April 13, 2020

பரம்பொருள்-பதிவு-195


             ஜபம்-பதிவு-443
           (பரம்பொருள்-195)

கிருஷ்ணன் :
“அப்படி என்றால்
நான் சொல்லப்
போகிறவைகளை
நன்றாகக்
கேட்டு
மனதில்
நிறுத்திக் கொள்
அரவான் “

“முதலில்
முட்டி போட்டுக்
கொண்டு
இருப்பதிலிருந்து
எழுந்திரு ! “

“நீ முட்டி
போட்டு
தலையை
காட்டும் போது
உன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
தகுதி
படைத்தவர்கள்
இந்த
உலகத்தில்
யாரும் இல்லை
முதலில்
எழுந்திரு !
எழுந்து
நேராக நில் ! ! “

“காளிதேவியைப்
பார்த்தபடி நில் ! “

“வேறு ஒருவர்
நம்முடைய
தலையை
வெட்டும் போது
அதற்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதும்
அரவான் “

“ஆனால்
தன்னுடைய
தலையை தானே
வெட்டிக்
கொள்வதற்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதாது “

“இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
தைரியம்
இருக்க
வேண்டும் ;
இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
மன உறுதி
இருக்க
வேண்டும் ;  
இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
வீரம் இருக்க
வேண்டும் ; “

“ஆமாம் !
வேறு ஒருவர்
நம்முடைய
தலையை
வெட்டும் போது
நமக்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதும் ;
ஆனால்
நம்முடைய
தலையை
நாமே
வெட்டிக்
கொள்வதற்கு
தைரியம் ;
மன உறுதி ;
வீரம் ;
ஆகிய
மூன்றுமே
ஒன்றாக
இருக்க
வேண்டும் “

“இந்த மூன்றும்
ஒன்றாக
இருந்தால்
மட்டுமே
தன்னுடைய
தலையை தானே
வெட்டிக்
கொள்ள முடியும் “

“இத்தகைய
மூன்று
தன்மைகளையும்
ஒன்றாகக்
கொண்டவன்
தான் நீ “

“அதனால் தான்
உன்னை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
காலம் உன்னை
தேர்ந்தெடுத்து
இருக்கிறது “

“வாளை எடு
அரவான்  !
வாளை எடு ! !

(அரவான்
சென்று
வாளை
எடுக்கிறான்)

“முதலில்
காளி தேவியின்
உருவத்தை
நெற்றி
பொட்டிற்கு
கொண்டு வந்து
அங்கு
காளிதேவியை
பிரதிஷ்டை
செய்து
மனதில்
காளிதேவியின்
மந்திரத்தை
தொடர்ந்து
உச்சாடனம்
செய்து
கொண்டே இரு”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment