October 17, 2022

ஜபம்-பதிவு-871 மரணமற்ற அஸ்வத்தாமன்-3 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-871

மரணமற்ற

அஸ்வத்தாமன்-3

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

எனவே வெற்றி

பெற வேண்டும்

என்றால்

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

ஆகிய

மூன்றும் தான்

ஒன்றாக சேர

வேண்டுமே ஒழிய

அனுபவம்

ஆர்வம்

உழைப்பு

ஆகிய மூன்றும்

ஒன்றாக

சேரக்கூடாது

 

துருபதன் :

அப்படி என்றால்

நான் வெற்றி

பெறவே முடியாதா

 

துரோணர் :

துருபதா

 

நீ பிறக்கும் போதே

அரச குலத்தில்

பிறந்தவன்

 

சுபபோகத்தில்

திளைத்தவன்

 

உன் முன்னால்

நின்று பேசவே

பயப்படுபவர்கள்

 

உன்னை எப்படி

இழிவு படுத்துவார்கள்

அவமானப் படுத்துவார்கள்

அசிங்கப்படுத்துவார்கள்

 

ஆனால்

நாளை நான்

உனக்கு

விரோதியாகலாம்

என்னால் ஏற்பட்ட

அவமானத்தைத்

துடைக்க வெறித்தனம்

உன் மனதில்

குடிபுகலாம்

என்னை

அழிப்பதற்காக

நீ உழைக்கலாம்

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

ஆகிய மூன்றும்

சேர்ந்து

நீ எடுத்த

காரியத்தில்

வெற்றியும்

பெறலாம்

 

துருபதன் :

துரோணா

நீ எனக்கு

நண்பன்

நீ எப்படி

எனக்கு

விரோதியாக

முடியும்

 

துரோணர் :

நண்பர்கள் தான்

விரோதியாகவும்

முடியும்

துரோகியாகவும்

முடியும்

 

நண்பர்கள்

இறுதிவரை

நண்பர்களாக

இருக்கவே

முடியாது

 

துருபதன் :

நீண்ட

நாட்கள்

நண்பர்களாக

இருப்பவர்கள்

 

துரோணர் :

ஏதோ ஒரு

காரணத்திற்காகத்

தான் நண்பர்களாக

இருப்பார்களே

ஒழிய

காரணமில்லாமல்

நண்பர்களாக

இருக்க

மாட்டார்கள்

 

துருபதன் :

எந்தக்

காரணமும்

இல்லாமல்

நட்பாக

இருப்பவர்கள்

 

துரோணர் :

கோடியில்

ஒரு நட்பாக

இருக்க முடியும்

 

துருபதன் :

ஏன் அந்த

நட்பு

நம்முடைய

நட்பாக

இருக்கக்

கூடாது

 

துரோணர் :

என்னால்

முடியும்

உன்னால்

முடியாது

 

துருபதன் :

ஏன் முடியாது

 

துரோணர் :

நான்

ஒரு ஏழை

பிராமணன்

நீயோ

அரச குலத்தில்

பிறந்தவன்

கல்வி

கற்பதற்காகத்

தான் நாம்

இருவரும்

இங்கே

ஒன்றாக

இருக்கிறோம்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment