January 15, 2023

ஜபம்-பதிவு-914- மரணமற்ற அஸ்வத்தாமன்-46 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-914-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-46

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரியோதனன் :

விருப்பம் இல்லை

என்று நான்

சொல்ல வரவில்லை

குருநாதா

 

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்க்கலையை

கற்றுக் கொள்கிறேன்

 

ஆனால்

கதாயுதத்தில்

மட்டும்

திறமைசாலியாக

இருக்கவே

விரும்புகிறேன்

என்று தான்

நான் சொல்ல

வருகிறேன்

 

துரோணர் :

ஏன் அவ்வாறு

சொல்கிறாய்

துரியோதனா

ஏன் உனக்கு

கதாயுதம்

பிடித்திருக்கிறது

 

அந்தக்

காரணங்களை

இங்குள்ளவர்கள்

அனைவரும்

தெரிந்து

கொள்ளட்டும்

 

சொல்

துரியோதனா

 

கதாயுதம்

ஏன் உனக்குப்

பிடித்திருக்கிறது

என்பதற்கான

காரணத்தை

இங்குள்ளவர்கள்

அனைவரும்

தெரிந்து

கொள்ளட்டும்

 

அனைவரும்

தெரிந்து

கொள்ளும்படிச்

சொல்

 

துரியோதனன் :

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும்

எந்த ஒரு செயலும்

கடினமானது தான்

 

சிந்திப்பதும்

செயல்படுவதும்

தனித்தனியாக

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறும்

எந்த ஒரு

செயலும்

கடினமானது

கிடையாது

 

துரோணர் :

கதாயுதத்தைப்

பற்றி சொல்லாமல்

வேறு ஏதோ

ஒன்றைப் பற்றிச்

சொல்கிறாய்

 

துரியோதனன் :

கதாயுதத்தைப்

பற்றித் தான்

சொல்கிறேன்

 

துரோணர் :

புரியும்

படிச் சொல்

அனைவரும்

புரிந்து

கொள்ளும்படிச்

சொல்

 

துரியோதனன் :

சொல்கிறேன்

அனைவரும்

புரிந்து

கொள்ளும்படியே

சொல்கிறேன்

 

கதாயுதப் போர்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும் போர்

அதனால்

கதாயுதப் போர்

கடினமானப் போர்

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறும்

போர்

அதனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போர்

கடினமான

போர்

கிடையாது

 

கதாயுதப் போர்

களத்தில் இறங்கி

நேருக்கு நேராக

நின்று

ஒருவருக்கொருவர்

உடலைத் தாக்கிக்

கொண்டு போர்

செய்யும் போது

எதிரி உடலில்

எப்படி அடிப்பான்

எந்த இடத்தில்

அடிப்பான்

எவ்வளவு வேகத்தில்

அடிப்பான்

என்பதைச் சிந்தித்து
அதைத் தடுத்து

திருப்பி எப்படி

அடிக்க வேண்டுமோ

எந்த இடத்தில்

அடிக்க வேண்டுமோ

எந்த வேகத்தில்

அடிக்க வேண்டுமோ

என்பதை முடிவு செய்து

திருப்பி அடிக்கும்

செயலை

கதாயுதப்

போரில்

செய்வதால்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

கதாயுதப்போரில்

ஒரே சமயத்தில்

நடைபெறுவதால்

கதாயுதப்போர்

கடினமானப் போர்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment