April 24, 2021

பதிவு-4-சினமென்னும்- -திருக்குறள்

 

பதிவு-4-சினமென்னும்-

-திருக்குறள்

 

அறிவுடன்

வெளிப்படும் கோபம்

மேனேஜர் செய்த

தவறை சுட்டிக்

காட்ட வேண்டும்

என்பதற்காக

முதலாளிக்கு ஏற்பட்டது

 

மேனேஜருக்கு

கொடுக்கப்பட்ட

தண்டனை மேனேஜர்

செய்த தவறை

அவர் உணர

வேண்டும் என்ற

காரணத்திற்காகவும் ;

இனி இது போல்

ஒரு தவறை மேனேஜர்

செய்யக் கூடாது

என்பதற்காகவும் ;

மேனேஜர் தன்னுடைய

தவறை உணர்ந்து

திருத்திக் கொள்ள

வேண்டும்

என்பதற்காகவும்

கொடுக்கப்பட்டது.

 

 

இரண்டு :

அறிவின்றி

வெளிப்படும் கோபம்

 

அறிவின்றி

வெளிப்படும் கோபம்

ஆபத்தானது ;

அபாயகரமானது ;

பிரிவுகளை

ஏற்படுத்தக் கூடியது ;

மன உளைச்சல்களை

ஏற்படுத்தக் கூடியது ;

மிகப்பெரும்

பாதிப்புகளை

ஏற்படுத்தக் கூடியது ;

விரும்பத்தகாத

விளைவுகளை

ஏற்படுத்தக் கூடியது ;

அறிவின்றி

வெளிப்படும் கோபத்தில்

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துபவருக்கே

எது சரி ?

எது தவறு ?

என்று தெரியாது.

 

பாதிக்கப்பட்டவருக்கு

நான் தான்

பாதிக்கப்பட்டேன்

என்பதும்

தவறு செய்தவருக்கு

நான்தான்

தவறு செய்தேன்

என்பதும் தெரியாது.

 

நிகழ்வு தவறாக

நடந்ததற்குக் காரணம்

நான் தான்

காரணம் என்பதையும்

தவறு செய்தது

நான் தான்

என்பதையும்

யாரும் ஒத்துக்

கொள்ளாமல்

நிகழ்வில்

நான் தான்

பாதிக்கப்பட்டேன் என்று

நிகழ்வில்

சம்பந்தப்பட்டவர்கள்

அனைவரும்

சொல்லும்

காரணத்தினால்

நிகழ்வில்

சம்பந்தப்பட்டவர்களில்

பாதிக்கப்பட்டவர் யார்

தவறு செய்தவர் யார்

என்பது

கண்டுபிடிப்பது கடினம்

 

ஒரு நிகழ்வுடன்

பல்வேறு நிகழ்வுகள்

தொடர்பு கொண்டு

வெளிப்படும்

 

ஒரு நிகழ்வின்

தவறுக்கு காரணமாகி

தவறு செய்தவர் யார்

அந்த நிகழ்வால்

பாதிக்கப்பட்டவர் யார்

என்பதை

அந்த நிகழ்வில்

சம்பந்தப்பட்டவர்கள்

யாரும்

ஒத்துக் கொள்ளாததால்

ஒருவர் மீது

ஒருவர் பகை

உணர்ச்சி கொண்டு

கோபம் கொள்வர்

 

பாதிக்கப்பட்டவர்

யார் என்பது

தெரியாமல்

தவறு செய்தவர் யார்

என்பது தெரியாமல்

இருவருமே

பாதிக்கப்பட்டவர்

என்று தங்களை

சொல்லிக் கொண்டு

சண்டையிடுவதால்

வெளிப்படும் கோபம்

அறிவின்றி வெளிப்படும்

கோபம் எனப்படும்.

 

கோபம் என்பது

உள்ளே வந்தவுடன்

அறிவு என்பது

வெளியே சென்று விடும்

எனவே அறிவின்றி

கோபம்

வெளிப்படும் போது

கோபம் மட்டுமே

வெளிப்படும்

அறிவு வெளிப்படாது

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment