July 26, 2022

ஜபம்-பதிவு-815 (சாவேயில்லாத சிகண்டி-149)

 ஜபம்-பதிவு-815

(சாவேயில்லாத

சிகண்டி-149)

 

(பாஞ்சால நாட்டின்

அரண்மனைக்கு

வந்து சேர்ந்த

சிகண்டி

தனது தந்தை

துருபதனை சந்திக்க

சென்று அவனை

வணங்கினான்.)

 

சிகண்டி :

வணங்குகிறேன்

தந்தையே

 

துருபதன் :

சொல்லாமல் எங்கே

சென்றாய் சிகண்டினி

 

உன்னைக் காணாததால்

பல இடங்களிலும்

உன்னைத் தேடினோம்

 

சிகண்டி :

இப்போது

நான் சிகண்டினி

இல்லை

சிகண்டி

 

துருபதன் :

சிவன் சொன்னது

நடந்து விட்டதா

 

சிகண்டி :

சிவன் சொன்ன

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைப் புரிந்து

கொண்டேன்

 

அதற்கான

வழிமுறைகளைப்

பின்பற்றினேன்

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறினேன்

 

இப்போது உங்கள்

முன்னால்

சிகண்டியாக நின்று

கொண்டிருக்கிறேன்

 

துருபதன் :

நீ இல்லாத

சமயத்தில்

உன்னுடைய

வாழ்க்கையில்

விரும்பத்தகாத நிகழ்ச்சிகள்

எல்லாம் நடந்து விட்டது

 

சிகண்டி :

என்னுடைய வாழ்க்கையில்

விரும்பத்தக்க நிகழ்ச்சிகள்

நடந்தால் தான்

ஆச்சரியப்பட வேண்டும்

 

விரும்பத்தகாத

நிகழ்ச்சிகள் நடந்தால்

ஆச்சரியப்பட வேண்டிய

அவசியம் இல்லை

 

துருபதன் :

உன்னுடைய மனைவி

அவருடைய தந்தையான

ஹிரண்யவர்மனிடம்

சென்று விட்டார்

 

மகளின் விஷயத்தைக்

கேள்விப்பட்டு

ஹிரண்யவர்மன்

நம் மேல் மிகுந்த

கோபத்தில் இருக்கிறான்

 

உன்னைக்

கொல்லப் போவதாகச்

சொல்லி

இருக்கிறான்

 

தன்னுடைய மகளின்

வாழ்க்கை

பாதிக்கப்பட்டதற்கு

காரணமாக இருந்தவர்கள்

யாரையும் உயிரோடு

விடப்போவதில்லை என்று

சொல்லி இருக்கிறான்

 

நம் நாட்டில்

உள்ள ஒருவருக்கும்

இரக்கம்

காட்டப்போவதில்லை

அழித்து விடப்போவதாகச்

சொல்லி இருக்கிறான்

 

நம்முடைய

நாட்டின் மீது

படை எடுத்து

நாட்டை அழித்து

தன்னுடைய

கோபத்தைத் தணித்துக்

கொள்ளப் போவதாக

முடிவு எடுத்து

இருப்பதாக

நமக்குச்செய்திகள்

வந்திருக்கிறது

 

சிகண்டி :

இதைப் பற்றி எல்லாம்

கவலைப்பட்டுக்

கொண்டிருப்பதற்கு

எனக்கு நேரமில்லை

 

இதற்காக நேரத்தை

செலவிடவும்

நான் விரும்பவில்லை

 

நான் செய்ய

வேண்டிய கடமைகள்

எனக்கு

நிறைய இருக்கிறது

அதற்காக நான்

நேரத்தைச்

செலவிட வேண்டும்

 

என்னுடைய பிறப்பின்

ரகசியம் தெரிந்து விட்டது

 

துருபதன் :

எப்படி தெரிந்தது

 

சிகண்டி :

அரண்மனை

வாயிலில் மாட்டி

வைக்கப்பட்டிருந்த

மாலையை

என்னுடைய கழுத்தில்

போட்டதும் எனக்கு

சில காட்சிகள்

தெரிந்தது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment