April 07, 2021

பதிவு-3 - ஊரார்-பழமொழி

 

பதிவு-3 - ஊரார்

பழமொழி

 

ஊரார் பிள்ளை என்று

சொல்லப்படும்

இந்த உலகத்தில்

வாழ்ந்து

கொண்டிருக்கும்

மனிதர்களில்

யாருக்கு என்ன

உதவி தேவையோ

அந்த உதவியை

அவர்களுக்கு

செய்வதின் மூலம்

கிடைக்கும்

புண்ணியமானது

தன் பிள்ளை என்று

சொல்லப்படக்கூடிய

தன்னைச்

சார்ந்தவர்களான

தந்தை தாய்

சகோதரன் சகோதரி

கணவன் மனைவி

குழந்தை என்று

இவர்களில் யாருக்கு

வேண்டுமானாலும்

அந்த புண்ணியத்தின்

பலன் சென்று சேர்ந்து

அவர்களின் வாழ்வின்

தரத்தை உயர்த்தும்

என்பது தான்

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை தானே

வளரும் என்ற

பழமொழிக்கு அர்த்தம்

 

வெளிநாடு சென்று

வேலை செய்தால்

மட்டுமே தன்னுடைய

குடும்பத்தின் கடனை

அடைக்க முடியும்

தன்னுடைய

குடும்பத்தை

காப்பாற்ற முடியும்

என்ற சூழ்நிலை

வரும் போது

தன்னுடைய

மனைவியையும்

தன்னுடைய

கைக்குழந்தையையும்

தனியே இந்தியாவில்

விட்டு விட்டு

அமெரிக்கா

செல்கிறான் கணவன்

 

அமேரிக்காவில்

வேலை செய்து

கொண்டிருக்கும்

கணவன் ஊரார்

பிள்ளை என்று

சொல்லப்படக்கூடிய

அந்த நாட்டில்

வாழும் மக்களில் உதவி

தேவைப்படுபவர்களுக்கு

உதவிகள்

செய்யும் போது

செய்த உதவியின்

மூலம் கிடைத்த

புண்ணியத்தின்

பலனானது தன்

பிள்ளை என்று

சொல்லப்படக்கூடிய

தன்னுடைய

மனைவிக்கும்

குழந்தைக்கும்

வாழும் வாழ்க்கைக்கு

பாதுகாப்பாக

இருப்பதோடு

வாழ்வின் தரத்தை

உயர்த்துவதற்கு

ஒரு வழியாகவும்

இருக்கும்

 

என்பது தான்

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை

தானே வளரும்

என்பதற்கான

அர்த்தம்

 

இந்த உண்மைக்

கதையையும்

கேளுங்கள்

 

எனக்கு உடல்நிலை

சரியில்லாத நிலை 

ஒரு நாள்

ஏற்பட்ட போது

கண்டிப்பாக

ஒருவரை பார்த்தே

ஆக வேண்டும்

என்பதை தவிர்க்க

முடியாத நான்

எனக்கு என்றும்

துணையாக இருக்கும்

என்னுடைய நண்பனை

அழைத்துக் கொண்டு

பேருந்தில் பயணம்

செய்ய முடிவு

எடுத்தேன்

 

நீண்ட தூரம் பயணம்

செய்ய வேண்டி

இருந்ததால்

பேருந்தில் ஏறி

இருவருக்கும்

இருக்கை இருக்கிறதா

என்று பார்த்தபோது

ஒரு இருக்கை

மட்டுமே காலியாக

இருந்தது - அந்த

இருக்கையை பார்த்ததும்

என்னுடைய நண்பன்

என்னை அந்த

இருக்கையில்

அமரவைத்து விட்டு

அவன் நின்று

கொண்டான்

நான் ஜன்னல்

அருகில்

அமர்ந்திருந்தவரின்

அருகில் அமர்ந்து

கொண்டேன்

 

உடல் வலி

கால்வலி

ஆகியவற்றால்

அவதிப்பட்டு

நோயின் தாக்குதலால்

தாக்கப்பட்ட நான்

வேதனையுடன்

அமர்ந்து

கொண்டிருந்தேன்

அந்த நேரம் பார்த்து

ஒரு அம்மா

அந்த பேருந்தில்

அமர்ந்து

இருந்தவர்களிடம்

அவர் உட்காருவதற்காக

அந்த பேருந்தில்

இருந்த பலரிடம்

இடம் கேட்டுக்

கொண்டிருந்தார்

யாரும் அந்த

அம்மாவிற்கு

உட்காருவதற்கு இடம் 

கொடுக்கவில்லை.

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment