April 07, 2021

பதிவு-4 - ஊரார்-பழமொழி

 

பதிவு-4 - ஊரார்

பழமொழி

 

என்னிடம் வந்த

அந்த அம்மா தம்பி

எனக்கு உடம்பு

சரியில்லை

மயக்கமாக

இருக்கிறது

உட்காருவதற்கு

நீயாவது இடம்

கொடுப்பாயா

என்று கேட்டார்..

நான் எழுந்து

உட்கார்த்து

கொள்ளுங்கள்

என்று என்னுடைய

இருக்கையை

அவரிடம் கொடுத்தேன்

அவரும் நான்

கொடுத்த என்னுடைய

இருக்கையில்

அமர்ந்து கொண்டார்

 

இக்காட்சியைக்

கண்ட என்னுடைய

நண்பன் கோபத்தில்

இருந்தான் - அவன்

கோபத்தில் இருந்தது

அவனுடைய முகத்தைப்

பார்த்த போதே

தெரிந்தது

 

நான் நீண்ட நேரம்

நின்று கொண்டு

வந்தேன்.

எனக்கு உடல்நிலை

சரியில்லாத

காரணத்தினால்

என்னால் நிற்க

முடியவில்லை

இருந்தாலும் நான்

சமாளித்து நின்று

கொண்டு வந்தேன்

 

பேருந்தை விட்டு

இறங்கும் இடம்

வந்ததும் நானும்

என்னுடைய நண்பனும்

இறங்கினோம்

என்னுடைய நண்பன்

என்னிடம் கோபம்

கொண்டு உனக்கு தான்

உடம்பு சரியில்லை

அல்லவா

ஏன் உன்னுடைய

இருக்கையை கொடுத்து

எழுந்து நின்றாய்

என்று கேட்டான்

 

நண்பா நான்

சென்னையில்

இருக்கிறேன்

என்னுடைய அம்மா

தென்காசியில்

தனியாக இருக்கிறார்

அப்பா இறந்ததிலிருந்து

அம்மா தென்காசியில்

தனியாகத் தான்

இருக்கிறார்,

 

என்னுடைய அம்மா

தென்காசியில்

முக்கிய விஷயமாக

பேருந்தில்

செல்லும் போது

நிற்க முடியாமல்

உட்காருவதற்கு

யாரிடமாவது

இருக்கை கேட்கக்

கூடிய நிலை

வந்தால்

நான் செய்த

புண்ணியத்தின்

பலனானது

அதாவது என்னிடம்

உட்காருவதற்கு

இடம் கேட்ட

அந்த அம்மாவிற்கு

நான் என்னுடைய

இருக்கையைக்

கொடுத்து

உதவி செய்ததின்

மூலம் உண்டான

புண்ணியத்தின்

பலனானது

என்னுடைய

அம்மாவை

காப்பாற்றும்

 

அதாவது

யாராவது என்னுடைய

அம்மாவிற்கு

உட்காருவதற்கு

இடம் கொடுத்து

உதவுவார்கள் என்ற

காரணத்தினால் தான்

நான் அந்த

அம்மாவிற்கு

உட்காருவதற்கு 

என்னுடைய

இருக்கையைக்

கொடுத்தேன்

என்றேன்

 

இது தான் ஊரார்

பிள்ளையை ஊட்டி

வளர்த்தால் தன்

பிள்ளை தானே

வளரும் என்பதற்கான

அர்த்தம்

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment