October 17, 2022

ஜபம்-பதிவு-875 மரணமற்ற அஸ்வத்தாமன்-7 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-875

மரணமற்ற

அஸ்வத்தாமன்-7

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஷத்திரியர்

குலத்தில்

பிறக்கும்

ஷத்திரியர்கள்

மட்டுமே

அரசாள

வேண்டும்

 

துருபதன் :

சொல்வது

 

துரோணர் :

சாஸ்திரங்கள்

 

துருபதன் :

இந்த குலத்தில்

பிறந்தவர் தான்

இந்தத் தொழிலைச்

செய்ய வேண்டும்

இந்தக் குலத்தில்

பிறந்தவர்

இந்தத்

தொழிலைச்

செய்யக்கூடாது

என்று சொல்லும்

உரிமை

யாருக்கும்

கிடையாது

 

துரோணர் :

தகுதி

இருந்தால்

யாரும்

எந்தத்

தொழிலையும்

செய்யலாம்

என்கிறாயா

 

துருபதன் :

தகுதி

இருந்தால்

தான்

எந்த ஒரு

தொழிலையும்

யாரும்

செய்ய

முடியும்

என்றால்

யாராலும்

எந்த ஒரு

தொழிலையும்

செய்ய

முடியாது

 

ஒரு தொழிலை

செய்ய வேண்டும்

என்ற ஆர்வமும்

அதற்கேற்ற

உழைப்பை

அளிக்க

முடியும்

என்ற

மனதைரியமும்

யாருக்கு

இருக்கிறதோ

அவர் எந்த ஒரு

தொழிலையும்

செய்யலாம்

 

நான் அரசனான பின்

என் ராஜ்ஜியத்தில்

பாதியை

உனக்கு அளித்து

உன்னை அரசாள

வைக்கும் போது

யாராலும் எந்த

ஒரு தொழிலையும்

செய்ய முடியும்

என்பதை

இந்த உலகத்திற்கு

உணர்த்துவேன்

 

இந்த குலத்தில்

பிறந்தவர்

இந்தத் தொழிலைத்

தான் செய்ய

வேண்டும்

இந்தக் குலத்தில்

பிறந்தவர் இந்தத்

தொழிலைச்

செய்யக் கூடாது

என்ற நிலையை

மாற்றுவேன்

 

துரோணர் :

உன்னால் முடியுமா

 

துருபதன் :

மக்களுக்கு நன்மை

பயக்கும் சட்டங்கள்

அனைத்தும்

அரியணை

ஏறியவர்களால்

உருவாக்கப்பட்டு

நடைமுறைப்

படுத்தப்பட்டு

இருக்கிறது என்பது

உனக்குத் தெரியாதா

 

துரோணர் :

இந்த உலகம்

உன்னைச்

செய்ய விடுமா

 

துருபதன் :

உலகத்தைப் பார்த்து

பயப்படுபவனால்

எந்த ஒரு

செயலையும்

செய்ய முடியாது

உலகத்தைப் பார்த்து

பயப்படாதவர்களால்

தான் எந்த ஒரு

செயலையும்

செய்ய முடியும்

 

துரோணர் :

அரியணையிலிருந்து

உன்னை

இறக்கி விட்டால்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment