July 12, 2021

பதிவு-2-உலகத்தார்- திருக்குறள்

 

பதிவு-2-

உலகத்தார்-

திருக்குறள்-

 

நாம் எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

செய்யக்கூடிய

அந்தச் செயல்

நல்லவிதமாக

முடியும் என்பதை

நம்மைச் சுற்றி

நடைபெறும்

செயல்களில் உள்ள

நல்ல குறியீடுகளின்

மூலம் நமக்கு

தெரியப்படுத்தும்

சகுனங்கள்

சுப சகுனங்கள்

எனப்படும்.

 

சுப சகுனங்களாக

வீணை, புல்லாங்குழல்,

மேளம், சங்கு,

பட்டத்து யானை

அல்லது

கோயில் யானை

இவைகளைப்

பார்ப்பதும்,

இவைகளின்

ஒலிகளைக் கேட்பதும்

சிறந்த

நற்சகுனங்களாக

கூறப்படுகிறது.

 

மேலும்,

அழகிய பெண்கள்,

நாட்டியப் பெண்கள்,

தயிர்,

இரட்டை பிராமணர்கள்,

மஞ்சள் கலந்த அரிசி

(அட்சதை) கரும்பு,

அருகம்புல்,

நீர் நிரம்பிய குடம்,

பூக்கள், மாலைகள்,

கன்னிப் பெண்கள்,

கருடன், ஆலயமணி ஓசை,

விளக்கு, தாமரைப்பூ,

நாய் தன் உடலை

சிலிர்ப்பது,

பிணம் எதிரே வருவது,

பசு மாடுகள்

இவைகளைக் காண்பது

சுப சகுனமாகும்

 

நாம் எந்த ஒரு

செயலைச் செய்யும்

போதும்

செய்யக்கூடிய

அந்தச் செயல்

கெட்டவிதமாக

முடியும் என்பதை

நம்மைச் சுற்றி

நடைபெறும்

செயல்களில் உள்ள

கெட்ட குறியீடுகளின்

மூலம் நமக்கு

தெரியப்படுத்தும்

சகுனங்கள்

அசுப சகுனங்கள்

எனப்படும்

 

அசுப சகுனங்களாக

அணையும் விளக்கு,

தண்ணீர் பாத்திரம்

சாய்ந்து நீர்

வெளியேறுவது,

உடுத்திய ஆடை

கிழிவது, .

செருப்பு அறுந்து போதல்,

அமங்கல வார்த்தை,

ஒற்றைத் தும்மல்,

சத்தமான வார்த்தைகள்,

வீட்டில் மரம் முறிதல்,

பல்லி இடப்புறம்

கத்துவது,

பன்றி, பாம்பு,

குதிரையைக் காண்பது,

சத்தமிடல்,

எண்ணெய்க்குடம்,

விளக்கு மாற்றை

கையில் வைத்திருப்பது,

தன் நட்சத்திரத்திற்கு

உரிய பட்சி

இடமிருந்து

வலமாகச் செல்வது,

விருட்சம் சாய்வது,

மிருகம் இறந்து

விட்டதாகக் கேட்பது,

எருமை மாடு

தென்படுவது ஆகியவை

அசுப சகுனங்களாக

கருதப்படுகின்றன.

 

பறவைகள்

கூட்டமாகப் பறந்தால்

சுப சகுனமாகவும்,

அவை

கத்திக் கொண்டே

பறந்தால்

அபசகுனமாகவும்

ஆகிறது

 

இரண்டு

நமக்கு துன்பம்

வரப்போவதை

முன்கூட்டியே நமக்கு

தெரியப்படுத்தும்

வேலையைச்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்,

 

வரப்போகும்

துன்பம் நம்மைப்

பாதிக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

நம்மைப் பாதுகாக்கும்

வேலையையும்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்,

நமக்கு வரக்கூடிய

துன்பத்திலிருந்து

நம்மைப் பாதுகாக்கும்

பணியைச்

சகுனங்கள் செய்து

கொண்டிருக்கும் போது

நாமும், நம்மைச்

சுற்றியுள்ளவர்களும்

வெளிப்படுத்தும்

வார்த்தைகள்

சகுனங்கள்

நம்மை எப்படி

பாதுகாக்கின்றன

நம்மைப்

பாதுகாப்பதற்காக

எத்தகைய

வார்த்தைகளை

எல்லாம்

சகுனங்கள்

பயன்படுத்துகின்றன

என்பதையும்

 

யார் ஒருவர்

தெரிந்து

கொள்கிறாரோ

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment