June 17, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-25


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-25

இராமர் அனுமாரை நோக்கி
நாங்கள் சுக்ரீவனைத்
தேடிக் கொண்டு வருகின்றோம்
அவனைக் காட்டு நாங்கள்
பார்க்க வேண்டும் என்கிறார்

நீங்கள் சுக்ரீவனைத் தேடிக்
கொண்டு வருவீர்களானால்
அவர் வாழ்வு உய்யும்
வாய்க்கால் மகாநதியை
நோக்கிச் செல்ல வேண்டும்
மகாநதி வாய்க்காலை
நோக்கிச் செல்லக்கூடாது
நீங்கள் மகாநதி
சுக்ரீவன் வாய்க்கால்
நீங்கள் இங்கேயே
இருங்கள்
நான் என் தலைவனாகிய
சுக்ரீவனை அழைத்துக்
கொண்டு வருகிறேன்
என்றார் அனுமார்.

நம் முன் நிற்பவர்கள்
யார் என்று தெரியாமல்
அவர்களைப் பற்றித்
தெரிந்து கொள்ளாமல்
தகுதி நிறைந்தவர்கள்
யார் என்று தெரியாமல்
தகுதி நிறைந்த
பெரியோர்களை நீங்கள்
யார் என்று கேட்பது
நியாயமாகாது

அதனால் அனுமார்
இராம இலட்சுமணரைப் பார்த்து
நீங்கள் யார் என்று
நேரடியாகக் கேட்காமல்

“””””யார் அழைப்பதாக
என் தலைவனான 
சுக்ரீவனிடம் நான்
கூற வேண்டும்
தங்களை யாரென்று
அவரிடத்தில் தெரிவிக்க
வேண்டும்””””””””

என்று
இராம இலட்சுமணரிடம்
அனுமார் கேட்டார்.

தங்களை யார் என்று
அறிந்து கொள்ளும்
பொருட்டு
சாதுர்யமான
வார்த்தையின் மூலம்
அனுமார் பேசிய
வார்த்தைகளைக் கண்டு
இராமர் மகிழ்ந்தார்.

இவன் கல்லாத கலைகளே
இல்லை என்பது
இவன் கூறிய
சொல்லாலேயே இவன்
யாரென்று விளங்குகின்றது
இவன்
“”””””சொல்லின் செல்வனாக””””””
இருக்கின்றான்

இவன் நம்மை யார் என்று
நேரடியாக கேட்காமல்
என் தலைவனுக்கு
உங்களை யாரென்று
சொல்லுவேன் என்று
கேட்கின்ற சொல்திறம்
மிகவும் பாராட்டுக்குரிது.
என்று இராமர்
இலட்சுமணரைப்
பார்த்து கூறினார்.

சிறிய தாயாரின்
சொல் கேட்டு தன்
அரசச் செல்வத்தைத்
தன் தம்பியாகிய
பரதனுக்கு வழங்கி விட்டு
வந்திருக்கின்றார்
நான் இவருடைய பணியாளர்
என்கிறார் இலட்சுமணர்.

இலட்சுமணரின் சொல் கேட்டு
வந்திருப்பவர்கள்
இராம, இலட்சுமணர்கள்
என்று அனுமார்
தெரிந்து கொண்டார்.

அனுமார் தன் தலைவனான
சுக்ரீவனை அழைத்து வருவதாகக்
கூறிவிட்டு சுக்ரீவனிடம் போய்
இராம இலட்சுமணர்கள்
வந்திருக்கிறார்கள்
என்று கூறாமல்
“”””””வாலிக்குக்
   காலன் வந்திருக்கின்றார்””””””
என்றார் அனுமார்.

சுக்ரீவன் வாலிக்கு
பயந்து மறைந்து வாழ்கின்றார்
அவனுக்கு இராமர்
வந்திருக்கின்றார் என்றால்
அவனுடைய அச்சம் அகலாது

சுக்ரீவனுக்கு யாரிடம்
அச்சம் அகலாமல்
இருக்கின்றதோ
அவனுக்கு எமன்
வந்திருக்கின்றான்
அதாவது வாலியைக்
கொல்ல எமன் வந்திருக்கின்றான்
என்ற பொருளில்
வாலிக்குக் காலன்
வந்திருக்கின்றான்
என்று சொன்ன
அனுமாரின் சொல்லின்
திறன் பாராட்டுக்குரியது

இத்தகைய
காரணங்களினால் தான்
நாம் அனுமாரை
சொல்லின் செல்வன் என்கிறோம்
கம்பரை கவிச்
சக்கரவர்த்தி என்கிறோம்

இராமாயணத்தின் மூலம்
தமிழை வளர்த்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////

June 15, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-24



                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-24

வீபிஷ்ணன்
தன் அண்ணன்
இராவணனிடம்
சீதையைக்
கவர்ந்து வந்து
சிறை வைத்தது
தவறு என்று
எவ்வளவோ
எடுத்துச் சொல்லியும்
இராவணன் கேட்காததால்
வீபிஷ்ணன்
இராவணனை விட்டுப்பிரிந்து
வெளியே வந்தான்

வீபிஷ்ணன்
இராமரிடம் சேருவதற்காக
அவரிடம் வந்தார்
இராமர் வீபிஷ்ணனை
தன்னுடன் சேர்த்துக்
கொள்வதற்கு முன்
தன்னுடன் இருப்பவர்களின்
கருத்தைக் கேட்டார்

அதில் அனைவரும்
அண்ணன் என்பவன்
தெய்வத்திற்கு சமம்
அவனை காட்டிக்
கொடுக்க வந்த
வீபிஷ்ணன் கெட்டவன்
சகோதரத் துரோகி
சீதையைக்
கவர்ந்து சென்ற
இராவணின் தம்பி
அவனைச் சேர்க்கக்
கூடாது என்று
சுக்ரீவன், ஜாம்பவான்,
நீலன், அங்கதன்
போன்றோர்
ஒரே மாதிரியாகத்
தெரிவித்தனர்

இராமர் அனுமாரிடம்
கேட்டார்
அதற்கு அனுமார்

“””””கண்டவர்கள் பேச்சைக்
   கேட்காதீர்கள்”””””

“””””கண்டவன் பேச்சைக்
   கேளுங்கள்”””””

என்றார்

கண்டவர்கள் பேச்சைக்
கேட்காதீர்கள் என்றால்
வீபிஷ்ணன்
எத்தகைய குணங்களை
உடையவன்
எத்தகைய தன்மைகளை
உடையவன்
என்பதை அறியாதவர்கள்
பேசும் பேச்சு
அதைக் கேட்காதீர்கள்
என்று பொருள்

கண்டவன் பேச்சைக்
கேளுங்கள் என்றால்
வீபிஷ்ணன்
என்பவர் யார்
அவர் எப்படிப் பட்டவர்
எத்தகைய
தன்மைகளை உடையவர்
எத்தகைய
குணங்களை உடையவர்
என்பதை நேரில்
கண்டவன் நான்
என்னுடைய பேச்சைக்
கேளுங்கள்
என்று பொருள்

நான்
இலங்கை சென்று
சீதா தேவியைத்
தேடியபோது
வீபிஷ்ணன்
அரண்மனையைப் பார்த்தேன்
அங்கே சிவலிங்கம்
இருந்தது
சிவ பூஜைக்குரிய
பொருள்கள் இருந்தது.
வீபிஷ்ணர் சிவபூஜை
பண்ணுகின்றவர்
அரக்கர் குலத்தில்
பிறந்த நல்லவன்
அரக்கர்கள் வீட்டில்
ஏராளமான மதுப்பாட்டில்கள்
இருந்தபோது
வீபிஷ்ணன் வீட்டில்
பூஜைக்குரிய பன்னீர்
பாட்டில்களே நிரம்ப
இருந்தன
இராவணன் என்னைக்
கொல்ல வேண்டும்
என்று சொன்னபோது
வீபிஷ்ணன்
மாதரையும், தூதரையும்
கொல்லக்கூடாது என்று
இராவணனைத் தடுத்தார்
வீபிஷ்ணன் பரம சாது
வீபிஷ்ணன் தீயவன்
அல்லன்
நல்லவன்
எனவே அடைக்கலமாய்
வந்த வீபிஷ்ணனை
நாம் சேர்த்துக் கொள்ளலாம்
என்கிறார் அனுமார்.

கண்டவர்கள் பேச்சைக்
கேட்காதீர்கள்
கண்டவன் பேச்சைக்
கேளுங்கள்
என்று சொன்ன
அனுமாரின்
சொல்லின் மூலம்
கவிச் சக்கரவர்த்தி
கம்பரின் கவித்திறத்தை
நாம் தெரிந்து
கொள்ளலாம்

இதிகாசத்திலும்
தமிழ் வளர்த்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள் என்பதை
நாம் நினைவில்
கொள்வோம்

--------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////

June 12, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-23


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-23

சொல்லின் செல்வர்
என்றால்
இடம், காலம்,
சூழ்நிலை அறிந்து பேசுபவர்
சொல்லின் செல்வர்
என அழைக்கப்படுவார்

இராமாயணத்தில்
அனுமார்
சொல்லின் செல்வர்
என அழைக்கப்படுகிறார்
இராமாயணத்தில்
அனுமார் பல இடங்களில்
பேசும் பேச்சை வைத்து
அவரை நாம் ஏன்
சொல்லின் செல்வர்
என்று அழைக்கிறோம்
என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்

சீதை எங்கிருக்கிறார்
என்பதை கண்டறியச்
சென்ற அனுமார்
சீதை இருக்கும்
இடம் அறிந்து
அவரைக் கண்டு
அவரிடம் பேசி விட்டு
அந்த செய்தியை
இராமரிடம் தெரிவிக்க
வருகிறார்

இராமரும்
சீதையைக் கண்டறியச்
சென்ற அனுமார்
சீதையைக் கண்டாரா
பேசினாரா
சீதை எந்த நிலையில்
இருக்கிறார் என்பதைத்
தெரிந்து கொள்ள
ஆவலாய் காத்துக்
கொண்டு இருக்கிறார்

அனுமார் இராமரிடம்
சீதையைப் பார்த்த
செய்தியைச் சொல்ல
அவர் முன் நிற்கிறார்
இராமர் அனுமார்
சீதையைப் பார்த்தாரா
பார்க்கவில்லையா என
தவிப்புடன் இருக்கிறார்
இருவரும் நேருக்கு
நேராக சந்தித்துக்
கொள்கின்றனர்

அப்பொழுது அனுமார்
சொல்கிறார்
“””””கண்டனென்”””””
என்று அனுமார்
ஒரே ஒரு வார்த்தை தான்
சொன்னார்
சீதையைக் கண்டனென்
என்று கூட சொல்லவில்லை
கண்டனென் என்று
மட்டுமே சொல்லி
சற்று நிறுத்தினார்
அதில் அனைத்தும்
அடங்கி இருக்கிறது

அனுமார் எதற்காக
சென்றார்
சீதையைக் கண்டறிவதற்கு
கண்டனென் என்ற ஒரு
வார்த்தையில்
சீதையைப் பார்த்தேன் என்று
சொல்லி விட்டார்

இராமருக்கு திருப்தி
அதன் பிறகு தான்
சீதை எப்படி
இருக்கிறார் என்பதை
அனுமார் கீழ்க்கண்ட
வாக்கியத்தின் மூலம்
சொல்கிறார்

“””””கண்டனென் கற்பினுக்கு
அணியைக் கண்களால்”””””””
என்கிறார்
இந்த வார்த்தையில்
மூன்று விதமான
அர்த்தங்கள் உள்ளது

“””கண்டனென்”””
என்றால்
நான் சீதையைப்
பார்த்தேன்
என்று பொருள்

“”””கண்டனென் கற்பினுக்கு
அணியை””””
என்றால்
கற்புக்கு இலக்கணமாக
இருக்கும்
சீதையைக் கண்டேன்
என்று பொருள்
அதாவது சீதை
கற்பு நெறியுடன் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்
என்பதை சொல்கிறார்


“””””கண்டனென் கற்பினுக்கு
அணியைக் கண்களால்”””””
என்றால்
கற்புக்கு இலக்கணமாக
இருக்கும் சீதையை
என்னுடைய கண்களால்
கண்டேன் என்று
அனுமார் சொல்ல
வரவில்லை

கண்களை வைத்து
ஒருவர் உண்மை
பேசுகிறாரா அல்லது
பொய் பேசுகிறாரா
என்பதைக் கண்டு
பிடித்து விடலாம்
கண்கள் தான்
ஒருவருடைய குணநலன்களைக்
காட்டும் கண்ணாடி

சீதை கற்புடன் இருக்கிறார்
என்பதை சீதையின்
கண்களில் இருந்து
தெரிந்து கொண்டேன்
என்கிறார் அனுமார்

இராமரின் மனம் அறிந்து
சீதையைக் கண்டேன்
என்பதையும்
சீதை கற்புடன்
இருக்கிறார் என்பதையும்
வார்த்தைகள் மூலம்
இடம், காலம், சூழ்நிலை
அறிந்து பேசியதால்
அனுமாரை நாம்
சொல்லின் செல்வர்
என்கிறோம்

ஒரு வாக்கியத்தில்
மூன்று வெவ்வேறு
விதமான அர்த்தங்களை
புரிந்து கொள்ளும்
வகையில் எழுதிய
கவிச்சக்கரவர்த்தி கம்பர்
பாராட்டப் பட
வேண்டியவர்

இதிகாசத்திலும்
தமிழை வளர்த்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////

June 10, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 22


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 22

உலகத்தால் மறக்கப்பட்ட
பத்தினிகள் பலபேர்களுடைய
வாழ்க்கை வரலாற்றைப்
பார்த்தோம்
அவர்களில் வித்தியாசமானவர்
கண்ணகி


கோவலன் கண்ணகியை
விட்டு பிரிந்து
மாதவியை நாடிச் சென்றான்
பிறகு கோவலன்
தான் செய்தது
தவறு என்பதை
உணர்ந்து
கண்ணகியிடம் சென்று
மன்னிப்பு கேட்டதால்
கண்ணகி கோவலனை
தன் கணவனாக
ஏற்றுக் கொண்டாள்

தவறுக்கும் தப்புக்கும்
வித்தியாசம் இருக்கிறது
தவறு என்பது
தெரியாமல் செய்வது
தப்பு என்பது
தெரிந்து செய்வது


தண்ணீர் உள்ள பானை
நம்மை அறியாமல்
கை தவறி கீழே
விழுந்தால்
அதற்குப் பெயர் தவறு
தண்ணீர் உள்ள பானையை
நாம் கோபத்தில்
கீழே போட்டு உடைத்தால்
அதற்கு பெயர் தப்பு

தவறு என்பது
தெரியாமல் செய்வது
தப்பு என்பது
தெரிந்து செய்வது

கோவலன் தெரியாமல்
செய்த தவறை மன்னித்து
கோவலனை
கணவாக
ஏற்றுக் கொண்டாள் கண்ணகி

அதன் பிறகு
கோவலன்
செய்யாத குற்றத்திற்காக
கொலை செய்யப்பட்டான்

கோவலன்
மாதவியுடன் இருக்கும் போது
கொலை செய்யப்பட்டிருந்தால்
கணவனுக்காக நீதி கேட்டு
கண்ணகி சென்று
இருக்க மாட்டாள்
ஆனால் கோவலன்
மாதவியிடம் சென்றது
தவறான செயல்
என்பதை உணர்ந்து
கண்ணகியிடம்
மன்னிப்பு கேட்டு
கண்ணகியிடம் சேர்ந்த பிறகு
கோவலன் கொல்லப்பட்டதால்
கண்ணகி நீதி கேட்டு
பாண்டியன் நெடுஞ்செழியனிடம்
சென்றாள்

தன் கணவன்
நல்லவனாக இல்லை
என்றாலும்
குடித்து விட்டு
வீட்டை பார்க்காதவனாக
இருந்தாலும்
சம்பாதிக்காமல் குடும்பத்தை
காப்பாற்றாதவனாக
இருந்தாலும
ஊர் சுற்றுபவனாக
இருந்தாலும்
மனைவி கணவனுக்கு
துன்பம் என்றால்
ஓடி வந்து
சேவை செய்வாள்
அது தான்
மனைவியின் இயல்பு

அதைத் தான்
கண்ணகியும் செய்தாள்
ஆராயாமல் தீர்ப்பு
சொல்லப்பட்டு
கொல்லப்பட்ட தன்
கணவன் கோவலனுக்காக
நீதி கேட்டு சென்றாள்

கோவலன் குற்றமற்றவன்
என்பதை அறிந்தவுடன்
சிம்மாசனத்தில் இருந்து
வீழ்ந்து உயிர் விட்டான்
பாண்டியன் நெடுஞ்செழியன்

மன்னன் தவறு
செய்தான் என்றால்
தவறு செய்யும் ஒருவரை
மக்கள் மன்னராக
வைத்திருந்தார்கள்
என்று அர்த்தம்

தவறான ஒருவர்
மன்னராக இருந்தால்
மக்கள் தொடர்ந்து
அவதிப்பட நேரும்

மக்கள் மன்னன் செய்த
தவறை சுட்டிக்
காட்டாமல் இருந்தால்
மன்னன் மக்களைப்
பற்றி கவலைப்படாமல்
மக்களுக்கு எதிராக
எப்போதும் தவறு
செய்து கொண்டிருப்பான்

தவறு செய்த
மன்னனை மக்கள்
தட்டிக் கேட்கவில்லை
என்ற காரணத்திற்காகவும்
தன் கணவன்
தவறு செய்து விட்டு
திருந்தி வந்து
செய்யாத குற்றத்திற்காக
கொலை செய்யப்பட்டான்
என்ற காரணத்திற்காகவும்
தன் கணவனுக்காக
மதுரை மக்களை
கொன்றாள் கண்ணகி

இது தான் கொலையும்
செய்வாள் பத்தினி
என்பதற்கு அர்த்தம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////