July 26, 2022

ஜபம்-பதிவு-816 (சாவேயில்லாத சிகண்டி-150)

 ஜபம்-பதிவு-816

(சாவேயில்லாத

சிகண்டி-150)

 

அந்த காட்சிகள்

காண முடியாத

வகையில்

தெளிவில்லாமல்

இருந்தது

 

அர்த்தத்தைப்

புரிந்து கொள்ள

முடியாமல்

இருந்தது

 

எதற்காக

வருகிறது என்று

தெரிந்து கொள்ள

முடியாமல்

இருந்தது

 

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக  

மறுபிறப்பு எடுத்த போது

எனக்கு அனைத்தும்

தெரிந்து விட்டது

 

பீஷ்மனைக்

கொல்வதற்காகவே

நான்

பிறந்திருக்கிறேன்

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

துருபதன் :

அரண்மனை

வாயிலில் மாட்டி

வைக்கப்பட்டிருந்த

மாலை

காணவில்லை

 

அதை எடுத்து

உன்னுடைய கழுத்தில்

போட்டுக் கொண்டு

நீ சென்று விட்டாய்

என்று தெரிந்ததும்

அடுத்து என்ன

நடக்கப் போகிறது

என்று யோசித்துக்

கொண்டிருந்தேன்

 

எது நடக்க

வேண்டுமோ அது

நடந்து இருக்கிறது

 

நல்லதே

நடந்து இருக்கிறது

 

இப்போது என்ன

செய்யப் போகிறாய்

 

சிகண்டி :

அஸ்தினாபுரம் செல்லப்

போகிறேன்

பீஷ்மனைக்

கொல்லப் போகிறேன்

 

துருபதன் :

உன்னுடைய மனைவி

பிரச்சினையே இன்னும்

முடியவில்லை

அதற்குள் எதற்காக

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

வேலையைச் செய்யக்

கிளம்புகிறாய்

 

முதலில் உன்னுடைய

மனைவியின்

பிரச்சினையை

தீர்ப்பதற்கான

வழியைப் பார்

 

பிறகு பீஷ்மனைக்

கொல்லும்

வேலையைப் பார்க்கலாம்

 

சிகண்டி :

பிரச்சினை என்பது

வாழ்க்கையில் வந்து

போகும் ஒரு விஷயம்

அன்றாடம் நடக்கும்

ஒரு விஷயம்

அவ்வளவு தான்

 

பிரச்சினை முடிந்த

பிறகு தான்

எந்த ஒரு

வேலையையும்

செய்ய வேண்டும்

என்றால் நம்மால்

எந்த ஒரு

வேலையையும்

செய்ய முடியாது

பிரச்சினைக்குள்ளேயே

சுற்றிக் கொண்டு இருக்க

வேண்டியது தான்

 

என்னுடைய

பிரச்சினை

முடிந்த பிறகு தான்

நான் எந்த ஒரு

வேலையையும்

செய்வேன் என்று

சொல்பவர்களால்

எந்த ஒரு

சாதனையையும்

செய்ய முடியாது

 

பிரச்சினையின் முடிவு

நல்லதாக இருக்கட்டும்

அல்லது

கெட்டதாக இருக்கட்டும்

 

பிரச்சினை முடியும்

போது முடியட்டும்

அல்லது

முடியாமல் இருக்கட்டும்

 

என்று பிரச்சினையைப்

பற்றிக் கவலைப்படாமல்

மற்ற

வேலைகளைச் செய்து

கொண்டிருப்பவர்களால்

மட்டுமே

சாதனைகள்

செய்ய முடியும்

வாழ்க்கையை

வாழ்க்கையாக

வாழ முடியும்

 

பிரச்சினையைப்

பற்றியே யோசித்துக்

கொண்டிருப்பவர்களாலும்

 

பிரச்சினையில் மூழ்கி

கவலைப் பட்டுக்

கொண்டிருப்பவர்களாலும்

 

பிரச்சினையைக்

கண்டு

பயப்படுகிறவர்களாலும்

 

பிரச்சினையை

எதிர்த்துப் போரடத்

தெரியாதவர்களாலும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

No comments:

Post a Comment