March 18, 2021

ARAVAN KALABALI BOOK LAUNCHING-3

 

பதிவு-3

அரவான் களப்பலி

 

44 வது புத்தகக்

காட்சியில்

அரவான் களப்பலி

என்ற தலைப்பைக்

கொண்ட

எண்.471 வது கடையில்

நான் எழுதிய

முதல் புத்தகம்

மற்றும்

ஒரே புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

மக்களின்

பார்வைக்காகவும்

விற்பனைக்காகவும்

காட்சி படுத்த

முடிவு செய்தேன்

 

பலர் என்னிடம்

சொன்னார்கள்

ஒரு புத்தகத்திற்கு

எதற்கு இவ்வளவு

பணம் செலவு

செய்து கடை

வைக்க வேண்டும்

இவ்வளவு செலவு

செய்து தான்

புத்தகக் காட்சியில்

கடை வைக்க

வேண்டுமா

இவ்வளவு செலவு

தேவையா என்று

கேட்டனர் சிலர்

 

அது மட்டுமல்ல

அந்த புத்தக

காட்சியில் உள்ள  

பதிப்பகங்களில்

நம்முடைய

புத்தகத்தை

அளித்து அந்த

பதிப்பகத்தாரையே

நம்முடைய

புத்தகங்களை

விற்பனை செய்து

கொடுக்க சொல்லலாம்

என்றனர்

என்னைச் சுற்றி

இருந்த

நிறைய பேர்

புத்தகக் காட்சியில்

கடை எடுக்க

வேண்டாம்

எதற்கு வீண்

செலவு என்றார்கள்

 

,இவைகள் எதையும்

நான் கவனத்தில்

கொள்ளாமல்- நான்

கடை எடுத்தேன்

நான் கடை

எடுத்ததற்கான

நோக்கத்தை

அவர்களிடம்

சொன்னேன்

அந்த காரணம்

இது தான்

 

"நான் புத்தகக்

காட்சியில்

புத்தகத்தை

வைத்தற்கான

முக்கியமான

நோக்கம்

புத்தகத்தை

விற்பனை

செய்வதற்காக

அல்ல

அது என்னுடைய

முக்கியமான

நோக்கமும்

இல்லை - நான்

புத்தக காட்சியில்

புத்தகத்தை

வைத்தது

பாலகங்காதரன்

என்ற ஒரு

எழுத்தாளர்

எழுத்துலகுக்கு

புதிதாக வந்து

இருக்கிறார் - அவர்

தன்னுடைய

முதல் புத்தகமாக

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

எழுதி இருக்கிறார்

வேறு ஒரு

துறையில் இருந்தவர்

முதன் முறையாக

எழுத்தாளராக

உருவாகி எழுத்துத்

துறைக்கு வந்து

இருக்கிறார்

என்பதை இந்த

உலகம் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காகத் தான் "

 

என்றேன்.

 

நான் சொன்னது

போலவே

புத்தகக் காட்சிக்கு

வந்தவர்கள்

என்னை சந்தித்தனர்

என்னுடன்

கலந்துரையாடினர்

நான் எழுதிய

புத்தகத்தைப் பற்றி

மதிப்பீடு செய்தனர்

என்னை

எழுத்தாளராக மதித்து

வந்திருந்தவர்களில்

பெரும்பாலானவர்கள்

என்னுடன்

புகைப்படம் எடுக்க

விருப்பம் கொண்டனர்

அவர்களுடைய

விருப்பத்திற்கு

இசைந்த நான்

அவர்களுடன் இணைந்து

புகைப்படம் எடுத்துக்

கொண்டேன் - மேலும்

என்னுடைய புத்தகத்தில்

கை‘யொப்பம் போட்டுத்

கொடுக்க வேண்டும்

என்று கேட்டுக்

கொண்டதால்

புத்தகத்தில்

கையெழுத்து போட்டுக்

கொடுத்தேன்.

 

மிக உயர்ந்த

நிலையில் இருக்கும்

எழுத்தாளர்கள்

பேச்சாளர்கள்

சமூக அங்கீகாரம்

பெற்றவர்கள்

உயர் அலுவலர்கள்

படித்தவர்கள்

பாமர மக்கள்

உட்பட பல்வேறு

நிலையில் உள்ளவர்கள்

அனைவரும் என்னை

சந்தித்த போது - நான்

அவர்களுடன்

புகைப்படம் எடுப்பதில்

பெருமை அடைந்தேன்

 

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

-----18-03-2021

////////////////////////////////////

No comments:

Post a Comment