February 25, 2020

பரம்பொருள்-பதிவு-139


           பரம்பொருள்-பதிவு-139

சகாதேவன் :
" களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவன்
அரவான்
என்பதையும்  ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
வருகின்ற
அமாவாசை
என்பதையும் ;
குறித்துக்
கொடுத்தேன் ; "

"இதில் தவறு
எதுவும்
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே ! "

"நான் சொன்னதில்
அரவானைப்
பற்றிய
தனிப்பட்ட
விஷயங்கள்
எதுவும்
இல்லையே ! "

"பொதுவான
விஷயங்கள்
தானே
இருக்கிறது ! "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி எந்த ஒரு
சொல்லையும்  
நான் சொல்லவே
இல்லையே  ! "

உலூபி :
"அரவானைப் பற்றி
நீங்கள் சொன்னது
இன்னொருவருடைய
தனிப்பட்ட
விஷயம்
இல்லையா ? "

சகாதேவன் :
"அரவான்
எதிர்காலத்தில்
எப்படி இருப்பான்  ?
அரவானுடைய
எதிர்கால
வாழ்க்கை
எப்படி இருக்கும் ?
என்ற கேள்வி
எழுப்பப்பட்டு
அதற்கு நான்
பதில் சொல்லி
இருந்தால் - அது
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
சொன்னதாக
இருக்கும் "

"அப்போது தான்
நான் சோதிட
சாஸ்திரத்தை
மீறியவனாவேன் "

"ஆனால் நான்
களப்பலி
கொடுப்பதற்கு
தகுந்த ஆள்
அரவான்
என்பதையும்  ;
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
என்பதையும்  ;
குறித்துக்
கொடுத்தேன் ;"

"இது எப்படி
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
நான் சொன்னதாக
எடுத்துக் கொள்ள
முடியும் "

"அரவானைப்
பற்றிய
பொதுவான
விஷயங்களைத்
தானே
சொல்லியிருக்கிறேன் "

"இது எப்படி
தவறாகும்  "

"நான் தவறு
எதுவும்
செய்யவுமில்லை "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறவும் இல்லை "

"எந்த ரகசியத்தை
சொல்ல வேண்டும்
எந்த ரகசியத்தை
சொல்லக்கூடாது
என்று
சோதிட சாஸ்திரம்
வகுத்து வைத்த
விதியின் படி
தான் சொன்னேன் ;
சோதிட சாஸ்திர
விதிகளுக்குக்
கட்டுப்பட்டுத்தான்
சொன்னேன் ; "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி நான்
எந்த ஒரு
சொல்லையும்
சொல்லவேயில்லை  !

உலூபி :
"ஆனால்
உங்களுடைய
செயலால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்பட்டிருக்கிறது
என்பதைப்
பார்த்தீர்களா ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-02-2020
//////////////////////////////////////////

February 24, 2020

பரம்பொருள்-பதிவு-138


            பரம்பொருள்-பதிவு-138

உலூபி :
“களப்பலியை
ஆரம்பித்து
வைத்தது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் இல்லை ”

உலூபி :
“வேறு யார் ? ”

சகாதேவன் :
“அண்ணன்
துரியோதனன்”

உலூபி :
“அவருக்கு
வழி காட்டியது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் யாருக்கும்
வழி காட்டவில்லை “

உலூபி :
“ வழிகாட்டாமல்
என்ன செய்தீர்கள் ?”

சகாதேவன் :
“அவர் கேட்ட
கேள்விகளுக்கு
பதில் சொன்னேன்”

உலூபி :
“சோதிடத்தை
பயன்படுத்தி
அல்லவா பதில்
சொல்லி
இருக்கிறீர்கள் ? ”

சகாதேவன் :
“ஆமாம்! அவர்
கேட்ட
கேள்விகள்
அப்படி”

உலூபி :
“சோதிட
சாஸ்திரப்படி
ஒருவருடைய
விவரங்களை
அவருடைய
அனுமதி
இல்லாமல்
இன்னொருவருக்கு
சொல்லக்கூடாது
என்பது
உங்களுக்கு
தெரியுமில்லையா?”

சகாதேவன் :
“தெரியும்”

உலூபி : 
அப்படி
தெரிந்திருந்தும்
நீங்கள் எப்படி
அரவானைப்
பற்றிய
விஷயங்களை
வேறொருவரிடம்
சொன்னீர்கள் ? “

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
என்ன சொல்ல
வேண்டுமோ
அதைத் தான்
சொன்னேன்”

உலூபி :
“ரகசியங்களை
வெளியிடக் கூடாது
என்று சோதிட
சாஸ்திர விதி
சொல்கிறதே!”

சகாதேவன் :
“சோதிட சாஸ்திரம்
சொல்லும்
விதியை மீறி
நான் எந்த ஒரு
ரகசியத்தையும்
வெளியிடவேயில்லையே ? “

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானையும்,
களப்பலி
கொடுப்பதற்குரிய
நாளையும்
குறித்துக்
கொடுத்தது
நீங்கள் தானே ?
இது சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?”

சகாதேவன் :
“மீறிய செயல்
இல்லை”

உலூபி :
“அது எப்படி
மீறிய செயல்
இல்லாமல் போகும்”

சகாதேவன் :
“ஆமாம் ! மீறிய
செயல்
இல்லை தான் “

உலூபி :
“ஒரு நபரின்
தனிப்பட்ட
விஷயங்களை
சொல்வது
சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?
அரவானைப்
பற்றிச்
சொன்னது
தவறில்லையா ? “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-02-2020
//////////////////////////////////////////


February 22, 2020

பரம்பொருள்-பதிவு-137


           பரம்பொருள்-பதிவு-137

உலூபி :
“மைத்துனர் நகுலன்
அவர்களே !
நீங்கள் சென்ற
வழி அனைத்தும்
சரியான
வழியாகத் தான்
இருந்திருக்கிறது ;
தவறான வழியாக
இருந்ததில்லை ;
ஆனால் இப்போது
மட்டும் எப்படி
தவறான வழியை
சரியாகத்
தேர்ந்தெடுத்து
இருக்கிறீர்கள் ? “

நகுலன் :
“நான் எப்போதும்
தவறான வழியைத்
தேர்ந்தெடுத்து
சென்றதில்லை ;
என்னுடன் இருக்கும்
நல்லவர்கள் காட்டும்
வழியில் தான் சென்று
கொண்டிருக்கிறேன் ; “

 “நல்லவர்கள் காட்டும்
வழி எப்படி தவறான
வழியாக இருக்க முடியும் “

“அதனால் தான் நான்
செல்லும் வழி சரியான
வழியாக இருக்கிறது “

“எந்த ஒரு செயலைச்
செய்தாலும் நம்
முன்னால் வந்து நிற்பது
சரியான வழி  ;
தவறான வழி  ;
என்ற இரண்டு
வழிகள் தான் “

“சரியான வழி என்று
நினைத்துக் கொண்டு
தவறான வழியைத்
தேர்ந்தெடுத்து சென்று
கொண்டிருப்பவர்கள்
அனேகம் பேர்
இந்த உலகத்தில்
இருக்கின்றனர் “

“ஆனால் சரியான
வழியை சரியாகத்
தேர்ந்தெடுத்து சென்று
கொண்டிருப்பவர்கள்
மிகச் சிலரே
இந்த உலகத்தில்
இருக்கின்றனர் “

“சரியான வழி என்று
நினைத்துக் கொண்டு
தவறான வழியைத்
தேர்ந்தெடுத்தவர்களில்
மிக முக்கியமானவர்
அண்ணன்
துரியோதனன் அவர்கள் ;
அவர் தேர்ந்தெடுத்த
தவறான வழி
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் பெற்றது ; “

“ சரியான வழியை
சரியாகத் தேர்ந்தெடுத்தது
பாண்டவர்களே  ! “

“பாண்டவர்கள் தேர்ந்தெடுத்த
சரியான வழி
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் பெற்றது ; “

“சரியான வழி
(அல்லது)
தவறான வழி
இந்த இரண்டு வழிகளில்
ஏதேனும் ஒரு வழியில்
அரவான் களப்பலியாகத்
தான் வேண்டும் “

“ இரண்டில் எந்த வழியில்
களப்பலியாகப்
போகிறோம் என்பது
இது வரை
அரவானுக்கே தெரியாது

“பாண்டவர்கள் சார்பாக
அரவான் களப்பலியாவதே
சரியான வழி ;
பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியானால்
அரவானுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும்
நல்லது என்ற
காரணத்தினால் தான்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளித்தேன் “

“நான் தவறான வழிக்கு
சரியாக ஒப்புதல்
அளிக்கவில்லை “

“சரியான வழிக்கு
சரியாகத் தான் ஒப்புதல்
அளித்து இருக்கிறேன் “

“நான் தேர்ந்தெடுத்தது
சரியான வழி தான் “”

“சரியான வழியைத்
தான் நான்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்
என்பதை நீங்கள்
உணர்ந்து கொண்டால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க
ஒப்புதல் அளிப்பீர்கள் “

“உங்களுடைய
ஒப்புதலுக்காக
அனைவரையும் போல்
நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன்”

(நகுலனிடம் இதற்கு
மேல் கேட்பதற்கு
எதுவும் இல்லை என்ற
காரணத்தினால் உலூபி
சகாதேவனிடம் சென்றாள் ;
உலூபி சகாதேவனிடம்
கேட்க வேண்டிய
கேள்விகள்
நிறையவே இருந்தது ;
இரண்டு பேருடைய
கண்களும் நேருக்கு
நேராக மோதிக்
கொண்டன வார்த்தைகள்
மோதுவதற்கு ஆயத்தமாகின )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 22-02-2020
//////////////////////////////////////////