October 17, 2022

ஜபம்-பதிவு-869 மரணமற்ற அஸ்வத்தாமன்-1 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-869

மரணமற்ற

அஸ்வத்தாமன்-1

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(அக்னிவேஸ்யர்

ஆஸ்ரமம்,

துரோணருக்கும்,

துருபதனுக்கும்

இடையே தனிப்பட்ட

முறையில்

இருவருக்கும்

இடையே நடைபெற்ற

போட்டியில்

துரோணர் வெற்றி

பெற்றார்.)

 

துரோணர் :

வெற்றி

வெற்றி

வெற்றி

நான் வெற்றி

பெற்று விட்டேன்

 

துருபதன் :

வெற்றி

பெறுவதற்காகவே

நீ பிறந்திருக்கிறாய்

துரோணா

 

உன்னை வீழ்த்தி

வெற்றி பெறும்

திறமை படைத்தவர்

இந்த உலகத்தில்

இது வரை

பிறக்கவேயில்லை

 

துரோணர் :

வெற்றி பெற

வேண்டும் என்றால்

 

துருபதன் :

இனி பிறந்து தான்

வர வேண்டும்

 

துரோணர் :

ஏன் இப்படி

சொல்கிறாய்

 

துருபதன் :

உன்னிடமுள்ள

அளவிட முடியாத

திறமையினால்

வெற்றியை

உன்னுடையதாக்கிக்

கொண்டிருக்கிறாய்

 

வெற்றி உனக்கு

மட்டுமே

உரிமையுடையதாய்

இருக்கிறது

 

துரோணர் :

வெற்றி எனக்கு

மட்டுமே

உரிமையுடையது

இல்லை

 

மாறிக் கொண்டே

இருக்கும்

இந்த உலகத்தில்

எதுவுமே

நிரந்தரம் இல்லை

 

இன்று வெற்றி

பெறுபவர் நாளை

தோல்வியடையலாம்

இன்று

தோல்வியடைபவர்

நாளை

வெற்றி பெறலாம்

 

துருபதன் :

நம் இருவரிடையே

நடைபெற்ற

அனைத்து

போட்டிகளிலும்

நீ தானே

வெற்றி

பெற்று

இருக்கிறாய்

 

துரோணர் :

நான் வெற்றிகளை

எளிதாகப்

பெற்று விட்டேன்

என்று நினைத்தாயா

 

துருபதன் :

கஷ்டப்பட்டு

பெற்றேன்

என்கிறாயா

 

துரோணர் :

கஷ்டப்பட்டால்

வெற்றி பெற

முடியும் என்றால்

கஷ்டப்பட்டடவர்கள்

அனைவருமே வெற்றி

பெற்றிருக்க வேண்டுமே

 

ஏன் வெற்றி

பெறவில்லை

 

கஷ்டப்படுகிறவர்கள்

இன்னமும்

கஷ்டப்பட்டுக் கொண்டு

தானே இருக்கிறார்கள்

 

கஷ்டப்பட்டால்

வெற்றி பெற

முடியாது

 

துருபதன் :

வெற்றியை

எப்படித் தான்

பெறுவது

 

துரோணர் :

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

இந்த மூன்றும்

ஒன்றாக சேரும்

போது தான்

பெற முடியும்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment