February 10, 2019

திருக்குறள்-பதிவு-103


                     திருக்குறள்-பதிவு-103

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவை
உயிருடன் எரித்துக்
கொல்வதற்கு தேவையான
அனைத்து ஆதாரங்களும்
தயார் செய்யப்பட்டு
இருக்கிறது. “

“ இந்த ஆதாரங்களே
போதுமானவை
ஜியார்டானோ
புருனோவை
உயிருடன் எரித்து
கொல்வதற்கு…………………………………!

போப் கிளமெண்ட்-VIII :
“அந்த மூன்று
நபர்களை பற்றிச்
சொல்கிறீர்களா………………? “

“அவர்களை நம்புவது
என்பது ஆபத்தானது?”

“அவர்கள் எந்த
நேரத்திலும்
தங்களுடைய மனதை
மாற்றிக் கொள்ளலாம்”

“பிறழ் சாட்சியாக
மாறுவதற்கு கூட
வாய்ப்பிருக்கிறது”

“தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கு
உண்மையை
சொல்லாமல்
பொய் சொல்லி
விட்டால் என்ன
செய்வது………………………………..? ”

கார்டினல் சார்டோரி :
‘ புனித தந்தையே !
நன்றாக யோசியுங்கள்
தற்போது நடந்து
கொண்டிருக்கும்
சூழ்நிலைகளை நன்றாக
உற்று பாருங்கள். “

“ ஜியார்டானோ
புருனோவை
கொல்வதற்கு இது தான்
சரியான தருணம்
இதனை நாம் தவற
விட்டு விடக்கூடாது; “

“ புனித ஆண்டு
துவங்க இருக்கிறது
ரோம் நகரை தரிசனம்
செய்வதற்கு
உலகின் பல்வேறு
நாடுகளிலிருந்தும்
யாத்ரீகர்கள் வரத்
தொடங்குவர் “

“ அவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு
நாம் என்ன பதில்
சொல்வது……………………….? “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை
எதிர்த்த ஒருவரை
இன்னும்
உயிரோடு விட்டு
வைத்திருக்கிறீர்களா
என்று அவர்கள் கேள்வி
கேட்டால் நாம் என்ன
பதில் சொல்வது “

“ கிறிஸ்தவ மத
நம்பிக்கைகளையும்
பைபிளில் உள்ள
கருத்துக்களையும்
எதிர்த்த ஒருவரை
இன்னும் விட்டு
வைத்திருக்கிறீர்களா
என்று அவர்கள்
கேட்டால்
நாம் என்ன பதில்
சொல்வது “

“ ஜியார்டானோ
புருனோவின்
கருத்துக்கள் அனைத்து
இடங்களிலும்
பரவத் தொடங்கி
இருக்கிறது “

“ அரசாங்கத்தின்
அனைத்து துறைகளிலும்
நுழைய ஆரம்பித்து
இருக்கிறது “

“ மக்கள் அனைவரும்
ஜியார்டானோ
புருனோவின்
கருத்துக்களை சிந்திக்கத்
தொடங்கி விட்டனர் “

“ ஜியார்டனோ
புருனோவை
நாம் உயிருடன்
விட்டு வைத்தால்
ஜியார்டானோ புருனோ
மக்கள் அனைவரையும்
நஞ்சாக்கி விடுவார் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
கிறிஸ்தவ மக்களையும்
எதிர்க்கும் நிலைக்கு
மக்களை உருவாக்கி
விடுவார் ; “

போப் கிளமெண்ட்-VIII :
“ ஜியார்டானோ
புருனோ உயிருடன்
எரித்துக்
கொல்லப்படுவதை
நான் விரும்பவில்லை ;
அவர் உயிருடன்
இந்த உலகத்தில் வாழ
வேண்டும் ; “

“ அவரை நாம்
கொல்வதால் அவர்
செய்தது அனைத்தும்
சரி என்று ஆகிவிடும் “

“ அவர் தான் செய்த
தவறுகளை
உணர வேண்டும் ;
மக்கள் மத்தியில் தான்
செய்தது தவறு
சொல்லி ஒத்துக்
கொண்டு மன்னிப்பு
கேட்டு மனம்
வருந்த வேண்டும் ;”

பெல்லரமினோ :
“ அவரை உயிரோடு
விட்டு வைத்தால்
மக்கள் அனைவரையும்
நமக்கு எதிராக
திருப்பி விடுவார் ;
அவரை உயிரோடு
எரித்து கொல்வது
என்பது தவிர்க்க
முடியாத ஒன்று;
அவரை கொன்றே
ஆக வேண்டும்;”

போப் கிளமெண்ட்-VIII :
“ அதை உங்களால்
நிறைவேற்ற முடியாது “

“ அது நடப்பதற்கு
வாய்ப்பே இல்லை “

(என்று பேசிவிட்டு
போப் கிளமெண்ட்-VIII
அவர்கள் தன்னுடைய
தனிமையான அறைக்குள்
சென்று விட்டார்
கார்டினல் சார்டோரி
பெல்லரமினோ
பாதர் டிராகாக்லியோலோ
போப் நடந்து
செல்வதையே நின்று
பார்த்துக் கொண்டு
இருந்தனர்)

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  10-02-2019
/////////////////////////////////////////////////////////////

திருக்குறள்-பதிவு-102


                      திருக்குறள்-பதிவு-102


(போப் அறையில்
பாதர் டிராகாக்லியோலோ
அமைதியாக நின்று
கொண்டிருக்க ;
போப் கிளமெண்ட்-VIII ;
கார்டினல் சார்டோரி  ;
பெல்லரமினோ  ;
ஆகியோரிடையே
சூடான வாக்கு வாதம்
நடைபெற்றுக்
கொண்டிருந்தது)


போப் கிளமெண்ட்-VIII :
“ கார்டினல் சார்டோரி
உங்களைக் கண்டு
நாங்கள் பலமுறை
பொறாமைப்பட்டிருக்கிறோம் ;
உங்களுடைய அறிவுத்
திறமையைக் கண்டு
நாங்கள் வியந்திருக்கிறோம் ;
சந்தேகம் என்ற
ஒன்றே ஏற்படாதவர் ;
என்று பெருமைப்
பட்டிருக்கிறோம் ; “

“ உங்களுக்கு ஏதேனும்
சந்தேகம் ஏற்பட்டு
இருக்கிறதா…….? “

கார்டினல் சார்டோரி :
“ புனித தந்தையே !
எனக்கு எந்த சந்தேகமும்
ஏற்படவில்லை “

“ ஆனால் தாங்கள்
என்ன நினைக்கிறீர்கள் ?
என்பதையும் ;
தாங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள் ?
என்பதையும் ;
என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை ; “

பெல்லரமினோ :
ஞகத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிராக செயல்பட்டவர்களை
தூக்கில் போடுவது ;
உயிரோடு எரிப்பது ;
என்று அளிக்கப்பட்ட பல
தண்டனைகளை மக்கள்
பார்த்து விட்டார்கள் “

“ இனிமேலும்
இதைப்போல் தண்டனைகள்
வழங்கப்பட்டால் - மக்கள்
இதைப் பார்த்துக் கொண்டு
சும்மா இருப்பார்களா
என்று தெரியவில்லை; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பதன் மூலம்
மக்களுக்கு ஒன்றை
புரிய வைக்கலாம் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கு
இத்தகைய நிலை தான்
ஏற்படும் என்பதை
புரிய வைக்கலாம் ; “

“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்காவிட்டால் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கும் ;
கிறிஸ்தவ
மதத்தை எதிர்க்க
நினைப்பவர்களுக்கும்
மனதில் தைரியம்
வந்து விடும் “

“ யார் வேண்டுமானாலும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளை
எதிர்க்கலாம் ;
கிறிஸ்தவர்கள் பின்பற்றும்
மத நம்பிக்கைகளை
இழிவு செய்யலாம் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லலாம் ;
என்ற நிலை
உருவாகி விடும் “

 “ ஜியார்டானோ
புருனோவை உயிரிரோடு
எரிப்பதன் மூலம்
கிறிஸ்தவ மதத்தை யாரும்
எதிர்க்கவும் மாட்டார்கள் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்க வேண்டும்
என்ற தைரியமும்
யாருக்கும் வராது ;

போப் கிளமெண்ட்-VIII :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்கும் செயலைச்
செய்தால் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் ஆட்சி
கடவுளின் ஆட்சியாக இராது ;
பயங்கரவாதிகளின்
ஆட்சியாகத் தான் இருக்கும் ; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மாளிகை
வரை வந்து விட்டது
என்று சொல்கிறார்கள் “


போப் கிளமெண்ட்-VIII :
“ போப்பை நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்கிறீர்களா….? “

“போப்பையே நீங்கள்
சந்தேகப் படுகிறீர்களா……..? “


கார்டினல் சார்டோரி :
“அதை நான்
சொல்லவில்லை “

“அதை நான்
சொல்லவில்லை “

ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
புனித போப்பின்
ஆத்மாவிற்குள் புகுந்து
பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்றால் - இனிமேலும்
இத்தகைய ஒரு பிரச்சினை
ஏற்படக்கூடாது என்றால்
அதற்கு ஒரே வழி
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பது மட்டும் தான். “


பெல்லரமினோ :
ஜியார்டோனோ
புருனோவை உயிரோடு
எரித்தால் - அவரை
உயிரோடு எரிப்பதற்காக
வைக்கப்பட்ட நெருப்பு
உயிரோடு எரித்ததோடு
மட்டுமில்லாமல்
எரித்த அந்த நெருப்பு
அணையாமல் தொடர்ந்து
பல நூற்றாண்டுகள்
எரிந்து மிகப்பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்திக்
கொண்டே இருக்கும் “

கார்டினல் சார்டோரி :
“நாம் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஜியார்டானோ
புருனோவிற்கு என்ன
தண்டனை வழங்க
வேண்டும் என்பதைப்
பற்றி பேசிக்
கொண்டிருக்கிறோமோ ?
( அல்லது )
அவருடைய பாவங்களை
எப்படி மன்னிப்பது ;
எப்படி அவருக்கு கடவுள்
அருள் கிடைக்கச் செய்வது ;
என்பதைப் பற்றி - நாம்
பேசிக் கொண்டிருக்கிறோமோ?
என்பது எனக்கு தெரியவில்லை.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  09-02-2019
/////////////////////////////////////////////////////////////

February 08, 2019

திருக்குறள்-பதிவு-101


                      திருக்குறள்-பதிவு-101

பெல்லரமினோ :
“ ஜெர்மனி, இங்கிலாந்து,
ஸ்கேண்டினேவியா
(Scandinavia),
ஸ்விட்சர்லாந்து
(Switzerland)
மற்றும் ஃப்ளாண்டர்ஸ்
(Flanders)
பேரரசர்கள்
எங்களுக்கு சவாலாக
இருக்கிறார்கள் “

ஜியார்டானோ புருனோ:
“உங்களைப் பார்த்து
கற்றுக் கொண்டார்கள் “

“அதை பயன் படுத்தும்
போது உங்களுக்கு
எதிராக இருக்கிறது
அவ்வளவு தான் “

பெல்லரமினோ :
“ எதை
சொல்கிறீர்கள்…………..? “

ஜியார்டானோ புருனோ:
“ ஒவ்வொரு நாடும்
தங்கள் நாட்டிற்கென்று
ஒரு மதத்தை தனியாக
நிறுவுவதன் மூலம்
மதத்தின் பெயரால்
மக்களுடைய நம்பிக்கையை
அடித்தளமாக்கி அதன்
மூலம் அதிகாரத்தை
கைப்பற்றி - மக்களை
அடிமையாக வைத்து
அரசாட்சி செய்வது எப்படி
என்று உங்களிடம்
இருந்து கற்றுக்
கொண்டதை செயல்படுத்த
நினைக்கிறார்கள் – அது
உங்களுக்கு எதிராக
இருக்கிறது. “

பெல்லரமினோ :
இத்தகைய தவறான
ஒரு நிலை ஏற்பட்டு
விடக்கூடாது
என்பதற்காக தான்
நாங்கள் பாடு பட்டுக்
கொண்டு இருக்கிறோம் “

ஜியார்டானோ புருனோ:
“ நம்பிக்கையின் பெயரால்
மக்களை அடிமைகளாக
வைத்து நீங்கள் ஆள
நினைப்பது தவறில்லை ;
அதை வேறு நாடுகள்
செய்ய முற்படும்போது
நீங்கள் ஏன் அதை
எதிர்க்கிறீர்கள் ;
உங்களுக்கு எதிராக
அவர்கள்
இருக்கிறார்கள் என்ற
காரணத்திற்காகவா……….? “

பெல்லரமினோ :
“ எது உண்மையான
நம்பிக்கை என்பதைப்
பொறுத்துத் தான்
அனைத்தும் இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ:
“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான
ஆயிரக்கணக்கான
இஸ்லாமியர்களையும்
யூதர்களையும் உயிரோடு
எரித்து கொல்கிறீர்களா “

“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான்
நீங்கள் ஸ்பெயினை
பயன் படுத்துகிறீர்களா………….? “

பெல்லரமினோ :
“ ஸ்பெயின் நாடு
கிறிஸ்தவ மதத்தின் மீது
நம்பிக்கை கொண்ட நாடு
அனைத்து விதமான
மத விரோத போக்கிற்கும்
ஸ்பெயின் உற்ற
துணையாக இருக்கிறது, “

ஜியார்டானோ புருனோ:
“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை வலிமையாக
இருக்கும் ஐரோப்பாவை
சிறு சிறு துண்டுகளாக
உடைத்து அதன்
வலிமையை சிதைப்பதற்குத்
தேவையான அனைத்து
விதமான செயல்களையும்
செய்து வைத்திருக்கிறது “

“ அழிவிற்கான விதையை
விதைத்து விட்டு
அழிவு எப்போது
ஏற்படும் என்பதை
கவனித்துக் கொண்டு
இருக்கிறது “

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்பட்டு
மக்களால்
பின்பற்றப்பட்டு வரும்
சட்டதிட்டங்களையும் ;
மத நம்பிக்கைகளையும் ;
ஒற்றுமையையும் ;
எவர் ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;
அவருடைய
செயலை தடுத்து ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை பாதுகாக்க
வேண்டிய மிகப்பெரிய
பொறுப்பு எங்களுக்கு
இருக்கிறது.”

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை எவர்
ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;

“ ஆண்டாண்டு காலமாக
கிறிஸ்தவர்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளை
எவர் ஒருவர்
இழிவு செய்தாலும் ;

பைபிளில் சொல்லப்பட்ட
ஆண்டவரின்
வார்த்தைகளை எதிர்த்து
எவர் ஒருவர்
கருத்து கூறினாலும் ;

அவர் கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கும் ;
கிறிஸ்தவர்களுக்கும் ;
எதிரியாகவே
கருதப்படுவார் ;
நம்பிக்கை
துரோகியாகவே
கருதப்படுவார் ;

ஜியார்டானோ புருனோ:
“ தயவு செய்து என்னை
மீண்டும் என்னுடைய
சிறை அறைக்கு
அழைத்து செல்லுங்கள்! “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------   08-02-2019
/////////////////////////////////////////////////////////////