June 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-13


             ஜபம்-பதிவு-505
         (அறிய வேண்டியவை-13)

“சாபம் என்பது
ஒருவருடைய
கர்மவினையை
கழிப்பதற்காக
மற்றொருவரால்
கொடுக்கப்படுவது ஆகும்”

“பத்தினிகள்;
தவத்தில்
உயர்ந்தவர்கள்;
நல்லவர்கள் ;
உண்மையே பேசி
வாழ்பவர்கள் ;
வாழ்க்கையில்
நல்லவற்றை
செய்பவர்கள் ;
கெட்டவற்றை
நினைக்காதவர்கள் ;
துன்பம் கண்டு
ஓடி வந்து
உதவி செய்பவர்கள் ;
ஆகியோரால்
கொடுக்கும் சாபம்
மட்டும் தான்
பலிக்கும்
என்று இல்லை “

“சாபம் என்பது
உயர்ந்தவர்; தாழ்ந்தவர்;
நல்லவர்; கெட்டவர்;
பத்தினி; விலைமகள்;
பிறர் துன்பம் கண்டு
உதவி செய்பவர்கள் ;
பிறர் துன்பம் கண்டு
உதவி செய்யாதவர்கள்;
வாழ்க்கையில்
நல்லவற்றை
செய்பவர்கள் ;
வாழ்க்கையில்
நல்லவற்றை
செய்யாதவர்கள் ;
கெட்டவற்றை
நினைப்பவர்கள் ;
கெட்டவற்றை
நினைக்காதவ்ர்கள் ;
துன்பம் கண்டு
ஓடி வந்து
உதவி செய்பவர்கள்;
துன்பம் கண்டு
ஓடி வந்து உதவி
செய்யாதவர்கள் என்று
யார் கொடுத்தாலும்
சாபம் பலிக்கும் “

“சாபம்
கொடுப்பவருடைய
தன்மையைப்
பொறுத்து
சாபத்தின்
விளைவானது
இடம் காலம் நேரம்
சூழ்நிலை
ஆகியவற்றைப்
பொறுத்து
வெளிப்படும்”

“இந்த உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டால்
சாபம் கொடுப்பதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று :
“கெட்டவை நடக்க
வேண்டும் என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம் “

இரண்டு :
“நல்லவை நடக்க
வேண்டும் என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம் “

“ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
பாவப்பதிவுகளை
அனுபவிக்க
வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
கெட்டவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
புண்ணிய பதிவுகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
நல்லவவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

ஒன்று :
“கெட்டவை நடக்க
வேண்டும் என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“நீயும் உன்னுடைய
குடும்பமும் உன்னைச்
சுற்றியுள்ள சொந்தமும்
நன்றாக
இருக்க வேண்டும்
என்பதற்காக எனக்கு
கிடைக்க வேண்டிய
சொத்தை ஏமாற்றி
அபகரித்துக் கொண்டு
என்னை
கஷ்டப்பட வைத்தாய் ;
அத்துடன் நிறுத்தாமல்
என்னுடைய
பிள்ளைகளைகளையும்
ஏமாற்றி
அவர்களுக்கு
சேரவேண்டிய சொத்தை
அபகரித்துக் கொண்டு
அவர்களையும்
கஷ்டப்பட வைத்தாய் ;”

“எப்படி நானும்
என்னுடைய பிள்ளைகளும்
மன வேதனையால்
கஷ்டப்பட்டோமோ ?
அதைப்போல நீயும்
உன்னுடைய
பிள்ளைகளும்
கஷ்டப்படுவீர்கள் என்று
கொடுக்கப்படும் சாபம்
ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
பாவப்பதிவுகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
கெட்டவைகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம் “

இரண்டு :
“நல்லவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“ஒருநாள் இரவு
இந்திரன் சித்திசேனனை
அழைத்தான்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment