May 01, 2020

பரம்பொருள்-பதிவு-219


              ஜபம்-பதிவு-467
             (பரம்பொருள்-219)

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருந்தவர் யார்
என்பதை நீ தான்
சொல்ல வேண்டும் “

“அனைவரும்
உன்னுடைய பதிலுக்காக
காத்திருக்கிறார்கள் “

“கேள்விக்கான பதில்
என்ன என்று தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவே
உன்னைத் தேடி
பஞ்ச பாண்டவர்கள்
இங்கு வந்திருக்கிறார்கள் “

“பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருந்தவர்கள் யார்
என்பதை அறிந்து
கொள்வதற்காகவே
உன்னைத் தேடி
வந்திருக்கிறார்கள் “

அரவான் :
“நீங்கள் கேட்கும்
இந்த கேள்வி
மிகவும்
சிக்கலான கேள்வி  

“நான் இந்த
கேள்விக்கு பதில்
சொல்லும் பட்சத்தில்
என்னுடைய பதிலை
ஏற்றுக் கொள்ளாமல்
சிலருக்கு 
மன உளைச்சல்
ஏற்படக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது “

“அந்த மன உளைச்சலே
கோபமாக மாறி
என் மேல் திரும்பும்
நிலையும் இருக்கிறது “

“நான் பதில்
சொல்வதால்
மற்றவர்கள் என் மீது
கோபப்படக்கூடிய
நிலை உருவாகுமே
தவிர நல்ல
விளைவுகள்
எதுவும் ஏற்படாது”

“தவறான நிகழ்வுகள்
எதுவும் நடைபெறாமல்
இருக்க வேண்டுமென்றால்
நான் பதில் சொல்லாமல்
இருந்து தான்
ஆக வேண்டும்”

“இவை எல்லாவற்றையும்
மீறி நீங்கள் கேட்கும்
கேள்விக்கு நான்
சொல்லித் தான் ஆக
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்களா?”

கிருஷ்ணன் :
“எந்தவிதமான தவறான
நிகழ்வுகளும்
நடைபெறாது அரவான்”

“உண்மையை ஏற்றுக்
கொள்ளக்கூடிய
மனப்பக்குவம் யாருக்கு
இருக்கிறதோ அவர்கள்
நீ சொல்லப் போகும்
உண்மையை
ஏற்றுக் கொள்வார்கள்”

“உண்மையை ஏற்றுக்
கொள்ளக்கூடிய
மனப்பக்குவம்
இல்லாதவர்கள் மட்டும்
தான் உன் மீது
கோபம் கொள்வார்கள் “

“உண்மையை ஏற்றுக்
கொள்ளக்கூடியவர்கள்
யாரும் உன் மேல்
கோபம் கொள்ள
மாட்டார்கள் “

“ஆகவே நீ எதைப்
பற்றியும் கவலைப்
படாமல் நடந்த
நிகழ்வில் நீ தெரிந்து
கொண்ட உண்மைகளை
அனைவரும் அறிந்து
கொள்வதற்காக
சொல்ல வேண்டும்”
 
அரவான் :
“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
யார் ஒருவர்
கைகளால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
வாளால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
ஈட்டியால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
கதாயுதத்தால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
வில் அம்பு
கொண்டு எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
எந்த ஒரு ஆயுதத்தைப்
பயன் படுத்தி எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
இவைகள் அனைத்தையும்
செய்து முடித்தது
பரமாத்மா
கிருஷ்ணனின் சக்கரம் ;
மற்றும்
சிந்திய இரத்தத்தைச்
சேகரித்தது பரமாத்மா
கிருஷ்ணனின் சங்கு
ஆகிய இரண்டு மட்டுமே “

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
என்னுடைய கண்ணுக்கு
தெரிந்தது பரமாத்மா
கிருஷ்ணனின் சக்கரம்
மற்றும் சங்கு ஆகிய
இரண்டு மட்டுமே”

“வேறு எந்த
ஒன்றையும் நான்
குருஷேத்திரப்
போரில் காணவில்லை “

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு
முழுக்காரணமாக
இருந்தது
கிருஷ்ணன் மட்டுமே”

“கிருஷ்ணன்
இல்லாவிட்டால்
பஞ்ச பாண்வர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்றே
இருக்க முடியாது “

“என்னுடைய
முடிவான கருத்தும்
இது தான் ;
இறுதியான கருத்தும்
இது தான் ;
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறுவதற்கு
காரணமாக இருந்தது
பரமாத்மா
கிருஷ்ணன் மட்டுமே
பரமாத்மா
கிருஷ்ணன் மட்டுமே”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment