்கு செய்யப்படும் உதவியானவது,
புண்ணியத்தில் சேருகிறது.


நடமாடும் கோயிலான
கடவுளை மனதில் கொண்ட மனிதனுக்கு செய்பவை ,
படமாடக் கோயிலான
கோயிலில் உள்ள கடவுள் ஏற்றுக் கொள்வார்  ,
என்கிறார்  திருமூலர்.



திருமூலர்  நாத்திகம் பேசவில்லை:
இந்த பாடலின் மூலம் திருமூலர்  கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை.
கடவுளை இல்லை என்று சொல்லி ,
கடவுளை மறுத்து , எதிர்த்து ,
நாத்திகவாதியாக பாடல் எழுதவில்லை.

புறத்தில் உள்ள கடவுளுக்கு புற வழிபாட்டின் மூலம் சேவைகள் பல கடவுளுக்கு செய்கின்றாயே,
அகத்திலே உள்ள கடவுளை முதலில் உணர்ந்து கொள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்.

அகத்தில் கடவுளைக் கொண்டவனுக்கு உதவி செய்.
அகத்தில் கடவுளைக் கொண்டவனுக்கு உதவி செய்தால் அது நேரடியாக இறைவனை சென்றடையும்.

புற வழிபாடுகள் அனைத்தும் இறைவனை அகத்தில் உணர்வதற்கு அமைக்கப்பட்டது தான்.
புறத்தில் உள்ள கடவுளை மட்டும் காணும் நீ அகத்தில் உள்ள கடவுளைக் காணத் தவறி விடுகிறாய்.

புறத்தில் உள்ள கடவுளுக்கு ,
அகத்தில் உள்ள கடவுளுக்கு ,
இரண்டில் எந்த நிலையில் உள்ள கடவுளுக்கு ,
எந்த கடவுளுக்கு செய்யும் சேவைகள் கடவுளை அடையும் .
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
அதை உணர்ந்து செய்ய வேண்டும் என்கிறார்  திருமூலர் .

புறத்தில் கடவுளுக்கு செய்யும் சேவைகள்,
அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதனுக்கு சென்று சேராது.
அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதனுக்கு செய்யும் சேவைகள்,
புறத்தில் உள்ள கடவுளுக்கு சேரும் .
கடவுள் ஏற்கும் என்கிறார்  திருமூலர்.



அகவழிபாடு-புறவழிபாடு:
அகவழிபாட்டை உணராமல் , புறவழிபாட்டை அதில் உள்ள தன்மையை தவறாக உணர்ந்து கொண்டதால் தான் இந்த சமுதாயத்தில்
பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட காரணம்;
பல்வேறு கலகங்கள் ஏற்பட காரணம்;
இவை அறியாமை என்ற களங்கம் இதயத்தை சூழ்ந்து இருப்பதால் உண்டாவது .

மக்கள் முன்னேற்றத்திற்கு தடைகளாய் உள்ளவைகளை வரிசைப் படுத்தினால் ,
அனைத்திற்கும் அடித் தளமாக,
தலையானதாக இருப்பது அறியாமை.
அறியாமையே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளது.
அறியாமையே மக்கள் முன்னேற்றத்தில் தடையாக இருந்து முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துகிறது.

அறியாமை என்ற வேரிலிருந்து தான் பிரிவினை என்ற மரம் உருவாகி,
பேராசை , சினம் , கடும்பற்று ,முறையற்ற பால்கவர்ச்சி ,
உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற கிளைகள் வளர்ந்து
பொய் ,சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல்
போன்ற இவைகள் செழித்து வளர்கின்றன .

இதன் மூலம் மதச் சண்டை , சாதி பாகுபாடு , மொழி வெறி,
மலர்கள் பூத்து அமைதியென்னும் மணத்தை
இச்சமுதாயத்தில் பரவ விடாமல் செய்து விடுகின்றன.
இதன் காரணமாக
வேலையில்லாத் திண்டாட்டம் ,வறுமை
போன்ற
கிருமிகள் உருவாகி இச்சமுதாயத்தை அரித்து விடுகின்றன;
மக்களின் சிந்தனையை மழுங்க வைக்கின்றன;
அறிவுச் சாளரம் மூடப் படுகிறது ;
இதனால் மக்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது;

களைகளைக் களைவதோ,
முட்களை வெட்டுவதோ,
சமுதாய முன்னேற்றத்திற்கான தீர்வாக அமையாது.
மக்கள் முன்னேற்றத்திற்கு தடையாக
அடித்தளமாக உள்ள அறியாமையை விரட்டுவதே,
மக்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் வழி ஆகும்.
அறிவு விளக்கு மனிதனின் மனதில் ஏற்றப் பட்டாலொழிய ,
அறியாமை இருள் அகற்றப் பட முடியாது.

அன்பென்னும் கோயில் கட்டி,
அறிவென்னும் தீபம் ஏற்றி,
சமதானமென்னும் கடவுளை வணங்கி,
அமைதியென்னும் பக்தியை பரப்புவதே,
மக்களை முன்னேற்றுவதற்கான வழி ஆகும்.

அறியாமை நெஞ்சம் கொண்டவர்களால் ,
அறிந்து கொள்ளும் ஆசை இல்லாதவர்களால்,
புற வழிபாட்டின் உண்மை நிலை அறியாமல்,
புற வழிபாட்டின் ரகசியம் புரியாமல்,
அக வழிபாட்டிற்குள் செல்லாமல் இருப்பதே
பிரச்சினைகள் பல தோன்றுவதற்கு காரணம்.
கடவுளின் உண்மை நிலை உணர வேண்டும் என்கிறார்  திருமூலர்.



இயேசு கிறிஸ்து - திருமூலர் :
இயேசு ,ஏழைகளுக்கு செய்வது ஆண்டவனுக்கு செய்வது என்கிறார் .

அவ்வாறே,
திருமூலரும் ,கடவுளுக்கு செய்தால் ஏழைகளுக்கு சென்று சேராது ;
ஏழைகளுக்கு செய்தால் ஆண்டவனுக்கு சென்று சேரும் ;
என்கிறார்  திருமூலர்.


                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுபத்து  ந்தான்முற்றே “”