March 26, 2019

1-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            1-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே !
நான் பல ஆண்டுகளாக
பல்வேறு இணையதளங்களில்
ஆன்மீகக் கட்டுரைகள் ;
சித்தர்கள் பாடல்கள் ;
இலக்கியங்களில் உள்ள
பாடல்கள் ; ஆகியவற்றிற்கு
விளக்கங்கள் 200 க்கும்
மேற்பட்ட தலைப்புகளில் எழுதி
இருக்கிறேன் - இந்து மதம்
கிறிஸ்தவ மதம் ஆகிய
இரண்டு மதங்களையும்
இணைத்து ஆய்வு செய்து
100 க்கும் மேற்பட்ட ஆய்வுக்
கட்டுரைகளையும் எழுதி
இருக்கிறேன் !

அதனைத் தொடர்ந்து
Whats app -ல் கலிலியோ
அவர்களின் வாழ்ககை
வரலாறை எழுதிக்
கொண்டிருந்தபோது வேறு
யாரேனும் சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது என்று
சொல்லி இருக்கிறார்களா என்று
தேடியபோது ஒருவர் சொல்லி
இருக்கிறார் அவரை உயிரோடு
எரித்து விட்டார்கள் அவருடைய
பெயர் ஜியார்டானோ புருனோ
என்ற விவரம் கிடைத்தது

அவரைப்பற்றிய தெளிவான
விவரங்கள் எதுவுமே
இணையதளங்களிலும் ;
புத்தகங்களிலும் ;
வீடியோக்களிலும் ; இல்லை
அவரை சிறையில் அடைத்து
7 வருடம் சித்திரவதை செய்து
உயிரோடு எரித்துக் கொன்றார்கள்
என்ற விவரம் மட்டுமே
தமிழ், ஆங்கிலம் ஆகிய
இரண்டு மொழிகளிலும்  நான்
தேடியவைகள் அனைத்திலும்
இருந்தன அவரைப்பற்றி
விவரங்கள் அனைத்துமே
அழிக்கப்பட்டிருந்தன ;

இருந்தும் மிகுந்த
பிரயாசைக் கிடையில்
சென்னையில் உள்ள முக்கியமான
நூலகங்கள் பலவற்றிற்கும் சென்று
அங்கு உள்ள புத்தகங்களைப்
படித்துப் பார்த்து அவைகளை
நகல் எடுத்தும் இணையதளத்தில்
முடிந்த அளவு Download செய்த
தகவல்களை அடிப்படையாகக்
கொண்டும் பல்வேறு வகையான
வரலாற்று Video க்களை
அடிப்படையாகக் கொண்டும்
எழுதப்பட்டவை தான் நீங்கள்
படித்த ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு

ஆங்கில புத்தகங்களில் உள்ள
முக்கிய பகுதிகளை குறித்து
கொடுப்பேன் நண்பர்கள்
அனைவரும் அதை மொழி
பெயர்த்து கொடுப்பார்கள்
பின்னர் நான் அந்த
மொழிப்பெயர்ப்புகளையும்
புத்தகத்தையும் ஒப்பு நோக்கி
கருத்துக்களை உள் வாங்கிக்
கொண்டு டைப் செய்ய
ஆரம்பிப்பேன்

நான் ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி
செய்து ஏறத்தாழ 500 பக்கங்களுக்கு
மேல் டைப் செய்து வைத்திருந்தேன்
அந்த கருத்துக்களில் கிட்டத்தட்ட
160 பக்கங்கள் வரைதான்
பதிவு செய்திருப்பேன்

விசாரணைக் காட்சிகளும்
பெரும்பாலான முக்கியமான
காட்சிகளும் அதனுடைய
கருத்து சிதைந்து விடக்கூடாது
என்ற காரணத்திற்காக பத்து
நாட்கள் ஒரே இரவில் எழுதினேன்
அதாவது இரவு 09.00 மணிக்கு
தொடங்கி காலை 06.30 மணி
வரை முடித்து விட்டு தூங்காமல்
அலுவலகத்திற்கு சென்றிருக்கிறேன்
தொடர்ச்சியாக ஒரே இரவில்
டைப் செய்து விட்டு
அதை இரண்டு அல்லது
மூன்று பதிவுகளாக பிரித்து
பதிவு செய்தேன்

எண்ணிக்கையில் அடங்காத
புத்தகங்களை படித்து
அதில் குறிப்பிட்ட பக்கங்கள்
600 பக்கங்களுக்கு மேல்
புத்தகங்களிலிருந்து
நகல் எடுத்து இருக்கிறேன்
இணையதளத்தில் இருந்து
1000 க்கும் மேல் உள்ள
பக்கங்களை தரவிறக்கம்
செய்து Print எடுத்திருக்கிறேன்

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு மற்றும்
அதில் இடம்பெறும் விசாரணைக்
காட்சிகளை தமிழில் முதன்
முதலில் திரைக்கதை வசனம்
அமைத்து எழுதி இருக்கிறேன்

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை எனக்கு
எழுதுவதற்கு உறுதுணையாக
இருந்தவர்கள்

1,கிரிஷ் கிருஷ்ணா
இயக்குநர், இசையமைப்பாளர்
சென்னை

2.வெங்கட சுப்பிரமணி
Manager-வேலூர்

3.சையது ரியாஸ்
System Administrator-DUBAI

4.கார்த்தி
Visa Executive, சென்னை

5.சந்தோஷ குமார்
HR-Assistant. சென்னை

இவர்களுடைய அயராத
உழைப்பினாலும் உதவியினாலும்
ஒத்துழைப்பினாலும் உருவானது
தான் ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு

இதை எல்லாம் கடந்து
நான் எழுதுவதற்கு எந்தவிதமான
எதிர்ப்பும் சொல்லாமல்
எந்தவிதமான தடங்கலையும்
செய்யாமல் எனக்கு என்றும்
உறுதுணையாக இருந்து
கொண்டிருக்கும் என்னுடைய
அன்பு மனைவி பிரதிபா
அவர்களுக்கும் என்னுடைய
நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

என்னுடைய நண்பர் ஒருவர்
ஜியார்டானோ புருனோவின்
ஆத்மாவை 600 ஆண்டுகள்
கழித்து உயிரோடு உலவ
விட்டு இருக்கிறீர்கள் என்றார்
நான் சொன்னேன் இல்லை
600 ஆண்டுகளாக உலவிக்
கொண்டிருந்த ஜியார்டானோ
புருனோவின் ஆத்மாவை
அமைதி பெற
வைத்திருக்கிறேன் என்று !

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்

March 24, 2019

திருக்குறள்- பதிவு - 131

திருக்குறள்- பதிவு - 131

“ தான் வாழ்வதற்காகவும் ;
தன்னுடைய குடும்பம்
வாழ்வதற்காகவும் ;
தன்னுடைய சந்ததிகள்
வாழ்வதற்காகவும் ;
பணத்திற்காகவும் ;
பதவிக்காகவும் ;
அதிகாரத்திற்காகவும் ;
மானமிழந்து மண்டியிட்டு
கால்பிடித்து வாழ்பவர்கள்
மத்தியில் ,

“ கொள்கை என்றால்
என்ன என்று தெரியாமல்
தங்களுடைய
வாழ்வாதாரத்திற்காக
போராட்டம் நடத்துபவர்களை
சமூக விரோதிகள் என்றும் ;
தங்கள் உரிமைக்காக
போராடுபவர்களை
தீவிரவாதிகள் என்றும் ;
தேவையற்ற வார்த்தைகளை
பேசிக்கொண்டு ;
சுகபோகத்தில்
திளைத்துக் கொண்டு ;
கூத்தடித்துக் கொண்டு ;
கோட்டையைப் பிடித்து
விடலாம் என்று
பதவி ஆசை பிடித்து
அலைபவர்கள்
மத்தியில் ,

“ இருண்டு கிடந்த மக்கள்
உள்ளங்களில் பகுத்தறிவு
என்ற அறிவு விளக்கு
ஏற்றி - உண்மையான
பகுத்தறிவாதிகள்
வாழ்ந்த நாட்டில்
பகுத்தறிவு என்றால் என்ன
என்று தெரியாமல்
பகுத்தறிவுக்கு ஒவ்வாத
செயல்களைச் செய்து
கொண்டு - பகுத்தறிவு
என்ற போலியான
முகமூடியை அணிந்து
கொண்டு மக்களை
அடிமைகளாக வைத்து
ஆள நினைப்பவர்கள்
மத்தியில் ,

“ அரசியல் அதிகாரம் ;
பொருளாதார பாதுகாப்பு ;
ஆகியவற்றை பயன்படுத்தி
மதத்தின் பெயரால்
மக்களை ஏமாற்றி
ஆட்சி செய்து
கொண்டிருந்தவர்கள்
நாட்டுப்பற்று ,
மதப்பற்று ,
கடவுள் பற்று - ஆகிய
பற்றுகளை வைத்துக்
கொண்டு - மக்களிடையே
பகைமையை வளர்த்து ;
அமைதியின்மையை
ஏற்படுத்தி  ;
அதிகாரத்தை கைப்பற்றி ;
ஆட்சி செய்ய துடிப்பவர்கள்
மத்தியில் ,

“ தனக்காக வாழாமல்
இந்த சமுதாயத்திற்காகவே
வாழ்ந்து; ‘

“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்துக்கு
எதிராக கருத்து சொன்ன
காரணத்திற்காகவும் ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
அனைத்து பழக்க
வழக்கங்களிலும்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“சர்ச்சுகள் காலம் காலமாக
கடைபிடித்துவரும்
மதப் பழக்கங்களில்
மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்று சொன்ன
காரணத்திற்காகவும் ; ‘

“ இந்த உலகத்திலுள்ள
மக்கள் அனைவரையும்
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
மனிதனை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்யக் கூடாது
அந்த முயற்சிகளை
நிறுத்த வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“ கல்வியும், விஞ்ஞானமும்
மதம் மற்றும் அரசியல்
தலையீடு இல்லாமல்
சுதந்திரமாக இருக்க
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“ ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் ; ‘

“ 17-02-1600-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டதற்கு
நினைவாக ;
09-07-1889-ஆம் ஆண்டு
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு அமைக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின் சிலை ;
24-03-2019 இன்று வரை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு தான்
ஜியார்டானோ
புருனோவின் சிலை
நின்று கொண்டிருக்கிறது ‘

“ வாட்டிகன் நகரம் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஆக மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களுக்கும்
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
இன்றளவும் நின்று
கொண்டிருக்கும்
ஜியார்டானோ புருனோவின்
சிலை ஒரு ஆறாத
வடுவாகத் தான்
இருந்து கொண்டிருக்கிறது
என்பது வரலாறு
பதிவு செய்து
வைத்திருக்கும் உண்மை ; ‘

“ ஜியார்டானோ புருனோ
என்ற நெருப்பை
நெருப்பால் எரித்த
கிறிஸ்தவர்கள்
ஜியார்டானோ
புருனோவின் பார்வை
என்ற நெருப்பால்
ஒவ்வொரு கணமும்
எரிந்து கொண்டு தான்
இருக்கிறார்கள் ; ‘

---------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  24-03-2019

“ஜியார்டானோ புருனோ
என்ற புரட்சியாளர்
கிறிஸ்தவர்களால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டாலும் ;
அவரை உயிரோடு
எரித்த அந்த நெருப்பு ;
இன்று வரை
அணையாமல் இருந்து ;
கோடிக்கணக்கான
ஜியார்டானோ
புருனோக்களை உருவாக்கிக்
கொண்டுதான் இருக்கிறது ;”

“ ஜியார்டானோ புருனோவை
கிறிஸ்தவர்கள் உயிரோடு
எரித்துக் கொன்ற
காட்சியை மீண்டும்
ஒருமுறை பாருங்கள்
புரட்சியின் வித்து
எங்கே விதைக்கப்படுகிறது
என்பது தெரியும் !! “

“ ஜியார்டானோ புருனோ
என்ற புரட்சியாளரின்
போராட்ட வாழ்க்கை
இத்துடன் நிறைவு
பெறுகிறது !! “






March 23, 2019

திருக்குறள்-பதிவு-130


                      திருக்குறள்-பதிவு-130

“ 2000-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட
400-வது இறந்த தினம் ;
இந்த 400-வது
இறந்த தினத்தை
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்கள் ;
ஜியார்டானோ
புருனோவை
பின்பற்றுபவர்கள் ;
அனைவரும்
புனித ஆண்டாக
கொண்டாடி மகிழ்ந்தனர்; “

“ ஜியார்டானோ
புருனோவின்
400-வது இறந்த
ஆண்டான
2000-ஆம் ஆண்டில்
கார்டினல்
ஏஞ்ஜலோ சோடானோ
(Cardinal Angelo
Sodano)
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட செயல் ;
ஒரு சோகமான
அத்தியாயம் ;
(Bad Episode)
என்று கூறி நடந்த
செயலுக்கு வருத்தம்
தெரிவித்தார் ; “

“ அதே வருடத்தில்
போப் ஜான் பால்-II
(Pope John Paul-II)
அவர்கள்
இயேசு கிறிஸ்துவின்
மீது அளவற்ற
பக்தியும் ;
பைபிளின் மீது
அளவற்ற மரியாதையும் ;
கிறிஸ்தவ மதத்தின்
மேல் அளவற்ற
அன்பையும் ;
வைத்திருந்த
உண்மையான
கிறிஸ்தவர்கள் ;
தங்களுடைய வாழ்க்கையை
சத்தியத்தின் சேவைக்காக
ஈடுபடுத்திக்
கொண்டிருந்த
கிறிஸ்தவர்கள் ;
தங்களுடைய
சத்தியத்தின்
சேவையில் நிகழ்த்திய
வன்முறைகளுக்காக ;
ஒரு பொது
மன்னிப்பு கேட்டார். “

“ கார்டினல்
ஏஞ்ஜலோ சோடானோ
(Cardinal Angelo
Sodano)
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
செயலுக்கு
வருத்தம் தெரிவித்தார் ;
போப் ஜான் பால்-II
(Pope John Paul-II)
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டதற்கு
மன்னிப்பு கேட்டார்; ‘

“ ஆனால் இருவரும்
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட செயல்
தவறான செயல்
என்றும் ,
அவரை கிறிஸ்தவர்கள்
உயிரோடு எரித்துக்
கொன்ற செயல்
தவறான செயல்
என்றும் ,
சொல்லாமல்
வருத்தப்படுகிறோம் ;
மன்னிப்பு கேட்கிறோம் ;
என்று மட்டுமே
சொன்னார்கள் ; “

“ஜியார்டானோ
புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட
செயலுக்கு
போப் மன்னிப்பு
கேட்டார் என்றால்
உலகில் உள்ள
அனைத்து
கிறிஸ்தவர்கள்
சார்பாக மன்னிப்பு
கேட்டார் என்று
அர்த்தம் ;
அதாவது
உலகத்தில் உள்ள
கோடானு கோடி
கிறிஸ்தவர்களும்
ஜியார்டானோ
புருனோ
உயிருடன் எரித்து
கொல்லப்பட்ட
சம்பவத்திற்கு
மன்னிப்பு கேட்டனர் ;
என்று அர்த்தம் ; “

“ ஜியார்டானோ
புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டு 400
ஆண்டுகள் கழித்து
போப் மன்னிப்பு
கேட்டார் என்றால்,
மக்கள் மத்தியில்
நினைத்து கூட
பார்க்க முடியாத
அளவிற்கு
ஜியார்டானோ புருனோ
எவ்வளவு செல்வாக்கு
பெற்ற ஒரு மனிதராக
இருந்திருக்கிறார்
என்பதை அறிந்து
கொள்ளலாம் “

“மக்கள் செல்வாக்கு
பெற்ற ஒருவரை
அவர் இறந்த
பிறகும்
அவரை ஒன்றும்
செய்ய முடியாது
என்பதற்கு
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தவாறு 2000-ஆம்
ஆண்டிலும் நின்று
கொண்டிருக்கும்
ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ
வெண்கல
சிலையே சாட்சி “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  22-03-2019
/////////////////////////////////////////////////////


March 21, 2019

திருக்குறள்-பதிவு-129


                        திருக்குறள்-பதிவு-129

"பிப்ரவரி 11, 1929
ஆம் ஆண்டு
ரோமானிய வினா
(Roman Question)
என்று அழைக்கப்படும்
லடான்
உடன்படிக்கையில்
(Latern Accords)
பெனிடோ முசோலினி
(Benito Mussolini)
மற்றும்
பியுஸ் XI (Pius XI)
ஆகியோர்
கையெழுத்து இட்டனர்"

" நவீன இத்தாலியின்
தலை நகரமாக
ரோம் அறிவிக்கப்பட்டது"

" வாட்டிகன் நகரத்தின்
புனிதப் பார்வையின்
இறையாண்மையை
ஏற்றுக் கொள்வதாகவும் ;

புனித பார்வைக்கு
ஏற்பட்ட சொத்துக்களின்
இழப்புக்களுக்காகவும் ;

இத்தாலியின்
ஒருங்கிணைப்புக்காக
முந்தைய நூற்றாண்டில்
ஏற்பட்ட மற்றும்
எடுக்கப்பட்ட முயற்சிகளின்
செலவுகளுக்காகவும் ;

ஒரு குறிப்பிட்ட
தொகையை இத்தாலி
கொடுக்க ஒப்புக்
கொண்டது; "

" ஒரு கூடுதல்
முயற்சியாக
முசோலினியிடம்
வாத்திகன் நகரம் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் - ஆக
மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்கள் சார்பாக
முசோலினி அவர்களிடம்
கோரிக்கை வைக்கப்பட்டது '

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது வைக்கப்பட்டு
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவின் சிலை
உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களையும்
இழிவு படுத்தும் விதத்தில்
அமைந்திருக்கின்ற
காரணத்தினாலும் ;
உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களின்
மனத்தை புண்படுத்தும்
விதத்தில்
அமைந்திருக்கின்ற
காரணத்தினாலும் ;
அந்த இடத்தில்
இருக்கின்ற
ஜியார்டானோ புருனோவின்
சிலையை அகற்ற
வேண்டும் என்றும் ;
அந்த இடத்தில்
பரிசுத்த தேவனும் ;
பிதாவின் குமாரனுமாகிய
இயேசு கிறிஸ்துவின் ;
சிலையை அங்கே
அமைக்க வேண்டும்
என்றும்; - முசோலினி
அவர்களிடம்
கோரிக்கை வைத்தனர், "

" உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களின்
சார்பாக கேட்டுக்
கொண்ட கோரிக்கையை
முசோலினி ஏற்றுக்
கொள்ளவில்லை ;"

"ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி
ஃபியோரியில்
(Campo dei Fiori)
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவினுடைய சிலை
மக்களுடைய ஆதரவிலும் ;
மக்களுடைய நேரடியான
பார்வையிலும் ;
அவர்களுடைய
பாதுகாப்பிலும் ;
இருக்கின்ற காரணத்தினால்
அந்த சிலையை
அந்த இடத்தில்
இருந்து எடுத்தால் ;
பல்வேறு விதமான
விரும்பத்தகாத
விளைவுகளை
ஏற்படுத்தி விடக்கூடும் ;
என்ற காரணத்தினால்
சிலையை அகற்ற
முடியாது என்று
முசோலினி மறுத்து
விட்டார் ; "

" உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களின்
மனதை சாந்தப்படுத்தி
திருப்தி படுத்த வேண்டும்
என்ற காரணத்திற்காக ;
முசோலினியால் அந்த
இடத்தில் ஒரு
பழ அங்காடியை மட்டுமே
நிறுவ முடிந்தது ; "

" வாட்டிகன் நகரம் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஆக மொத்தம்
உலகத்திலுள்ள
கிறிஸ்தவர்கள்  அனைவரும்
ஜியார்டானோ புருனோ
சிலையை அகற்றுவதற்காக
1929-ஆம் ஆண்டு எடுத்த
முயற்சி தோல்வியில்
முடிந்தது ;

" ஜியார்டானோ புருனோ
சிலை நிறுவப்பட்டுள்ள
இடத்திலிருந்து
அந்த சிலையை எடுக்க
முடியவில்லை  "

" மக்களுடைய
எழுச்சிக்கு முன்னால்
மதப்பற்று ;
அரசியல் அதிகாரம் ;
பொருளாதார மிரட்டல் ;
ஆகியவை ஒன்றும்
செய்ய முடியாது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
வேண்டும் ; "

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  21-03-2019
/////////////////////////////////////////////////////