May 27, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-13


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-13

நோய்த் தொற்று
ஏற்பட்ட கிராமத்திலிருந்து
நோய்த் தொற்று
ஏற்டாத
கிராமத்தை
வேப்பிலையின் மூலம்
பாதுகாத்தாலும்
அதையும் மீறி
சில சமயங்களில்
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்தவர்களுக்கு
நோய்த் தொற்று
ஏற்பட்ட
வாய்ப்பு இருக்கிறது

அவ்வாறு
நோய்த் தொற்று
ஏற்பட்டால்
அந்த நோயைக்
குணப்படுத்துவதற்கும்
அந்த
நோய்த் தொற்று
மற்றவருக்கும்
பரவாமல் தடுப்பதற்கும்
மருந்துகளைப்
பயன்படுத்தாமல்
உணவின் மூலம்
நோயைக் குணப்படுத்தும்
முறையைக்
கையாண்டனர்
நம் முன்னோர்கள்

மருத்துவ குணம்
கொண்ட
உணவுகளில்
நோய் எதிர்ப்பு சக்தி
கொண்டவையாகவும்
நோயைக்
குணப்படுத்தக்
கூடியவையாகவும்
உள்ளவைகளில்
மிக முக்கியமாகக்
கருதப்படும்
மூன்று உணவுப்
பொருள்களை
தேர்ந்தெடுத்து
பயன்படுத்தினர்
அவைகளில்

ஒன்று கூழ்
இரண்டு கருவாட்டுக் குழம்பு
மூன்று முருங்கைக் கீரை

கூழ்
கேழ்வரகு, அரிசி,
உப்பு
ஆகியவற்றைக்
கொண்டு தயார்
செய்யப்படும்
கேழ்வரகு கூழ்
உடம்புக்கு
குளிர்ச்சியைத் தரும்
கேழ்வரகில் கால்சியம்
சத்து அதிகமாக
உள்ளதால்
எலும்புகளுக்கு
நல்லது
உடம்புக்கு வலுவைத்
தரும்

நோய் வந்தால்
உடல் பலவீனப்படும்
உடல் தளர்ச்சி
அடையும்
எழுந்து நடக்க
முடியாது

இதனை
சரிசெய்தவற்காக
இந்த கேழ்வரகு
கூழை தயார் செய்தனர்

மேலும்
கூழில்
தேவைப்படும்
மூலிகைப் பொருட்கள்
சிலவற்றைக் கலந்து
கூழ் தயார்
செய்தனர்

கூழை
பெரிய பெரிய  
அண்டாக்களில்
தயார் செய்தனர்
அந்த ஊரில்
எவ்வளவு
மக்கள் இருக்கிறார்களோ
அவ்வளவு
மக்களும்
சாப்பிடுவதற்கு
ஏற்றார்போல்
கூழ் தயார்
செய்தனர்

ஊரின் மையப்பகுதியிலோ
கல்யாண மண்டபத்திலோ
கோயிலிலோ
கூழை தயார் செய்தனர்

கூழுடன்
மேலும்
இரண்டு
பொருட்களையும்
அதாவது
கருவாட்டுக்
குழம்பையும்
முருங்கைக்கீரையும்
தயார் செய்தனர்

இவைகள்
இரண்டும்
மருத்துவ குணம்
கொண்டவை
அதனால்
கூழுடன்
இவைகள்
இரண்டையும்
தயார் செய்தனர்

இவைகள்
இரண்டிலும் உள்ள
மருத்து குணங்கள்
எவை என
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////


May 26, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12

அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை குணமடையச்
செய்வதற்கு
ஆங்கில மருத்துவத்தில்
அன்றும் இன்றும்
மருந்து கண்டு
பிடிக்கப்படவில்லை
உலகில் எங்குமே
அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்
படவில்லை

அம்மை மருந்து
கண்டுபிடிக்கப்படாத
அந்த காலத்திலும் சரி
இந்த காலத்திலும் சரி
அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை போக்குவதற்கு
பயன்படுத்திக் கொண்டு
இருப்பது தான் வேப்பிலை

வேப்பிலை
ஒரு மிகச் சிறந்த
கிருமி நாசினி ஆகும்

அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்படாத
அந்தக் காலங்களில்
அம்மை நோய்
ஏற்பட்டு விட்டால்
அம்மை நோயிலிருந்து
குணமடைவதற்கும்
அம்மை நோய்
பரவாமல்
பாதுகாப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டது
தான் வேப்பிலை

அம்மை நோயைக்
குணப்படுத்தும் சக்தியும்
அம்மை நோயைப்
பரவாமல் தடுக்கும்
சக்தியும்
வேப்பிலையில்
உள்ளதை கண்டுபிடித்த
நம் முன்னோர்கள்
அம்மை நோயைக்
குணப்படுத்த
வேப்பிலையைப்
பயன் படுத்தினர்

அம்மை ஆரம்பித்தது
முதல் குணமாகி
நோயாளி எழுந்திருக்கும்
நிலை உருவாகும் வரை
வேப்பிலையை
பல்வேறு விதங்களில்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

அம்மை வந்து விட்ட
வீட்டிலின் வாசலில்
வேப்பிலையை
சொருகி வைப்பார்கள்
அதற்கு அர்த்தம்
இந்த வீட்டில் ஒருவருக்கு
அம்மை நோய் வந்திருக்கிறது
ஆகவே சுத்தமாக
இருப்பவர்கள் மட்டுமே
வீட்டிற்குள்
வர வேண்டும்
என்று பொருள்

அதுமட்டுமல்ல
அம்மை நோயினால்
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
வெளிக்கிளம்பும் கிருமிகள்
வேப்பிலையில் பட்டு
கிருமிகள் இறந்து விடும்
இதனால் அம்மை நோய்
வெளியில் பரவி
மற்றவர்களுக்கு இந்த
அம்மைநோய்
பரவாமல் தடுக்கப்படும்,

வெள்ளைத்
துணியின் மேல்
வேப்பிலையைப் பரப்பி
அம்மை நோயால்
பாதிக்கப்பட்டவரை
படுக்க வைப்பார்கள்

மேலும்
நோயாளியைச் சுற்றிலும்
வேப்பிலையை
போட்டு வைப்பார்கள்
வேப்பிலையை
நோயாளியின் மேல்
காற்று படுமாறு
எடுத்து வீசுவார்கள்

கீழே உள்ள
வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
சுற்றியுள்ள வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
வேப்பிலையை பயன்படுத்தி
வீசும் போது எழும் காற்றும்
உடலின் வெளிப்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்வதோடு
உடலின் உள்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்லும் சக்தியையும்
கொண்டது வேப்பிலை

தலைக்கு தண்ணீர்
விடும் போது
தண்ணீரில்
வேப்பிலையைப் போட்டு
வெயிலில் சிறிது நேரம்
வைத்து விட்டுத் தான்
பிறகு அம்மை நோய்
பாதிக்கப்பட்டவருக்கு
தலைக்கு தண்ணீர்
விடுவார்கள்.
இதனால் உடலில்
உள்ள கிருமிகள்
கொல்லப்படுவதோடு
உடல் எரிச்சலையும்
தடுக்கும்

இவ்வாறு அம்மை
நோய் பாதித்தவருக்கு
வேப்பிலையை
பயன்படுத்தி செய்யும்
செயல்கள் யாயும்
நாம் பார்த்து இருப்போம்

இந்த செயல்கள் எல்லாம்
அம்மை நோய் பாதிக்கப்பட்டவருக்கு
அம்மை நோய் குணமாகுவதற்கும்,
அம்மை நோய் மற்ற
இடங்களுக்கு பரவாமல்
தடுப்பதற்கும்
செய்யப்படுவது ஆகும்

உலகத்திற்கே
மருத்துவம்
சொல்லிக் கொடுத்தவர்கள்
நம் முன்னோர்கள்
நம்மைச் சுற்றியுள்ள
இயற்கை வளத்தை வைத்தே
நோயைக் குணப்படுத்தக்
கூடிய முறைகளை
சொல்லிச் சென்று
அதை இன்றும்
கடைப்பிடிக்க வைத்த 
நம் முன்னோர்கள் 
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////


May 25, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 11


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 11

நோயினால் பாதிக்கப்பட்ட
கிராமத்திலிருந்து
நோயினால் பாதிக்கப்படாத
கிராமத்தை
தனிமைப்படுத்துவதற்காக
பயன்படுத்தப்படும்
பொருள் வேப்பிலை

அனைத்து வகை
மூலிகைகளையும்
எடுத்துக் கொண்டால்
மூலிகை வகைகளிலேயே
அனைத்து வகை
நோய்களையும் தீர்க்கக்கூடிய
சக்தி வாய்ந்த
ஒரு மூலிகை
உண்டு என்றால்
அது வேப்பமரம் 
மட்டும் தான்

வேப்பமரத்தின்
உச்சி முதல்
அடி நுனிவேர் வரை
உள்ள பகுதிகள்
அனைத்தும்
மருத்துவ குணம்
கொண்டதாகும்

அதாவது
வேப்பமரத்தில் உள்ள
வேப்பிலை, பூ,
காய், பழம்,
கொட்டை, கட்டை
ஆகிய அனைத்தும்
மருத்துவத்திற்கு
பயன்படுவதால்
வேப்பமரத்தை
ஒரு சர்வரோக நிவாரணி
என்று கூறுகிறோம்

சர்வம் என்றால்
அனைத்தும் என்று பொருள்
ரோகம் என்றால்
நோய் என்று பொருள்
நிவாரணி என்றால்
தீர்க்கக் கூடியது
என்று பொருள்
சர்வரோக நிவாரணி
என்றால்
அனைத்து வகையான
நோய்களையும்
தீர்க்கக் கூடியது
என்று பொருள்

அதில் வேப்பிலை
அதிக முக்கியத்துவம்
கொண்டது

வேப்பிலைக்கு
நோயைத் தீர்க்கக்
கூடிய சக்தி உண்டு
மேலும் நோய்
பரவ விடாமல்
தடுக்கும் சக்தியும்
வேப்பிலைக்கு
உண்டு

இதனை உணர்ந்த
நம் முன்னோர்கள்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
நோய் ஏற்டாத
தங்கள்
கிராமத்தில் உள்ள
மக்களுக்கு
நோய்த் தாக்குதல்
ஏற்படாத வண்ணம்
இருக்க வேண்டும்
என்பதற்காக
வேப்பிலையை
ஊரைச் சுற்றி உள்ள
எல்லை முழுவதும்
கட்டி வைத்தனர்

மேலும்
வேப்பிலையை
வீட்டைச் சுற்றி
இருக்கும் இடத்திலும்
வீட்டு வாசலிலும்
வீட்டின் பின்புறத்தில்
உள்ள இடத்திலும்
எங்கு எங்கு
வீட்டைச் சுற்றி
இடம் இருக்கிறதோ
அங்கெல்லாம்
வேப்பிலையை
கட்டி வைத்தனர்

இதன் மூலம்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
வேப்பிலையின் மூலம்
நோய் ஏற்படாத
கிராமத்தை
நோய்க் கிருமிகள்
தாக்காதவாறு
மக்களை காப்பாற்றினர்
நம் முன்னோர்கள்

வேப்பிலையை
ஊரைச் சுற்றியும்
வீட்டைச் சுற்றியும்
கட்டுவது என்பது
நோய்க் கிருமிகள்
ஊருக்குள் வரவிடாமல்
தடுப்பதற்கும்
நோய் கிருமிகளை
அழிப்பதற்கும்
நோய் பரவாமல்
தடுப்பதற்கும்
பயன்படுத்தும்
முறை ஆகும்

இதை தான்
காப்பு கட்டுதல்
என்கிறோம்

நோய்க் கிருமிகளை
ஊருக்குள் வர விடாமல்
தடுத்து விட்டோம்

அடுத்து
ஊரில் உள்ளவர்கள்
வெளியூர் சென்று விட்டு
மீண்டும்
ஊருக்குள் வந்தால்
நோய்த் தொற்று
ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது
என்ற காரத்தினால்
காப்பு கட்டி விட்டால்
ஊரில் உள்ளவர்கள்
ஊரை விட்டு
வெளியே செல்லக்கூடாது
என்றும்
வெளியூரை சேர்ந்த
ஊர்க்காரர்கள்
ஊருக்குள் வரக்கூடாது
என்றும் கூறினர்

இதன் மூலம்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
நோய்த் தொற்று
ஏற்படாமல்
தங்கள் ஊரில் உள்ள
மக்களை காப்பாற்றிய
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////


May 24, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-10


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-10

அந்தக் காலத்தில்
ஒரு கிராமத்தில்
நோய் ஏற்பட்டால்
நோய் தொற்று
ஏற்பட்டு
பல பேர்
இறக்கக்கூடிய
சூழ்நிலை ஏற்படும்

அதுமட்டுமல்லாமல்
அந்த நோயானது
பக்கத்தில் உள்ள
கிராமங்களுக்கும்
பரவி
பக்கத்து
கிராமங்களையும்
பாதிப்பு
அடையச் செய்வதோடு
அந்த கிராமத்தில்
வசிக்கும்
பலபேர் இறக்கக்கூடிய
சூழ்நிலையையும்
ஏற்படுத்தும்

ஒவ்வொரு வருடமும்
ஒரு குறிப்பிட்ட
காலத்தில்
இத்தகைய நிலை
ஏற்படுவதை
உணர்ந்த
நம்முடைய
முன்னோர்கள்
இத்தகைய சூழ்நிலை
இனி வருங்காலங்களில்
ஏற்படாமல்
இருக்க வேண்டுமானால்
என்ன செய்வது
என்று யோசித்தனர்,

நோயினால் பாதிப்பு
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்
நோய்தொற்றிக்
கொண்ட
கிராமத்திலிருந்து
நோய் ஏற்படாத
கிராமத்தை
தனிமைப்படுத்த
வேண்டும்
என்று முடிவெடுத்தனர்

அதாவது
நோய் உண்டான
கிராமத்திலிருந்து
நோய் உண்டாகாத
கிராமத்தை
பிரித்து விட
வேண்டும்
என்று முடிவு
எடுத்தனர்

அது மட்டுமல்லாமல்
நோய் மக்களுக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டும்
என்பதற்காகவும்
அதையும் மீறி
நோய்
ஏற்பட்டு விட்டால்
நோயிலிருந்து
குணமடையும்
வழிகளையும்
உண்டாக்கி வைத்தனர்

அந்த வழிமுறைகளை
மக்கள் எப்படி
பின்பற்ற வேண்டும்
என்ற முறைகளை
வகுத்து வைத்தனர்
அதை ஆண்டுதோறும்
முறையாக
பின்பற்ற வேண்டும்
என்பதற்காக
பண்டிகையாக மாற்றி
பண்டிகையை
கொண்டாட வைத்து
விட்டனர்.

ஆண்டு தோறும்
வருடத்தில்
ஒரு குறிப்பிட்ட
மாதத்தில்
அந்த பண்டிகையை
கொண்டாட வேண்டும்
என்றும்
அதை அனைவரும்
தொடர்ந்து
பின்பற்றி
கொண்டாடி
வர வேண்டும்
என்ற விதிமுறையை
வகுத்து வைத்தனர்

நாம் வருடந்தோறும்
அந்த பண்டிகையை
கொண்டாடுகிறோம்
ஆனால்
அந்த பண்டிகையை
எதற்காக
கொண்டாடுகிறோம்
என்ன
காரணத்திற்காக
கொண்டாடுகிறோம்
அதில் உள்ள
அர்த்தம் என்ன
என்பதை
உணராமல்
நாம் அந்த
பண்டிகையை
கொண்டாடி வருகிறோம்

அந்த பண்டிகை
எந்த பண்டிகை
என்றும்
அந்த பண்டிகையை
எத்தகைய காரணத்திற்காக
கொண்டாடுகிறோம்
என்பதையும்
பார்ப்போம்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////